Friday, September 6, 2019

இந்து காலக் கணக்கீடு

இந்துக்காலக் கணக்கீடு:இந்துக் காலக் கணக்கு

ஒரு நாளில் இந்த பூமியில் பிறக்கும் உயிர்களின் எண்ணிக்கை மொத்தம் 21,600
ஒரு மனிதனின் ஒருநாள் சுவாச எண்ணிக்கை
21,600


21,600 x 200= 43,20,000

ஒரு சதுர்யுகத்தின் இருநூறுவருடங்களை 80+60+40+20 எனப்பிரித்து நான்கு யுகங்களாக்கினர் நமது முன்னோர்கள்.அவை
கிருத யுகம், திரேத யுகம், துவாபர யுகம் ,கலியுகம் ஆகும்.



கிருத யுகம் 21,600 x 80 = 17,28,000 ஆண்டுகள்(மனித உயரம் 24 அடி;ஆயுள் பல ஆயிரம் ஆண்டுகள்)



திரேத யுகம் 21,600 x 60 =12,96,000 ஆண்டுகள்(மனித உயரம் 18 அடி;ஆயுள் சில ஆயிரம் ஆண்டுகள்)



துவாபரயுகம்21,600 x 40 = 8,64,000 ஆண்டுகள்(மனித உயரம் 12 அடி;ஆயுள் சில நூறு ஆண்டுகள்)



கலியுகம் 21,600 x 20 = 4,32,000 ஆண்டுகள்(மனித உயரம் 6 அடி;ஆயுள் 120 ஆண்டுகள்)



ஆகமொத்தம் 43,20,000 ஆண்டுகள்
நான்கு யுகங்கள் சேர்ந்து ஒரு சதுர்(4)யுகம் ஆகும்.



1 சதுர்யுகம் என்பது 43,20,000 ஆண்டுகள்



71 சதுர்யுகம் என்பது 30,67,20,000 ஆண்டுகள்



1 மன்வந்திரம் என்பது 30,67,20,000 ஆண்டுகள்



994 சதுர்யுகங்கள் அல்லது 14 மன்வந்திரம்
என்பது 429,40,80,000 ஆண்டுகளாகும்.



2கல்பம் என்பது 14 மன்வந்திரம்(429,40,80,000ஆண்டுகள்)



2கல்பம் என்பது பிரம்மாவுக்கு ஒரு நாள் ஆகும்.



தற்போதையபிரம்மாவின் வயது 51 .


பிரம்மாவுக்கு 100 வயது ஆனதும் சிவனுக்குள் ஐக்கியமாகிவிடுவார்;அடுத்த பிரம்மாவாக ஒரு புண்ணிய ஆத்மா பொறுப்பு ஏற்பார்;

பிரம்மாவுக்கு 100 வயது ஆனால்,அது விஷ்ணுவுக்கு ஒரு நாள்!

அப்படி விஷ்ணுவுக்கு 100 வயது ஆகிவிட்டால்,அவரும் ஈசனுக்குள் ஐக்கியமாகிவிடுவார்;

விஷ்ணுவுக்கு 100 வயது ஆனதும்,அடுத்த விஷ்ணுவாக ஒரு புண்ணிய ஆத்மா அந்த பொறுப்புக்கு வந்துவிடுவார்;

No comments:

Post a Comment