Showing posts with label ஜோதிடக் கணிப்பு. Show all posts
Showing posts with label ஜோதிடக் கணிப்பு. Show all posts

Wednesday, May 19, 2010

துவங்கிவிட்ட 2012 அழிவு:பாலஜோதிடம் வார இதழின் ஆதாரத்துடன்


பாலஜோதிடத்தில் வந்துள்ள கட்டுரைச்சுருக்கம்

விக்ருதி வருடம் பிறந்த 14.4.2010 முதல் 26.12.2012 வரையிலும் சனி,செவ்வாய்,புதன் மற்றும் குருவின் சஞ்சாரச்செயல்பாடுகளால் உலகின் பெரும்பகுதிகள் ஆழிப்பேரலை எனப்படும் சுனாமி,பூகம்பம்,கடல் மட்டம் உயருதல் போன்றவற்றால் அழியப்போகிறது.
இந்தியாவில் தமிழ்நாட்டின் கடலோரப்பகுதிகள்,சென்னை,விசாகப்பட்டினம், இலங்கை,பசிபிக் பெருங்கடலின் ஓரத்தில் இருக்கும் ஜப்பான்,இந்தோனோஷியா,அமெரிக்கா,கனடா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் பெருமளவில் பாதிக்கப்படப்போகின்றன.
இந்த பேரழிவினால் சில நாடுகளின் பொருளாதாரம் அடியோடு நாசமாகும்.சில நாடுகள் உலக அரசியலில் இருந்து நிரந்தரமாக தனது பிடியை கைவிட்டுவிடும் எனஒரு ஜோதிடர் கணித்துள்ளார்.
இந்தக்கணிப்பு மே 2010 முதல்வாரத்தில் வெளிவந்த பாலஜோதிடத்தில் வெளிவந்துள்ளது.