Monday, January 31, 2011

ஆர்.எஸ்.எஸ். என்றால் என்ன?





ராஷ்டீரிய ஸ்வயம்சேவ சங்ஹ் என்பது இதன் விரிவாக்கம்.உயிர்துடிப்புள்ள நாட்டிற்காக தானாகவே முன்வந்து வேலை செய்பவர்களின் சங்கம் என அர்த்தப்படுத்திக்கொள்ளலாம்.மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் இதன் தலைமையகம் அமைந்திருக்கிறது.



சுதந்திரம் வாங்கும் முன்பாக, எல்லோரும் எப்படியாவது வெள்ளைக்காரனை இங்கிருந்து துரத்தியாக வேண்டும் என்ற சிந்தனையோடு சுதந்திரப்போராட்டம் நடைபெற்றது.ஒரே ஒரு எம்.பி.பி.எஸ்.முடித்த டாக்டர் மட்டும் இதற்கு மாறுபட்டு சிந்தித்தார்.

இரண்டாயிரம் மைல் நீளம்,இரண்டாயிரம் மைல் அகலம் உள்ள இந்த பாரத தேசத்தில் வீரர்களுக்கும்,தலைசிறந்த மன்னர்களுக்கும்,செல்வ வளத்துக்கும் சிறிதும் குறைவில்லை;எல்லாதுறைகளிலும் தன்னிறவு பெற்றிருந்தோம்.இருந்தும் எப்படி இந்த ஆங்கிலேயன் இந்த நாட்டை அடிமைப்படுத்தினான்?

எப்படியும் நாம் இந்த வெள்ளையனை துரத்திவிடுவோம்.அதில் சந்தேகமில்லை;ஆனால்,மீண்டும் வேறுவடிவங்களில்,வேறு முகமூடி அணிந்து(சோனியா) நமது நாட்டைக் கைப்பற்ற மாட்டான் என்பது என்ன நிச்சயம்.இதற்கு நிரந்தரத் தீர்வுதான் என்ன? என்பதை சுமார் 3 ஆண்டுகளாக சிந்தித்தார்.பல அரசியல் தலைவர்களிடம் கலந்து ஆலோசித்தார்;சுவாமி விவேகானந்தரிடமும் ஆலோசனை கேட்டார்.



அதன்படி,இந்த நாட்டின் கடைசி குழந்தை பிறக்கும் வரை நிரந்தரமான தேசபக்தியை ஊட்டக்கூடிய ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.அதன்படி 1925 ஆம் ஆண்டு விஜயதசமியன்று பிறந்ததுதான் ஆர்.எஸ்.எஸ்.

இன்று மகாத்மா காந்தியடிகளின் நினைவுநாள்






தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் நினைவுநாளன்று சில உண்மைகளை உங்களிடம் உரைக்க விரும்புகிறேன்.

மகாத்மா காந்தி எனப்படும் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள் நமது நாட்டின் சுதந்திரத்துக்குப் பாடுபட்ட எண்ணற்ற தலைவர்களில் முக்கியமானவர்.இந்த நாளில் நாதுராம் விநாயக் கோட்சே என்பவன் அவரை சுட்டுக்கொன்றான்.இதுமட்டுமே நாம் அறிந்துள்ள வரலாறு.



இங்கிலாந்து நமக்கு சுதந்திரம் தரும் முன்பாகவே,யார் பிரதமராக வருவது என்ற கோஷ்டி சண்டை ஆரம்பித்துவிட்டது.இந்த சண்டை இன்று இந்தியாவில் இருக்கும் 540 மாவட்டங்களிலும் காங்கிரஸ் கட்சியினரிடம் பரவி யிருக்கிறது.அது போகட்டும்.

ஒருவழியாக நேரு பிரதமரானார்.அவருக்கு ஆர்.எஸ்.எஸ்.மீது ஒரு சந்தேகம்.இவர்கள் எங்கே நம்மை கவிழ்த்து ஆட்சியைப் பிடித்துவிடுவார்களோ? என்று.மகாத்மா காந்தியின் மரணத்தை ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்திக்கொண்டார்.காந்தியைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ்.தான் என வதந்தி பரப்பி,இந்திய மக்களை ஆர்.எஸ்.எஸ்.ஸீக்கு எதிராக திருப்பினார்.

