Wednesday, September 11, 2019

கர்மச்சுமைகளை விரைவில் தீர்க்கும் சாம்பிராணித் தைலம்!


கர்மச்சுமைகளை விரைவில் தீர்க்கும் சாம்பிராணித் தைலம்!

உங்கள் முன்னோர்கள் செய்த பாவ புண்ணியம் மொத்தமும் உங்கள் வாழ்க்கையை இயக்குகிறது என்று எண்ணினால்,அது தவறு;உங்கள் முன்னோர்களின் கர்மாவில்(பாவ & புண்ணியத் தொகுப்பு) 7 இல் 1 பங்கினை மட்டுமே நீங்கள் அனுபவிக்கிறீர்கள்! மீதி ஆறு பங்கினை மற்ற பேரன்,பேத்திகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது;

நம் ஒவ்வொருவருக்கும் ப்ராரப்த கர்மா,சஞ்சித கர்மா,ஆகாம்ய கர்மா என்ற மூன்று கர்மாக்கள் இருக்கின்றன;இந்த மூன்று கர்மாக்களின் கணக்கு ஜீரோ லெவலுக்கு வந்துவிட்டால்,அதன் பிறகு இந்த கர்ம பூமியில் பிறவி நமக்கு கிடையாது;இந்த நிலையை எட்டிட நம் ஒவ்வொருவருக்கும் இன்னும் 20,000 முதல் 3,00,00,000 பிறவிகள் பாக்கி இருக்கின்றன;இது பயமுறுத்தும் தகவல் அல்ல;உண்மையான ஆன்மீக ரகசியம்;


மேலே சொன்ன மூன்று கர்மாக்களில் ஒரு கர்மாவை மட்டுமே நமது பல்வேறு புண்ணியச் செயல்களால் கரைத்து விட முடியும்;பிற இரண்டு கர்மாக்களை நீக்கிடவே பல ஆயிரம் பிறவிகள் அல்லது பல கோடி பிறவிகள் எடுக்க வேண்டி இருக்கின்றது;

 இரண்டே இரண்டு செயல்களை நாம் செய்தால்,இப்பிறவியிலேயே இந்த மூன்று கர்மாக்களையும் மொத்தமாக அழித்துவிட முடியும்;

1.அடிக்கடி அண்ணாமலை கிரிவலம் செல்லுதல்

2.ப்ரபஞ்சத்தின் அன்னை லோக மாதா,மனோன்மணியின் படைத்தளபதியான மஹாவராகியை 6 ஆண்டுகளுக்கு தினமும் ஜபித்து வருதல்

இவைகள் இரண்டையும் செய்ய முடியாத அளவுக்கு உங்கள் வாழ்க்கை தற்போது இருக்கிறதா? பரவாயில்லை; 

எதிர்காலத்தில்  இதில் ஏதாவது ஒன்றைச் செய்ய விரும்புவோர்,பின்வரும் ஆன்மீக முயற்சியை உங்கள் ஊரிலேயே செய்யலாம்;


அதுதான் சாம்பிராணித் தைலத்தால், தெய்வ மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்து வருவது!!!

அனுபவம் மிக்க சித்த வைத்தியரால் தரமான சாம்பிராணித் தைலத்தை தயார் செய்ய முடியும்;

விநாயகர்,முருகக் கடவுள்,சிவலிங்கம்,மஹாவிஷ்ணு,ஹயக்ரீவர்,மஹாலட்சுமி,   கிராம காவல் தெய்வங்கள்,குல தெய்வம்,மஹா கால பைரவர்,மஹா வராகி,சொர்ண வராகி,பாதாள வராகி,சரபேஸ்வரர்,நரசிம்மர்,காளி,துர்கை,வன துர்கை,சகஸ்ரலிங்கம்,மாரியம்மன்,அங்காளபரமேஸ்வரி என்று எந்த தெய்வத்திற்கும் அபிஷேகம் செய்ய சாம்பிராணி தைலத்தைப் பயன்படுத்தலாம்;


தொடர்ச்சியாகவோ அல்லது விட்டுவிட்டோ 1008 நாட்கள் சம்பிராணித் தைலத்தால் ஒரே ஒரு தெய்வம் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட தெய்வத்திற்கு அபிஷேகம் செய்து வந்தால்,கடுமையான கர்மவினைகள் தீரும்;


விநாயகருக்கு ஒவ்வொரு சதுர்த்தி திதி நாளிலும் 50 மிலி முதல் 100 மிலி அளவுக்கு சாம்பிராணித் தைலம் அபிஷேகத்திற்கு தரலாம்;

மஹாவராகிக்கு ஒவ்வொரு பஞ்சமி திதி நாளிலும் அபிஷேகத்திற்கு தரலாம்;

முருகக் கடவுளுக்கு ஒவ்வொரு சஷ்டி திதி அன்றும் சாம்பிராணித் தைலத்தை தானமாக தரலாம்;

காளி,மாரி,துர்கை முதலான உக்கிரமான பெண் தெய்வங்களுக்கு ஒவ்வொரு நவமி திதி மற்றும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை/செவ்வாய்க்கிழமைகளிலும் அபிஷேகத்திற்கு தரலாம்;


பெருமாளுக்கும் தாயாருக்கும் ஒவ்வொரு புதன் கிழமை/சனிக்கிழமை மற்றும்   ஏகாதசி திதி நாட்களில் சாம்பிராணித் தைலத்தை அபிஷேகத்திற்கு தரலாம்;

ஹயக்ரீவருக்கு ஒவ்வொரு புதன் கிழமை அன்றும் அபிஷேகத்திற்கு தரலாம்;

ஒவ்வொரு பிரதோஷத்திற்கும் நந்திபகவானுக்கு அபிஷேகம் செய்ய சாம்பிராணித் தைலத்தை தானம் செய்யலாம்;


ஒவ்வொரு சிவராத்திரி,திருவாதிரை,அமாவாசை அன்றும் சிவலிங்கத்திற்கும்,சகஸ்ர லிங்கத்திற்கும்,ஜீவசமாதிகளில் அமைந்திருக்கும் சிவலிங்கத்திற்கும் சாம்பிராணித் தைலத்தை தானமாக தரலாம்;

விலைக்கு வேண்டுவோர் போனில் (வாட்ஸ் அப்:9092116990) முன்பதிவு செய்து நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம்;

கர்மவினைகள் போதுமான அளவு தீர்ந்திருக்கிறது என்பதை எப்படி நாம் அறிந்து கொள்வது?


இதுவரை நமது மாத வருமானம் எவ்வளவோ,அது 1008 நாட்களுக்குப்பிறகு 20 முதல் 40% அதிகரித்திருக்கும்;

அல்லது

விலகிச் சென்ற உறவுகள் படிப்படியாக மீண்டும் நல்லுறவாக மாறத் துவங்கி இருக்கும்;

அல்லது

மன அழுத்தத்தால் தூக்கமில்லாமல் தவித்தவர்களுக்கு நல்ல தூக்கம் வரும்;

அல்லது

மன அழுத்தத்தால் நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள்,இனிமேல் ஆரோக்கியமாக வாழ ஆரம்பிப்பார்கள்;

அல்லது

வராக்கடன் வசூலாக ஆரம்பித்திருக்கும் அல்லது கொடுக்க வேண்டிய கடனை அடைக்கும் அளவுக்கு வருமான வாய்ப்புகள் தேடி வந்து கொண்டே இருக்கும்;

No comments:

Post a Comment