Monday, July 12, 2010

ஏன் ஜோதிடம் கற்க வேண்டும்?


ஏன் ஜோதிடம் கற்க வேண்டும்?

எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம் தமிழகத்திலிருந்து கேரளாவில் குடியேறியது.சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு அங்கே சென்றதில் சிறு அளவில் ஜவுளிக்கடை துவங்கினர்.ஐந்து சகோதரர்களின் ஒற்றுமையால் அந்த மாவட்டத்திலேயே மாபெரும் கடையாகவும்,ராசியான கடையென்றும் பெயரெடுத்தது.
ஐந்து சகோதரர்களின் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி,படித்து,வேலைக்குச் சென்று திருமணமும் செய்து செட்டில் ஆனார்கள்.அந்த குழந்தைகளின் திருமணத்துக்கு அந்த மாவட்ட ஆட்சியாளரே வந்திருந்து ஒரு நாள் முழுக்க கல்யாணவீட்டுக்காரராக இருந்தார்.அந்த ஜவுளிக்கடையில் ஒரு வருட விற்றுமுதல் கோடிகளாக இருந்தது.
ஆனால்,கடந்த ஆறுவருடங்களாக,அந்த ஜவுளிக்கடைக்கு இறங்குமுகம் ஆரம்பித்தது.ஒரு நாளுக்கு சுமார் ரூ.20,000/-நஷ்டம் ஏற்பட ஆரம்பித்தது.இந்நிலையில் என்னை ஜோதிடம் பார்க்க அழைத்திருந்தனர்.
யார் அந்தக் கடையின் தலைமைப் பொறுப்பில் இருந்தாரோ அவரது ஜாதகம் விசேஷமாக இருந்தது.அந்த விசேஷம்,கடந்த 20 ஆண்டுகளில் பலகோடிகளை லாபமாகக் கொடுத்தது.ஆம்! மிகவும் யோகம் நிறைந்த சுக்கிரசார மகாதிசையானது அவர்களை உச்சாணிக்கொம்பில் கொண்டு சென்றது.
அடுத்து வந்த திசைகள் வீழ்ச்சியை நோக்கி நகர்ந்தன.

தடுக்க முடியாத வீழ்ச்சியை நோக்கிச் செல்லத்துவங்கிய பின்னரே அவர்களின் ஜாதகத்தை நான் பார்க்கும் நிலை வந்தது.அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 40 பேர்கள்.அவர்களில் இரண்டு பேர் ஜோதிடராக இருந்திருக்கின்றனர்.அவர்களின் ஆலோசனையை கடையை நடத்தியவர்கள் மதிக்கவில்லை.பிறகென்ன? தமிழ்நாட்டிலிருந்து சென்ற எனது ஆலோசனையை அவர்களால் செயல் படுத்த முடியவில்லை.(எல்லாமே செலவில்லாத பரிகாரங்கள்!!!)
இப்போது சொல்லுகிறார்கள்.அன்றைக்கே எங்கள் (பிரசன்னம் ஜோதிடம் அறிந்த )மகனும்,(ஜோதிட) மகளும் சொன்னதை நாங்கள் கேட்கவில்லை;அதன் பலனை அனுபவிக்கிறோம்.
அவர்களுக்கு ஜாதகங்கள் பார்த்துவிட்டு வந்த எனக்கும் ஐந்துநாட்கள் உடல்நிலை சரியில்லாமல் போனது.இதுபோல்,ஏராளமான அனுபவங்களால் வீட்டுக்கு ஒரு ஜோதிடர் உருவாவது அவசியம் என்பதை உணர்ந்தேன்.

