Saturday, May 29, 2010

வலிமையடைந்துவிட்ட செவ்வாய்பகவான்


மேஷம் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

7.10.2009 முதல் 27.5.2010 வரை மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களின் ராசி நாதன் செவ்வாய் நீசமாகியும் ,வக்கிரமாகியும் இருந்தார்.இந்த காலகட்டத்தில் பலவிதமான அவமானங்கள்,கவனக்குறைவுகளை சந்தித்து நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? என்ற அளவுக்கு மேஷம் விருச்சிகம் ராசிக்காரர்கள் மனம் வெதும்பியிருந்திருப்பர்.நமது ஆன்மீகக்கடலில் கூட அபூர்வ செவ்வாய்ப்பெயர்ச்சிப்பலன்களை வெளியிட்டிருந்தோம்.
சுமார் 60 ஆண்டுக்குப்பிறகு இப்படிப்பட்ட 8 மாத செவ்வாய் நீசம் உண்டானது.இதனால்,உலகம் எங்கும் ராணுவம்,காவல்துறையினர் ஆளும் வர்க்கத்துக்கு எதிராகவே போராடும் நிலைவந்திருந்தது.
இலங்கையின் பிறந்த?(சுதந்திர!) ராசி விருச்சிகம்;
இலங்கைத் தமிழர்களின் தனிப்பெரும் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தராசி விருச்சிகம்(பிற்ந்த நட்சத்திரம் அனுஷம்)
அதன் தற்போதைய அதிபர் ராஜபக்ஷேவின் பிறந்த ராசியும் விருச்சிகம்; (பிறந்த நட்சத்திரம் கேட்டை)

கடகராசியில் நீசமாகவும்,வக்கிரமாகவும் இருந்த செவ்வாய் 27.5.2010 அன்று இரவு மணி 9.49க்கு சிம்மராசிக்குப் பெயர்ச்சியாகிவிட்டார்.சிம்மராசி சூரியனின் ராசி;இதுஒரு நெருப்பு ராசியாகும்;நெருப்புராசியில் நெருப்புக்கோளான செவ்வாய் வரும்போது உச்சத்துக்குரியபலனைத் தருவார் என்பது ஜோதிட விதி;அனுபவப்பாடமும் கூட!
சிம்மராசியில் செவ்வாய் இருக்க ஒரு ஜாதகர் பிறந்தால்,அவருக்கு செவ்வாய் தோஷம் கிடையாது.
ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு 2,4,7,8,12 ஆம் இடங்களில் செவ்வாய் இருந்தால் அது செவ்வாய் தோஷம் என ஜோதிட சாஸ்திரம் சொல்லுகிறது.
ஆனால்,இதில் சுமார் 45 விதிவிலக்குகள் இருக்கின்றன.அதில் முதன்மையாக இருப்பது சிம்மச் செவ்வாய் தோஷம் தராது.

ஆக, 27.5.2010 இரவு மணி 10 முதல் மேஷம் மற்றும் விருச்சிகம் ராசிக்காரர்கள் இதுவரை இழந்த அனைத்தையும் பெறுவார்கள். இதுவரை பட்ட கஷ்டங்கள் தீரும்;அவமானப்படுத்தியவர்களாலேயே புகழ் வந்துசேரும்;எல்லா விஷயங்களிலும் சர்வ நிதானம் வந்து சேரும்.எதிரிகளை துவம்சம் செய்யத்துவங்கலாம்.

1 comment:

  1. ungal jothida kannipu padi kali bhagavan avatharithu vittara illaiya endru solla mudiyuma..appadi avatharithu vittar endral yenga avatharithu irrukirar mattrum eppothu ulagam muzhu azhivai santhikkum endru solla mudiyuma athavathu antha kurippita thinathudaya thethi yeppothu...ungal vidaikaga aahvalodu yethirpakkiren..

    ReplyDelete