சரி! நாதுராம் விநாயக் கோட்சேயின் வாக்குமூலத்தை ஏன் இந்த காங்கிரஸ் கட்சி ஐம்பது ஆண்டுகளாக வெளியிடவில்லை?அப்படி வெளியிட்டால்,அன்றே காங்கிரஸ் கட்சி கட்டெறும்பாக தேய்ந்து இன்றைய கம்யூனிஸ்டு கட்சியாக சிறுத்துப்போயிருக்கும்.

நாதுராம் விநாயக் கோட்சே என்ற பெயரில் இஜட்.ஒய்.ஹிம்ஸாகர் என்பவர் எழுதி தமிழில் ஒரு புத்தகம் வெளியாகியிருக்கிறது.குமரி பதிப்பகம்,8,நீலா தெற்குவீதி,நாகப்பட்டிணம்,தமிழ்நாடு என்ற பதிப்பகம் இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறது.

இந்த புத்தகத்தில் காந்தியை சுட்டுக்கொன்றதும்,கோட்சேயை காவல்துறை கைது செய்தது;நீதிமன்றத்தில் ஆஜர் செய்தது.கோட்சேவின் குமுறல்களை தனது வாக்குமூலமாக பதிவு செய்தது.மனித தர்மப்படி கோட்சேவின் குமுறல்கள் நியாயமானவை.இந்திய சட்டப்படி?

கோட்சேவின் குமுறல்களை இன்றுவரை அகில இந்திய காங்கிரஸ் கட்சி கண்டுகொள்ளவில்லை;அப்படிக் கண்டுகொண்டிருந்தால்,மும்பையில் தாஜ் ஹோட்டலில்;வி.டி.ரயில்வே நிலையத்தில்; நமது மதிப்பு மிக்க பாராளுமன்றத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்கமாட்டார்கள்.

இன்றும் காங்கிரஸ் கட்சி முஸ்லீம்களை தாஜா செய்யாமலிருந்து,நிஜமான இந்து முஸ்லீம் ஒற்றுமை அரசியல் தளத்திலும் உருவாகியிருக்கும்.கோடிகளை காங்கிரஸ் கொள்ளையடித்திருக்காது.ஒருமுறை இந்த புத்தகத்தை வாங்கிப் படித்துப்பாருங்கள்.காங்கிரஸின் சுயநல சொரூபம் புரியும்

Friday, January 28, 2011

உங்களது சிந்தனைக்கு






ஒரு நாட்டின் தேசபக்தியை அழிப்பது எப்படி?



அந்த நாட்டு இளைஞர்கள் அவர்களுடைய தாய்மொழி இலக்கியங்களை படிக்காமல் பார்த்துக்கொள்;அதுபோதும்



இந்த உரையாடல் நமது சுதந்திரத்துக்கு முன்பாக நடைபெற்றது.கேள்வி கேட்டவர் மான்மை தாங்கிய நமது மகாராஜாக்களில் ஒருவர்.



பதிலளித்தவர் ஆங்கிலேயத் தளபதி.



நாம் ஏன் ஜாதி ரீதியாகப் பிரிந்திருக்கிறோம்? நாம் ஏன் நமது கோவில் சொத்துக்கள் நமது அரசியல் வாதிகளால் சூறையாடப்பட்டாலும் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம்? நமது நகைச்சுவை நடிகர்கள் நமது பெருமதிப்புக்குரிய புராதனப்பண்பாட்டினை கேலி செய்தாலும்,அவமானப்படுத்தினாலும் சிரித்துவிட்டுப்போகிறோம்? என்று புரிகிறதா?



நமது கல்வித்திட்டம் ஆங்கிலேயன் மெக்காலேயால் கொண்டுவரப்பட்ட சக்கையான கல்வித்திட்டம்.இந்த கல்வித்திட்டம் நம்மிடையே திமிர்பிடித்த,ஈகோ மட்டுமே பார்க்கக் கூடிய ஒரு நாட்டை உருவாக்கியிருக்கிறது.விளைவு?



நம்மை ஆளுபவர்களில் ஒரு சிறந்த சுதேசத் தலைவர்கள் கூட இல்லை;இத்தாலியிலிருந்து இறக்குமதி செய்திருக்கிறோம்.இது அவமானம் இல்லையா?

