Thursday, July 14, 2016

அனைத்து கர்மவினைகளையும் அடியோடு நீக்கும் ஆடி மாத ஜபம்!

   
உலகில் பிறந்திருக்கும் நம் ஒவ்வொருவரும் கடந்து ஐந்து முற்பிறவிகளில் நாம் செய்த பாவ புண்ணியங்களின் மொத்தத்தை அனுபவிக்கவே  வாழ்ந்து வருகின்றோம்;ஆனாலும்,இறை சக்தியானது மிகவும் கருணை மிக்கது;

ஒவ்வொரு நாளுமே நாம் நமது கர்மவினைகளில் இருந்து விலகிச் செல்ல பலவிதமான விதிவிலக்குகளை நமக்கு காட்டிக்கொண்டே இருக்கின்றது;ஆமாம்! சாலை/தெருவில் நடந்து செல்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம்;யாராவது பசிக்குது? என்று கெஞ்சினால் அது உங்கள் கர்மவினைகளின் சுமையை குறைக்க வந்திருக்கும் தெய்வீக சுயபரிகாரமே! நீங்கள் அந்த ஆத்மாவின் பசியை நீக்கினால்,உங்கள் கர்மவினையின் ஒரு சிறுபகுதியை குறைத்துவிட்டீர்கள் என்று அர்த்தம்;

அதே போல,தினமும் ஒரு பசுவுக்கு அகத்திக்கீரை அல்லது வாழைப்பழம் தந்தாலும் உங்கள் கர்மவினையை குறைக்கின்றீர்கள் என்று தான் அர்த்தம்;

ஒரு பாழடைந்த சிவாலயத்தில் முதன் முறையாக தீபம் ஏற்றுகின்றீர்கள் எனில்,அடுத்த பிறவியில் நாடாளும் யோகம் உங்களைத் தேடிவரும் என்று அர்த்தம்;சிலருக்கு இப்பிறவியிலேயே!

முழுமையான கர்மவினைகளை ஒரே பிறவியில் தீர்த்துவிட முடியாது;தனி ஆளாக போராடினால்!

தகுந்த குரு கிடைத்துவிட்டால்,ஒரே வருடத்தில் அல்லது ஒரே மாதத்தில் ஏன் ஒரே நாளில் கூட நமது கர்மவினைகளின் சுமையை ஒரே வீச்சில் கரைத்துவிடமுடியும்;நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் அமைவது மிகவும் கடினமே!

ஒவ்வொரு ஆடிமாதமும் சூரியன்,ஆத்மாக்காரகனாகிய சந்திரனின் ராசியான கடகராசியைக் கடக்கின்றார்;ஆடி மாதத்தில் வரும் வளர்பிறை பஞ்சமி திதியன்றுதான் மஹா கால பைரவப்பெருமானின் துணை சக்தியான வராகி(ஸம்ஸ்க்ருதத்தில் வாராகி) லலிதா பரமேஸ்வரியிடம் இருந்து உதயமானாள்;

வைஷ்ணவம் தோன்றுவதற்கு பல கோடி ஆண்டுகளுக்கும் முன்பே உண்டானது சைவம்;

சைவம் தோன்றுவதற்கும் பல கோடி கல்பங்களுக்கும் முன்பே உருவானது தான் சாக்தம் எனப்படும் ஸ்ரீவித்யா வழிபாடு!

ஸ்ரீசக்கரம் என்ற வடிவில் பல கோடி சதுர கி.மீ.தூரத்திற்கு பிரபஞ்சத்தை காக்கும் பெண் சக்திகள் வசித்து அருளாட்சி புரிந்துவருகின்றன;லலிதா சகஸ்ரநாம ஸ்தோத்திரத்தையும்,பிரம்மாண்டபுராணத்தையும் வாசித்தால் தான் இது பற்றிய முழு விபரமும் நம்மால் அறிய முடியும்;

யார் லலிதா சகஸ்ரநாமத்தை முறையாக ஜபிக்கும் ஆற்றலை பெறுகின்றார்களோ,அவர்கள் அடுத்த சில பிறவிகள் மட்டுமே இப்பூமியில் எடுப்பார்கள்;

வராகியில் மூன்று விதமான அம்சங்களும்,64 விதமான வடிவங்களும் இருக்கின்றன;

முதல் வராகி ஸ்ரீலலிதா பரமேஸ்வரியால் தோற்றுவிக்கப்பட்ட படைத்தலைவி! இந்த அன்னை தனித்து வாழும் சக்தி!

இரண்டாவது வராகி அருணாச்சலத்தில் அபிதகுஜலாம்பாளாக அண்ணாமலையின் துணை சக்தியாக(உண்ணாமுலையாக) அருள் பாலித்து வருகின்றாள்;அண்ணாமலையின் இன்னொரு பெயர் சதாசிவம் ஆகும்;

மூன்றாவது வராகி உன்மத்த பைரவரின் துணை சக்தி ஆவார்;
ஒவ்வொரு கிரகத்திற்கும் பிராண தேவதை இருக்கின்றார்கள்;சூரியனின் பிராணதேவதை ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்+சொர்ணதாதேவி!
புதனின் பிராணதேவதை உன்மத்த பைரவர்+வராகி!


