Thursday, September 2, 2010

பூமியில் சித்தர்கள் ஆட்சி துவங்குகிறது பாகம் 2

பூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது பாகம்2







நமது பூமியில் சித்தர்கள் ஆட்சி துவங்கும் முன்பு,சித்தர்கள் ஒவ்வொருவராக நீண்ட கால தவத்திலிருந்து எழுந்து வரத்துவங்கியுள்ளனர்.2004 ஆம் ஆண்டில் உண்டான மாபெரும் ஆழிப்பேரலை(சுனாமி) காகபுஜண்டர் சித்தரின் தவம் கலைந்து எழுந்ததற்கான ஆதாரமாக தினத்தந்தியில் ஒருவர் முழுப்பக்க கட்டுரையே எழுதினார்.அது உண்மைதான்.இந்தியா,மலேஷியா,சிங்கப்பூர்,இந்தோனோஷியா முதலான நாடுகளில் கடலோரங்களில் மனிதத் தன்மையற்ற குலைநடுங்கச் செய்யும் பல குற்றங்களின் விளைவாக கடலுக்குள் பல்லாயிரமாண்டுகளாக தவத்தில் ஈடுபட்டிருந்த காகபுஜண்டர் தவம் கலைந்து சீற்றத்துடன் எழுந்தார்.


இதே போல்,போகர் தவம் கலைந்து எழும்போது,சென்னை மாநகரம் கடல் அலைகளில் கடுமையாகப் பாதிக்கப்படும்.தென்னிந்தியா இரண்டு தீவுகளாக மாறும்.கடற்கரையிலிருந்து 5 கி.மீ.தூரம் 3 கி.மீ.உயரே எழும்பி நகரங்களை நாற்றக்கோலமாக்கிவிடும்.700 கி.மீ.தூரத்திற்கு புயல் வீசும்.புயல் என்பது பூமிக்குள் தவம் செய்யும் சித்தர்கள்,ரிஷிகள்,முனிவர்கள் மேலே வரும்போது பூமிப்பிரளயம்,அவர்களின் சக்தியின் வேகங்களைக் கொண்டுவரும்.யானையின் தும்பிக்கை போல் மழை பெய்யும்.புதுப்புது வியாதிகள் மனிதனைத் தாக்கும்.






கங்கையும் காவிரியும் இணைந்து பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் ஓடும்.பல கிராமங்கள்,நகரங்கள் அழியும்;விஞ்ஞானம் தலைகீழாக மாறும்.இந்த மாற்றங்கள் 2002 லிருந்து 2010க்குள் நடந்துவிடும். அணைக்கட்டுக்கள் உடைந்து மின்சாரம் அறவே இருக்காது;இயற்கையின் சீற்றத்தால் மக்கள்தொகை குறைந்துவிடும்.






நெருப்பில் அழிவு ஏற்படும்போது கொங்கணவர் தோன்றுவார்!120 வருடம் வரை கொங்கணவர் ஆட்சி ஏற்படும்.நேர்மையும் சத்தியமும் பெருகும்.தெய்வீகம் பெருகும்.காகித நோட்டுக்கள் இருக்காது.தங்க நாணயங்கள் புழக்கத்துக்கு வந்துவிடும்.பக்கம் 92






பல மேலைநாடுகள் அனைத்தும் பொசுங்கிப்போய்விடும்.அசுர சக்திகளை கல்கத்தா காளி அப்படியே அடக்கி மாய்த்து தின்றுவிடுவாள்.பிறகு இந்த பிரபஞ்சத்திலிருக்கக்கூடிய பிரத்திங்கரா தேவியினுடைய சக்தியானது ஞானசித்தருடைய ஆத்ம சக்தியின் ஒளிப்பிழம்பாகத் தெரியும்.இதனை கமலமுனி நாடி சூட்சுமமாக வெளிப்படுத்தியுள்ளது.ஏனென்றால்,வெளியுலகுக்கு இப்போது காட்டக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள்.பக்கம் 99























தகவல்:சித்தர்களின் மகிமை,பக்கம்24,எழுதியவர்:எனது மானசீக ஜோதிட குரு பி.எஸ்.பி.ஐயா அவர்கள்

கிடைக்குமிடம்:சாயி சங்கரம் பப்ளிகேஷன்ஸ்,11ஈ/38 பஜனைக்கோவில் முதல் தெரு,சூளைமேடு,சென்னை 94.தொலைபேசி:044-55182568,23614581.

5 comments:

  1. தாங்கள் சொல்லும் தகவலின் படி பார்த்தால் போகர் இப்போது பூமிக்கு வந்துவிட்டார் அபப்டித்தானே? அப்படியானால் சென்னை மா நகரம் இப்போது அழிந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லையே? இன்னும் மூன்று மாத கலாத்தில் நடந்துவிடும் என்று சொல்ல வருகிறீர்களா?> அப்படி நடக்காவிட்டால் இந்த செய்தி பொய்யாகிவிடுமா? விளக்கவும்.

    நன்றி

    ReplyDelete
  2. சகோதரா!இந்த செய்தி உங்களுக்கு வாசிக்கக் கிடைத்ததே ஒரு பெரும்பேறு.குறிக்கப்பட்டுள்ள கால இடைவெளி மாறலாம்.நாமெல்லாம் வெறும் பகுத்தறிவோடு மட்டுமே ஆன்மீகத்தை அணுகுகிறோம்.அதற்கு ஆழ்ந்த அன்பும்,மனித நேயமும் தேவை.

    ReplyDelete
  3. ஐயா நீங்க சொன்ன காலம் 2006 ஆனல் இப்ப 2010 உலக நாடுகளை இந்தியா ஆளும் காலம் வந்து விட்டது என்று சொல்ல்கிரீர்கள் ஆனல் எபவும் இல்லாத அளவு இந்தியா இப்பதான் காங்கிரஸ் ஆட்சியில் உலக நாடுகளை கட்டு பயந்து சீனா வின் அட்டகாசங்களுக்கு பத்திகொட சொல்லாம ஒரு எதிர்ப்பு கட்டாமலும் குட்டி நாடு இல்லங்கை koda நமளை மதிகததும் இந்த காலத்தில்தான் நடக்கிறது பின் எப்படி இந்தியா உலகை ஆட்சிசியகொண்டுவரபோகிறது.தமிழ் நாட்டில் இப்ப என்ன நடக்கிறது என்று தெரியுமா ஒட்டு காக இந்து மதத்தை எவளவு கேவலபடுதனுமோ அந்தாள்வு மீடிய வச்சு நம்ம சாமிய suntv ல கேவல படுத்துறங்க இதெலாம் நீங்க சொன்ன ஆளுமை யா இல்ல அவமான மன காலமா தவுசெய்து தப்பா எடுக்காம விளக்கம் சொல்லமுடியுமா

    ReplyDelete
  4. இதெற்கெல்லாம் ஆதாரம், எதில் இருந்து எடுத்தீர்கள்.? போய் வேற வேலைய பாரு. போய் சொல்லரதக்கும் ஒரு அளவு வேண்டாமா?

    ReplyDelete
  5. whats written here is true... there is no current these days.

    ReplyDelete