விக்ருதி வருடத்தின்(14.4.2010 முதல் 13.4.2011) எஞ்சிய மைத்ர முகூர்த்த நாட்கள்





ஜோதிடத்தில் மைத்ர முகூர்த்தம் என்ற ஒன்று உண்டு.இந்த நேரம் ஒரு தமிழ் மாதத்தில் அதிகபட்சமாக மூன்று நாட்களுக்கு வரும்.அந்த மூன்று நாட்களில்,ஒவ்வொரு நாளும் அதிக பட்சமாக இரண்டு மணிநேரம் வரை இந்த மைத்ரமுகூர்த்தம் இருக்கும்.இந்த நேரத்தில் நாம் வாங்கிய கடனில் அசலில் ஒரு பங்கினை,கடன் வாங்கியவரிடம் திருப்பி செலுத்த வேண்டும்.(வட்டியை இந்த நேரத்தில் கட்டக்கூடாது)அப்படி செலுத்தினால்,அதன்பிறகு,நமது கடன் எவ்வ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் வெகுவிரைவில் தீர்ந்துவிடும்.கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த மைத்ர முகூர்த்த நேரங்களை நமது ஆன்மீகக்கடல் வாசகர்கள் பயன்படுத்தி,அவர்களது மாபெரும் கடன்களை அடைத்துள்ளனர்.



நமது தமிழ் வருடம் பிறக்க இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கின்றன.இந்த இரண்டு மாதங்களில் இருக்கும் மைத்ர முகூர்த்த நேரங்கள் வருமாறு:



9.2.2011 புதன் காலை 10.45 முதல் 12.45 வரை



24.2.2011 வியாழன் இரவு 11.39 முதல் 1.39 வரை



9.3.2011 புதன் காலை 9.01 முதல் 11.01 வரை



24.3.2011 வியாழன் இரவு 9.45 முதல் 11.45 வரை



5.4.2011 செவ்வாய் காலை 6.46 முதல் 8.46 வரை



இந்த மைத்ர முகூர்த்த நேரங்கள் இந்தியா முழுவதற்கும்,இலங்கை,மாலத்தீவுகள்,அந்தமான் நிகோபார்,மொரிஷியஸ் தீவுகளுக்கு மட்டுமே பொருந்தும்.

Thursday, January 27, 2011

தை அமாவாசை 2.2.11 புதன்கிழமையைப் பயன்படுத்துங்கள்

ஜோதிடப்படி,அசுரர்களுக்குத் தெரியாமல் நான்கு வேதங்களை மகாவிஷ்ணு மறைத்துவைத்த ராசிகள் கடக ராசியும்,மகர ராசியும் ஆகும்.இங்கிருந்து இந்த ராசிகளுக்கு நாம் ராக்கெட்டில் பயணம் செய்தால் சுமார் 20,000 முதல் 90,000 வருடங்கள் ஆகும்.அதுவும் விநாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர்கள் வேகத்தில் பயணித்தால்! இந்த விநாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர்கள் தூரம் என்பது ஒளி வேகம் ஆகும்.அவ்வளவு தூரத்தில் இந்த ராசிமண்டலங்கள் அமைந்திருக்கின்றன.