ஒரு நாளுக்கு இரண்டு மணி நேரம் வீதம்,ஒரு மாதத்துக்குள் ஜோதிடம் பற்றிய அடிப்படை அனைத்தையும் கற்றுத்தருகிறேன்.
(பெரும்பாலான ஜோதிடப் பயிற்சிப்பள்ளிகள் வாரம் ஒரு நாள் வீதம் மாதக்கணக்கில் ஜோதிடபாடத்தை நீடிப்பு செய்கின்றன.அதுவும் பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்புக்கள் வைக்கின்றன.அது அவர்களது செயல்முறை.நடைமுறையில் தினமும் கற்கும்போது விரைவில் பாடங்களும் நிறைவடையும்;விரைவாகவும்,சந்தேகமின்றியும் ஜோதிடம் கற்று முடித்து,ஜோதிடராகிவிடலாம்)

ஜோதிடத்தின் அடிப்படை முதல் ஜோதிடராவது வரை அதாகப்பட்டது ஜோதிடம் பலன் துல்லியமாகச் சொல்லுவது வரை பாடமாக நடத்திவருகிறேன்.

இத்துடன் பஞ்ச பட்சி சாஸ்திரம்(அடிப்படை)

சாமுத்ரிகா லட்சணம் எனப்படும் அங்க லாவண்ய சாஸ்திரம்(அடிப்படை)
எண்கணிதம் எனப்படும் நியூமராலஜி(அடிப்படை)
மனோதத்துவமும் ஜோதிடமும்,
இறைவனை அடைவது எப்படி?,
நமது ஜாதகத்தில் இருக்கும் தோஷங்களை நீக்குவது எப்படி?
நாம் படும் ஜன்ம பாவங்களை நீக்கி நிம்மதியாகவும் வசதியாகவும் வாழும் ரகசியம்,
எந்த மாதிரியான நவரத்தினக்கற்கள் அல்லது கல்லை அணிந்தால் வாழ்க்கை இன்னும் வசதியாக அமையும்?

காமரீதியான குடும்பக் குழப்பங்களை சரிசெய்யும் மனோதத்துவ செயல்பாடு,
யாரிடம் எப்படி நடந்துகொண்டால் நாம் நிம்மதியாகவும்,செல்வச் செழிப்போடும்,நம் சந்ததி சிறப்பாகவும் வாழும்?
இதுபோன்ற மனித வாழ்க்கைதத்துவங்கள் அனைத்தும் இலவசமாகவே ஜோதிடப்பயிற்சி வகுப்பில் கற்றுக்கொள்ளலாம்.
கற்றலை விட கேட்டலே நன்று என்ற புராதனப்பழமொழி நிஜம் என்பதை இங்கு வந்தப்பின்னரே உணருவீர்கள்.

ஜோதிடப் பயிற்சிக்கு மட்டும் கட்டணம் உண்டு.ஒரு மாதம் நீங்கள் ராஜபாளையம்(விருதுநகர் மாவட்டம்) வந்து தங்கிட வேண்டியிருக்கும்.
உங்களது வாழ்க்கைப் பாதையே இந்த ஒரு மாதத்திற்குப் பிறகு அடியோடு மாறிவிடும் என்பது மட்டும் நிஜம்.

ஜோதிடராக விருப்பமில்லை; ஜோதிடத்தை ஆதியோடு அந்தம் விடாமல் (அனைத்தும்) கற்றுக்கொள்ள வேண்டும் என விரும்புபவர்களும் வந்து கற்றுக்கொள்ளலாம்.

ஜோதிடராக மட்டுமே நான் ஜோதிடம் கற்றுக்கொள்ளவிரும்புகிறேன் என முடிவெடுத்துள்ளவர்களும் இங்கு வந்து கற்றுக்கொள்ளலாம்.
இங்கே வருபவர்கள் தங்குவதற்கு ஆகும் செலவு உங்கள் பொறுப்பு.எழுதப்படிக்கத் தெரிந்த யாரும் ஜோதிடம் கற்றுக்கொள்ளலாம்.
பெண்களுக்கு தனி வகுப்புகள் உண்டு.
மேலும் விபரமறிய aanmigakkadal@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு உங்களது பிறந்த ஜாதகம்,செல் எண்ணை அனுப்பி,விபரம் கேட்டுக் கொள்ளவும்.
அடுத்த பயிற்சி வகுப்புக்கள் 15.7.2010 அன்றும்,1.8.2010 அன்றும் துவங்குகின்றன.

1 comment:

  1. AYYA VANAKKAM NAN JOTHIDAM KARKA VIRUMBUKIREAN FEES ENNA ENRU SOLLAVUM

    ReplyDelete