Wednesday, May 5, 2010

இந்தியாவிற்கு ஆத்ம சோதனை

இந்தியாவிற்கு ஆத்ம சோதனை


கடந்த ஐந்து நிதி ஆண்டுகளில் அமெரிக்காவிலிருந்து மட்டும் இந்தியாவில் செயல்படும் கிறிஸ்தவ அறக்கட்டளைகள்,என்.ஜி.ஓ.,க்களுக்கு வந்துள்ள பணம் ரூ13,000 கோடிகள்.
இதுதவிர இவற்றில் பாதியளவுக்கு சில நாடுகள் இந்தியாவுக்கு பணம் அனுப்பியுள்ளன.அவை பிரான்ஸ்,இங்கிலாந்து,ஜெர்மனி,கனடா.
இந்த பணத்தைக் கொண்டு தமிழ்நாட்டின் பல பழமையான கோவில்களைச் சுற்றிலும் கிறிஸ்தவ அமைப்புகள் ஆக்கிரமிப்பு,வாடகை,குடியிருப்புகள் இவற்றை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றன.இந்தகிறிஸ்தவ வளர்ச்சியால் பல்லாயிரம் கோயில்களில் சுவாமி ஊர்வலம்,தேரோட்டம் போன்ற வழக்கமான பாரம்பரிய நிகழ்ச்சிகள் சுமார் 1500 ஆண்டுகளுக்குப்பிறகு நிறுத்தப்பட்டுள்ளன.
இந்திய அரசாங்கத்தின் உளவுத்துறை,உள்துறை,ராணுவம்,சமூகநலத்துறை என அனைத்திலும் பணிபுரியும் அதிகாரிகளில் கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள்,தனது சக ஊழியர்களை கிறிஸ்தவமதத்திற்கு மாற்றத்துவங்கியுள்ளனர்.
ஆதாரம்:குமுதம் ஜோதிடம் ஏப்ரல் 2010.
சித்திரை 1 அன்று தமிழ்நாட்டின் கோவில்களில் பஞ்சாங்கம் படிக்கக்கூடாது என மஞ்சள்துண்டு தாத்தா வாய்மொழி உத்தரவிட்டுள்ளாராம்.
கோவையில் தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் தமிழில் ஆன்மீகம் சார்ந்த ஆய்வுக்கட்டுரைகள் எதையும் சமர்ப்பிக்கக்கூடாது என தமிழக முதலமைச்சரின் அலுவலகம் வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாம்.
சத்திஷ்கர் மாநிலத்தில் மாவேயிஸ்டுகளை ஒழிக்க வந்திருந்த அதிரடிப்படைக் காவலர்கள் சுமார் 100 பேரை மாவேயிஸ்டுகள் சுட்டுக்கொன்றுள்ளனர்.நிச்சயம் இதற்குப்பின்னால்,சீனா இருக்கிறது.இதைச் சொல்லும் துணிவு மன்மோகன் சோனியா அரசுக்கு இல்லை.அவர்களுக்கு அமெரிக்காவின் ஷீவைத் துடைப்பதற்கே நேரமில்லை;
உலகிலேயே நம்பர் ஒன் பிராடுக் கம்பெனி என பெயர் எடுத்திருக்கும் நிறுவனம்தான் மான்சாண்டோ எனப்படும் அமெரிக்க நிறுவனம்.இந்த நிறுவனத்தின் பல்லாயிரம் கோடிகள் கமிஷனுக்காக நமது மத்திய அரசு ஒரு சட்ட முன்வரைவைக் கொண்டுவந்துள்ளது. “மரபணு மாற்றப்பட்ட உணவுப்பொருட்களுக்கு எதிராக இந்தியாவில் யாராவது பேசினால்,எழுதினால்,விளம்பரம் செய்தால் அவர்களுக்கு சிறை தண்டனையும் சில லட்சரூபாய்கள் அபராதமும் விதிக்கப்படும்”என்பதே அந்த சட்ட முன்வரைவின் சாராம்சம்.


உலகம் முழுவதும் அணுமின் நிலையங்களை வைத்திருக்கும் எல்லா நாடுகளிலும்,அணுவிபத்து ஏற்பட்டால்,அதன் நஷ்ட ஈடாக குறைந்தபட்சம் ரூ.500 கோடிகள் தரவேண்டும் என சட்டமியற்றியுள்ளன.ஆனால்,நமது தர்மம் மிகு பாரதநாட்டில் மட்டும் அதிகபட்சம் ரூ.500 கோடிகள் நஷ்ட ஈடுதரவேண்டும் என சோனியா,மன்மோகன் அரசு சட்டமியற்றியுள்ளது.ஆக,இந்தியாவின் மூளையில் அமெரிக்காவின் நாசா,இன் டெல்,மைக்ரோசாஃப்ட்,ஓரக்கிள்,ஆப்பிள் மற்றும் உலக வல்லரசுகள் வளர்ந்துகொண்டே இருக்கும்.அதே சமயம்,இளிச்சாவாய் இந்திய அரசியல்வாதிகளை தனது ஷீவுக்குள் அடக்கி இந்திய அப்பாவி மக்களின் நலன்களை விழுங்கும்.
ஆக,சொரணையற்ற,விழிப்புணர்வற்ற,சுயமாக வாழவிரும்பும் இந்தியர்களுக்கு இதுதான் முடிவா?

ஆக, இந்துதர்மத்தை அழிக்க எவ்வளவு திட்டமிட்டும்,ஒருங்கிணைந்தும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சக்திகள் செயல்பட்டுவருகின்றன.

கடவுளே! உனது ஆசிர்வாதம் பெற்ற எனது பாரதத்திற்கே இவ்வளவு கேடுகளா?
நீ எப்போது அந்த தேசபக்தி நிறைந்த மாவீரனை அனுப்பப்போகிறாய்?
எப்படி இந்த பிரம்மாண்ட தேசத்தை,20,00,000 ஆண்டுகள் பழமையான இந்துதர்மத்தைப் பாதுகாக்கப் போகிறாய்?

2 comments:

  1. உங்கள் பதிவு நன்றாக உள்ளது ஆனால் பார்க்க வேண்டியவர்கள் பார்பார்களா என்றால் சந்தேகமே ?

    ReplyDelete
  2. தங்களின் மதிப்பீட்டிற்கு நன்றிகள்.இந்த வார்த்தைகள் தான் என்னை இன்னும் பொறுப்போடு வலைப்பூ நடத்திடச் செய்கிறது.
    பார்க்க வேண்டியவர்கள் பார்த்திட நான் என்ன செய்ய வேண்டும்?

    ReplyDelete