ஆடிமாதத்தில் நமது சூரியன் கடகராசியையும்,தை மாதத்தில் மகர ராசியையும் கடக்கும்.அப்படிக் கடக்கும்போது,ஆத்மாக்காரகனாகிய சூரியனும்,மனக்காரகனாகிய சந்திரனும் ஒன்று சேரும் நாட்களே ஆடி அமாவாசையும்,தை அமாவாசையும்.இந்த இரண்டு நாட்களிலும் நாம் நமது முன்னோர்களாகிய பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வதால்,நாம் இந்தப்பிறவியில் நம்மையறியாமல் வர இருக்கும் பிரச்னைகள்,விபத்துக்கள்,அவமானங்களிலிருந்து தப்பிக்கலாம்.நம்மை அரூபமாக நமது முன்னோர்கள் (பித்ரு தர்ப்பணம் செய்வதால்)காப்பாற்றுவார்கள்.
எதிர்வரும் தை அமாவாசையானது 2.2.11 புதன் கிழமையன்று வருகிறது;அன்று நாம் செய்ய வேண்டியது என்னவென்றால்,நமது ஓம்சிவசிவஓம் மந்திரத்தின் பலனை முழுமையாகவும்,மிக அதிகமாகவும் பெறுவதற்கு முயல வேண்டும்.
ஒன்று:நமது ஊருக்கு அருகில் இருக்கும் கடலோரக் கோவிலுக்குச் செல்ல வேண்டும்.அது முருகன்,காளி,பெருமாள் என எந்தக் கோவிலாக இருந்தாலும் சரி;அதிகாலையிலேயே எழுந்து சூரியன் உதயமாகும் வேளையில் கடலில் நீராடியிருக்க வேண்டும்.சரியாக சூரியன் உதயமாகும் வேளையில் நாம் நமது மஞ்சள் துண்டு,ருத்ராட்சங்கள்,விபூதியோடு அந்த கடலோரக்கோவிலுக்குள் அமர்ந்து ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.இதனால்,நமது ஜபத்தின் பலன் 1000 கோடி மடங்குகளாகப் பெருகும்.இந்த நாளில் நாம் காலை 5.45 முதல் 6.45 வரையிலும் கடலோர கோவிலுக்குள் அமர்ந்து ஜபிக்க வேண்டும்.(பலர் கோவிலுக்கு வருவார்களே? என்ன செய்வது?)கண்களை மூட வேண்டாம்.வேடிக்கை பார்ப்பது போல் கைகளுக்குள் ருத்ராட்சங்களை வைத்துக்கொண்டு,உதடு அசையாமல் ஜபித்துவருவது நல்லது.யாரிடமும் பேச வேண்டாம்.யாராவது பேசினால்,ஒரு புன்னகை செய்தால் போதுமானது.
ஒரு மணி நேரம் ஓம்சிவசிவஓம் மந்திர ஜபம் முடிந்தப்பின்னர்,அந்த கோவில் மூலவரை வழிபட்டப்பின்னர்,கோவிலுக்கு வெளியே நம்மால் ஆன அன்னதானம் அல்லது உணவு(பழங்கள்/இனிப்பு)தானம் சிலருக்குச் செய்ய வேண்டும்.அதன் பிறகு,நாம் அங்கேயே நமது காலை உணவை முடிக்கலாம்;அல்லது நமது வீட்டிற்குத் திரும்பிவந்தும் காலை உணவை முடிக்கலாம்.

கடலோரக்கோவிலுக்குச் செல்ல முடியாதவர்கள்,அருகிலிருக்கும் மலைக்கோவிலுக்குச் சென்று இதேபோல செய்யலாம்.(நமதுவீட்டில் குளித்துவிட்டுச் சென்று மலைக் கோவிலுக்குச் சென்று)ஒரு மணி நேரம் மந்திர ஜபம் செய்யலாம்.விடிகாலையில் இப்படி செய்ய முடியாதவர்கள்,அன்று 2.2.11 புதன் கிழமையன்று ஏதாவது ஒரு மணிநேரத்தில் மேற்கூறியதுபோல் ஓம்சிவசிவஓம் ஜபிக்கவும்.

விடுமுறையும் எடுக்க முடிந்து,ஓரளவு பணமும் வைத்திருப்போர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் இருக்கும் சித்தர்களின் வீடாகிய சதுரகிரிக்கு அல்லது சித்தர்களின் கோவிலாகிய (விழுப்புரம் அருகிலிருக்கும் திருவண்ணாமலை மாவட்டம்) திருவண்ணாமலைக்கு அல்லது சித்தர்களின் தவச்சாலையாகத் திகழும் வேலூர் அருகில் இருக்கும் பர்வத மலைக்கு செல்லுங்கள்.அங்கே இதேபோல் ஓம்சிவசிவஓம் மந்திரஜபம் செய்யுங்கள்.முடிந்தால் மூன்று மணி நேரம் வரை ஓம்சிவசிவஓம் ஜபிக்க அடுத்த சில நாட்கள் அல்லது சில வாரங்களில் உங்களது நீண்ட நாள் சிக்கலான பிரச்னை ஒன்று முடிவுக்கு வரும் என்பது உறுதி.

