Saturday, May 1, 2010

பிரபாகரன் பற்றி பழைய ஜோதிடக்கணிப்பு

ஜோதிடக் கணிப்பில் தமிழர்களின் துருவ நட்சத்திரம்

கி.பி.1980 களில் இலங்கைத்தமிழர்களின் துருவ நட்சத்திரம் மாவீரன் பிரபாகரன் பற்றி ஒரு ஜோதிடர் கணித்திருந்தார்.அவர், “பிரபாகரனின் முற்பகுதி வாழ்க்கை வெளிப்படையானது;பிற்பகுதி வாழ்க்கை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களைப் போல மர்மமானதாக இருக்கும்”என கணித்திருக்கிறார்.
எனது எண்ணம் என்னவெனில்,இது நிஜம் ஆகாமல்,மீண்டும் பிரபாகரன் அவர்கள் களத்துக்கு வரவேண்டும் என்பதே.பிரபாகரன் இலங்கையில் இல்லாததால்,நடக்கும் கொடூரங்களைக் கேள்விப்பட்டு சிங்கள மக்களே அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளனர்.
சீனாவின் உலக வல்லரசு பேராசை,ராஜபக்ஷேக்களின் அதிகாரப் பசி,இந்தியாவின் இந்திய அரசின் தொலைநோக்கற்ற மற்றும் சொதப்பலான அரசியல் ராஜதந்திரம்,அமெரிக்காவின் சுயநலம்,தமிழ்நாட்டு அரசியல்தலைவர்களின் தமிழ்ப்பாசத்திலும் தன்னலம் என ஆக்டோபஸ் போல எவருக்கும் இலங்கைத் தமிழினத்தின் வேதனைபற்றி சிறிதும் கவலையில்லை;எல்லோருக்கும் தத்தமது சுயநலம் தவிர வேறெதுவும் முக்கியமில்லை;
யாரையும் எவரையும் எப்போதும் நம்பாமல் தன்னை மட்டும் நம்பி வாழ்ந்து வந்த எனது மாவீரனே நீங்கள் உடனே தமிழ் ஈழத்தின் களத்துக்கு வருக!!
உலகின் அறிவுத்திறன் மிகுந்த இனம் யூத இனம்.அந்த யூத இனம் தனக்கென்று ஒரு நநடு இல்லாமல் 2000 ஆண்டுகளாக அவதிப்பட்டது.2000 ஆண்டுக்குப்பிறகு இந்த சின்னஞ்சிறு பூமியில் சுயச்சார்புடன் இஸ்ரேல் என்ற துடிப்புமிக்க தேசத்தை உருவாக்கியது.அதேபோல்,சுயபலத்துடன் கடந்த 30 ஆண்டுகளாக இலங்கைத்தமிழர்களின் மானம் காத்த மாவீரன் பிரபாகரன் அவர்களே! உலகின் மூத்த இனம் நம் தமிழ் இனத்திற்காக ஒரு நாட்டை உருவாக்கிட வருக!!!

அடுத்த வேளை சோத்துக்குக் கூட வழிசெய்யாத சிங்கள அரக்கர்களுக்கு பாடம் புகட்டிட வருக!!!
இலங்கையில் தமிழ்ப்பகுதியில் உருவாகும் சிங்கள ஆக்கிரமிப்பைத் தகர்த்தெறிய(தமிழர்கள் பகுதியை துடைத்தெறியத்துடிக்கும் இந்த அரக்கத்தனத்தை தடுக்க) உடனே வருக!!!

சீனாவுக்கும்,இந்தியாவுக்கும்,அமெரிக்காவுக்கும் பாடம் புகட்டிட வேண்டாம்; நமதுதமிழ் ரத்தங்களை சுயமரியாதையோடும்,கவுரவத்தோடும் வாழ வழி ஏற்படுத்திக்கொடுப்பதற்கு உடனே வருக!!!

இப்படிக்கு
கை.வீரமுனி,ஆன்மீகக்கடல்.

3 comments:

  1. nichayam varuvar enathu thalaivar. eezham pirappathatkaaka iyatkaiyaal uruvaakapaddavar. pirappu nokkam niraiveraamal maraiya maadaar.
    nichayam varuvaar.
    -Mullaimainthan

    ReplyDelete
  2. mr.veeramuni umathu thamil pasam unmayil ennai meisilirka vaikirathu.naan intha alavukku unnidam ethir parkavillai.ilangai thamilar patri nenjil vethanyum kannil eeramum enaku varum.intha tamilnattu payalkalukku tamilar patri thuli alavu koode ennam kidayaatha ena nonthu poirikiren pala murai.umathu intha blog vaasagangal enakku periya aaruthal nijamagave. thodarga ymathu intha punitha pani.

    ReplyDelete
  3. கி.பி.1980 களின் ஆரம்பத்தில் இலங்கையில் நம் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் சிங்கள ரவுடிகள்திடீரென புகுந்து நம் தமிழ் சகோதரிகளை மானபங்கப்படுத்துவது,கற்பழிப்பது,கடத்திச்சென்று கற்பழித்துக்கொல்வது என அரக்கத்தனம் செய்துவந்தனர்.இந்த அக்கிரமங்களை சிங்களப்போலீஸ் தட்டிக்கேட்கவில்லை;மாறாக ஊக்குவித்தனர்.
    அன்பின் வடிவம்புத்தர் போதித்தது இதைத்தானா?
    இன்று புத்ததேசத்தின் ராஜபக்ஷேக்கள் ஒரு லட்சம் கோடி ஹிட்லர்கள் செய்யும் நாசவேலையை இவன்களே செய்கிறான்கள்.
    கேவலம் அரசியல் அதிகாரத்திற்காக,என்ன வேண்டுமானாலும் செய்யும் ராஜபக்ஷேவின் மறுபிறவியும்,அடுத்த 40 தலைமுறைகளும் கொடூரமான அழிவுகளை சந்திக்கும்.

    ReplyDelete