Wednesday, November 30, 2016

உங்கள் கடனைத் தீர்க்க உதவும் மைத்ர முகூர்த்தநேரம் 2016 டூ 2017


கலியுகத்தில் மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருமே கடன் அல்லது நோய் அல்லது எதிரி அல்லது நிம்மதியின்மை=இவைகளில் ஏதாவது ஒன்றில் சிக்க வேண்டும் என்பது பூர்வகர்மவிதியாகும்;தகுந்த குருவை கண்டறிந்து அவரைச் சரணடைந்தாலோ அல்லது தினமும்/வாரம் ஒருமுறை குலதெய்வ வழிபாடு செய்வதன் மூலமாகவோ இவைகளில் இருந்து சிக்காமல் வாழவும் முடியும்.

ஒருபோதும் பிறருக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொந்தரவு தராமல் இருப்பவர்களுக்கு பெரிய சிக்கல்கள் வராது;அப்படி இருக்கப் பழகுவது கொஞ்சம் சிரமம் தான்;

2009 ஆம் வருடம் முதல் வருடம் தோறும் மைத்ரமுகூர்த்தம் நேரத்தை கணித்து வெளியிட்டுவருகிறோம்;இந்த நேரத்தில் நாம் வாங்கிய கடனில் அசலில் ஒரு பகுதியைத் திருப்பித் தர வேண்டும்;அப்படி ஒருமுறை செய்தால் நமதுகடன் எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் அந்தக் கடன் தீர்ந்துவிடும்;

உதாரணமாக மாரிமுத்து என்பவரிடம் நீங்கள் ரூ.1,00,000/-கடன் வாங்கி இருக்கிறீர்கள்;கடன் வாங்கி 6 ஆண்டுகள் ஆகிவிட்டன;இப்போது என்ன நினைப்பீர்கள்? இந்த 6 ஆண்டுகளாக நாம் கொடுத்த வட்டித்தொகையை நினைத்து பிரமித்துப் போவீர்கள்;ஆனால்,கடனை அடைக்க வழியே தெரியாது;இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் நேரத்தில் ரூ.1000/-அளவுக்காவது பணத்தைக் கொண்டு போய் மாரிமுத்துவிடம் கொடுத்து,இந்தப் பணத்தை அசலில் வரவு வைத்துக் கொள்ளுங்கள்;என்று வேண்ட வேண்டும்;அவரும் அவரது வரவு செலவு ஏட்டில் வரவு வைக்க வேண்டும்;அப்படி ஒரே ஒரு முறை செய்தாலே அதன் பிறகு மீதி ரூ.99,000/-கடன் வெகு விரைவில் தீர்ந்துவிடும்;

கடந்த ஐந்து ஆண்டுகளில் இப்படி ஏராளமானவர்களின் கடன் கள் இந்த மைத்ரமுகூர்த்தத்தைப் பயன்படுத்தியதால் தீர்ந்தது.இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் நேரம் இந்தியாவின் தென் மாநிலங்கள்,ஸ்ரீலங்கா,மாலத்தீவு,அந்தமான் தீவுகள் வரை வாழ்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

அயல்நாடுகளில் வசிப்பவர்கள் இந்தியாவில் கடனை தீர்க்க விரும்பினால்,இந்திய நேரத்தில் அயல்நாட்டில் இருந்து பணத்தை அனுப்பலாம்;
வங்கிக் கடன் வாங்கியிருப்பவர்களும் இந்த நேரத்தைப் பயன்படுத்தலாம்;

கந்துவட்டி வாங்குபவர்களுக்கு இது பொருந்தாது;


10.12.16 சனி மதியம் 2.24 முதல் 4.24 வரை

25.12.16 ஞாயிறு காலை 5.20 முதல் 7.20 வரை

26.12.16 திங்கள் காலை 5.24 முதல் 7.24 வரை

27.12.16 செவ்வாய் காலை 5.28 முதல் 7.28 வரை

6.1.17 வெள்ளி  மதியம் 1.14 முதல் 3.14 வரை

3.2.17 வெள்ளி காலை 10.40 முதல் 12.40 வரை

18.2.17 சனி இரவு 10.24 முதல் 12.24 வரை

2.3.17 வியாழன் காலை 8.52 முதல் 10.52 வரை

25.3.17 சனி காலை 7.44 முதல் 9.44 வரை

25.3.17 சனி மதியம் 1.44 முதல் 3.44 வரை

25.3.17 சனி இரவு 7.44 முதல் 9.44 வரை

30.3.17 வியாழன் காலை 7.04 முதல் 9.04 வரை

இப்படிக்கு கை அருணமுனி. . .ஸ்ரீவில்லிபுத்தூர் 9092116990   9364231011

No comments:

Post a Comment