திருஅண்ணாமலையில் கிரிவலம் சென்றுகொண்டே நமது ஓம்சிவசிவஓம் ஜபிக்கலாம்.தை அமாவாசை என்பதால் அன்றிரவு திருஅண்ணாமலைக்கு உங்களது ருத்ராட்சங்களோடு வந்து இரண்டு உள்ளங்கைகளிலும் தலா ஒரு (ஐந்துமுக)ருத்ராட்சங்களை மடக்கியவாறு மாலை  6 மணிக்கு மேல் அண்ணாமலையின் கிழக்குக் கோபுரவாசலில் இருக்கும் தேரடி முனீஸ்வரர் கோவிலில் இருந்து,அவரைவணங்கி,அனுமதி கேட்டு கிரிவலம் புறப்படலாம்.ஒரு முறை கிரிவலம் முடிக்க ஆறு மணி நேரம் ஆகும்(இரவு என்பதால் ஐந்து மணி நேரம் ஆகும்)

ஆக,தை அமாவாசையில் திருஅண்ணாமலை கிரிவலம் ஓம்சிவசிவஓம் என ஜபித்தவாறு செல்லுவதே
மிகவும் சுலபமானது;சிறப்பானது.திரு அண்ணாமலை கிரிவலத்தை பூதநாராயணப்பெருமாள் கோவிலில் முடிக்க வேண்டும்.

இவற்றில் எதுவும் செய்ய இயலாதவர்கள்,உங்கள் ஊரில் இருக்கும் சிவாலயத்துக்கு (காலையிலோ,மாலையிலோ,இரவிலோ)சென்று ஓம்சிவசிவஓம் ஒரு மணிநேரம் ஜபித்துவரலாம்.இதுவும் முடியாதவர்கள்,உங்களின் வீட்டின் மாடியில் தை அமாவாசை அன்று இரவு ஏதாவது ஒரு மணிநேரத்துக்கு(மொட்டை மாடியாக இருந்தாலும்) ஓம்சிவசிவஓம் ஜபித்துவருக!! அளவற்ற சிவ ஆசிர்வாதம் பெறுக!!!

இந்த ஓம்சிவசிவஓம் மந்திரத்தை நமக்கு அறிமுகம் செய்துவைத்த மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களுக்கு நன்றிகள்!!!!

சிவ ஆலய புணருத்தாரனத்திற்கு உதவ விருப்பமா?

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டைக்கு அருகில் உள்ள தெங்கால் என்னும் கிராமத்தில் சுமார் ஆயிரம் வருடங்களுக்கு மேலான , தொன்மை வாய்ந்த ஒரு சிவ ஆலயம் உள்ளது.  ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத திருகண்டேஸ்வரர் அருள் பாலித்து வருகிறார். இந்த ஆலயம்  சமீப காலமாய் வெகுவாக சிதிலம் அடைந்து , இப்போது முழுவதும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. நிதிப் பற்றாக்குறை  காரணமாக வேலைகள் சற்று தாமதமாகி வருகிறது. இந்த ஆலயம் பற்றிய ஒரு கட்டுரை, சக்தி விகடனில் சென்ற வருடம் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி இதழில் வெளியாகி , ஏராளமான அன்பர்கள் நிதி உதவி செய்து , ஆலயப் பணிகள் ஓரளவு நிறைவு பெற்றுள்ளன. அந்த இதழின் விபரம் அறிய இங்கே க்ளிக் செய்து டவுன்லோட் செய்யவும்



http://www.ziddu.com/download/13375806/shakti1.pdf.html

 http://www.ziddu.com/download/13375824/shakti2.pdf.html


கிராம மக்களிடமும் இயன்ற அளவு நிதி பெறப்பட்டுள்ளது. இப்போது ஐயனுக்கும், அம்மனுக்கும் - கோபுர வேலைகள் தொடங்கப் பட உள்ளன . விருப்பம் இருக்கும் அன்பர்கள், தங்களால் இயன்ற அளவு நிதி உதவி செய்யலாம். பணம் அனுப்பும் முறைக்கு ஆலய திருப்பணிக் குழு செயலாளர் திரு. பத்மநாபன் ( அலை பேசி :  93617 28052 ) என்ற எண்ணில் தொடர்பு கொண்டு , மேலும் விபரங்கள் பெற்றுக் கொள்ளவும்.

Crystal Shivling

 இப்போது உள்ள நிலவரப்படி இன்னும் சுமார் 10 லட்சம் வரை நிதி தேவைப்படும் என்று தெரிகிறது. உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் இதை தெரியப் படுத்தி , ஆலயப் பணிகளில் கரம் கோர்த்து இறையருளை பெற வேண்டுகிறோம.

திருப்பணி தகவல் ஏடு பற்றி மேலும் விபரங்கள் அறிய, இங்கே க்ளிக் செய்து file ஐ  டவுன்லோட் செய்யவும்.
http://www.ziddu.com/download/13376225/temple.pdf.html

 இங்குள்ள திருகண்டேஸ்வரரை வணங்கினால், தடைப்பட்ட திருமணங்கள் விரைவில் நிறைவேறும். சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். நிறைந்த ஞானமுள்ள குழந்தைகள் கிடைக்கும். இத்தனை சக்தி வாய்ந்த இறைவன் இப்போதுதான் ஆலயம் பற்றி தகுதி உள்ளவர்களுக்கு தெரியப் படுத்த திருவுளம் கொண்டு இருக்கிறார் போல... ம்ம்..

பொதுவாக எந்த ஒரு ஆலயத்திற்கு நீங்கள் உதவினாலும், ராமருக்கு உதவிய அணில் போல சிறு உதவி ஆனாலும், உங்கள் வாழ்வில் நிறைந்த ஐஸ்வர்யங்கள் கிடைப்பது உறுதி.. 

இந்த  தகவலை  உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எமது இணைய தளம் பெருமை கொள்கிறது. உங்களால் முடிந்தவரை உங்கள் நண்பர்களுக்கும் இதை தெரியப் படுத்தி ஆலயத்திற்கு உதவுங்களேன்....

சிவ அதிர்வை உணர்த்தும் ஓம்சிவசிவஓம்



எனது நண்பர் ஒருவர் ஒரு நாளுக்கு மூன்று முறை ஓம்சிவசிவஓம் ஜபித்துக்கொண்டிருக்கிறார்.(அவருக்கு அவ்வளவு ஓய்வு நேரம் கிடைக்கிறது).ஓவ்வொரு முறையும் அவர் ஒரு மணி நேரம் வீதம் ஒரு நாளுக்கு மூன்று மணி நேரங்கள் வரை ஜபித்துவருகிறார்.



இவர் நமது வலைப்பூவை தினமும் வாசித்து,அதில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளை ஆராய்ந்து,அதன்படி அதைவிட சிறப்பாகவே ஜபித்துவருகிறார்.



இவர் இரண்டு மஞ்சள் நிற டவல்களை வாங்கியுள்ளார்.ஒன்றை விரிப்பாகவும்,மற்றதை தனது இடுப்பில் கட்டியும்,கழுத்தில் ஒரு ருத்ராட்சமும்,இரண்டு கைகளில் தலா ஒரு ருத்ராட்சங்களையும் வைத்தவாறும்,சிவாலயத்தில் வாங்கிய விபூதியை நெற்றி,தோள்பட்டைகள்,மார்பு,வயிறு,கழுத்தில் பூசிய பின்னர் ஓம்சிவசிவஓம் ஜபித்துவருகிறார்.



இரண்டாவது மாதத்தில் ஒரு நாள்,அன்று அவரது பிறந்த நட்சத்திரம் நின்றநாளாம்;இவரது வலது கால் பெருவிரலில் இருந்து மூட்டுவரை ஒரு வித மெல்லிய மின் அதிர்வு கோடு போல சில நிமிடம் வரையிலும் அதிர்ந்தது.இவருக்கும் மகிழ்ச்சி தாங்க முடியவில்லை;



அவர் சொல்வது என்னவெனில், “எப்போதும் சிவ மந்திரங்களில் ஏதாவது ஒன்றை தினமும் ஜபித்தாலே,நம்மை சிவன் சோதிப்பார்.ஆனால்,இந்த ஓம்சிவசிவஓம் ஜபிக்கத்துவங்கியதிலிருந்து,அப்படிப்பட்ட சோதனை எதுவும் வரவில்லை.மனதில் அடிக்கடி எழும் காம எண்ணங்கள் நீங்கியிருக்கின்றன.



முன்பெல்லாம் எளிதில் ஒரு சினிமா போஸ்டரைப் பார்த்தாலே காம வசப்படுவது இயல்பு.ஆனால்,இன்றோ,ஒரு பெண்ணின் நிர்வாணப்படத்தைப் பார்த்தும் கூட காம எண்ணம் சிறிதும் வரவில்லை.உங்களுக்கு நன்றிகள்!

நான் ஒருபோதும் இந்த ஒம்சிவசிவஒம் ஜபிப்பதை விட மாட்டேன்”
thanks: http://www.omshivashivaom.blogspot.com/http://www.omshivashivaom.blogspot.com/