இந்த சதுர்முகி வருடத்தில் ஆடி மாத வளர்பிறை பஞ்சமி திதியானது 7.8.2016 ஞாயிற்றுக்கிழமை முழுவதும் இருக்கின்றது;

மனிதர்களாகிய நமக்குத் தான் பிறந்த நட்சத்திரம் பார்த்து அனைத்து சுபகாரியங்களையும் செயல்படுத்த வேண்டும்;ஆனால்,ஒரு மனிதன் இறந்துவிட்டால்,ஜன்ம நட்சத்திரம் செயலிழந்து போய்,இறந்த திதிதான் செயல்படுகின்றது;அதனால் தான் முன்னோர்கள் இறந்த திதி வரும் நாளில் முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்து வருகின்றோம்;(இதன்மூலம்,ஒருவர் இறந்து விட்டால்,அவர் தெய்வசக்தியாகி விடுகின்றார் என்றுதான் அர்த்தம்)


இறை சக்திகளுக்கு ஜன்ம நட்சத்திரம் என்று கிடையாது;திதி மட்டுமே உண்டு;விநாயகப் பெருமானுக்கு சதுர்த்தி,முருகக் கடவுளுக்கு சஷ்டி;பைரவப் பெருமானுக்கு அஷ்டமி;வராகிக்கு பஞ்சமி!(சில அவதாரங்கள் குறிப்பிட்ட நட்சத்திரத்தில் உதயமானதற்குக் காரணம் ஜோதிடக் கலைக்கு மனிதர்கள் மதிப்பு தரவேண்டும் என்பதற்காகவே!!!)




அன்னை வராகியின் அருள் யாருக்கெல்லாம் கிட்டும்?

மனதால் ஒரு போதும் பிறருக்கு தீங்கு தர நினைக்காமல்,தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருந்து பிறரின் பொறாமையால் பாதிக்கப்பட்டிருந்தால்,அவர்களுக்கு ஓடோடி வரம் தருபவள் இந்த பிரபஞ்ச அன்னை!

ஆயிரக்கணக்கில் செலவு செய்து,லட்சக்கணக்கில் பூஜை செய்து அன்னை வராகியிடம் எவராலும் வரங்கள் வாங்க முடியாது;


வராகி பரணி என்ற வராகி மாலை என்ற வராகி அந்தாதியை வாசித்துப் பார்த்தால்,அன்னை வராகியை வழிபடுபவர்களுக்கு எதிராக யார் செயல்பட்டாலும்,அவர்களை எப்படி துவம்சம் செய்வாள் என்றுதான் பாடல்களே வரும்;

இதன் உள்ளார்த்தம் என்ன?

பொறாமை எண்ணம் ஒருவருக்கு வந்தால்,அவர்கள் பிறரின் முன்னேற்றத்தை தடுக்க எந்த ஒரு கேவலமான வழிமுறைக்கும் போகத் தயங்க மாட்டார்கள் என்றுதான் அர்த்தம்;அப்படிப்பட்ட இழிவான மனமானது ஒரு போதும் திருந்தவே திருந்தாது;அவர்களை சம்ஹாரம் செய்தால் மட்டுமே அடங்குவர் என்பதையே வராகி பரணியின் பாடல்கள் தெரிவிக்கின்றது;


நீங்கள் எப்பேர்ப்பட்ட மாந்திரீக பாதிப்பில் இருந்தாலும்,இந்த விரதத்தினை முறையாகவும்,முழுமையாகவும் கடைபிடிப்பதன் மூலமாக அந்த மாந்திரீக பாதிப்பில் இருந்து மீண்டு விடுவீர்கள்;

தன்னைச் சரணடையும் தனது பக்தனையும்,அவனது குடும்பத்தையும் பாதுகாக்க எப்பேர்ப்பட்ட கைதேர்ந்த மந்திரவாதியையும் ஒழித்து கட்டத்தயங்கமாட்டாள் அன்னை வராகி!


16.7.16 சனிக்கிழமையன்று ஆடி மாதம் துவங்கி,16.8.16 செவ்வாய்க்கிழமையன்று ஆடி மாதம் நிறைவடைகின்றது;மறுநாள் 17.8.16 அன்று ஆவணி மாதம் பிறக்கின்றது;ஆவணி மாத பவுர்ணமியும் வருகின்றது;


இந்த 33 நாட்களும் பிரம்மச்சார்ய விரதம் இருந்து தினமும் இரவு 10 மணிக்கு மேல் 12 மணிக்குள் வராகி பரணியை யார் ஒரு முறை ஜபிக்கின்றார்களோ,அவர்களுக்கு அடுத்த சில வாரங்களில் (சிலருக்கு இந்த 33 நாட்களுக்குள்ளாகவே) அனைத்து கஷ்டங்களும்,கர்மவினைகளும் தூள் தூளாகிவிடும்;


இந்த 33 நாட்களும் என்ன செய்ய வேண்டும்?


வராகி பரணியை 3 நாட்களுக்குள்(15/7/16 வெள்ளி முதல் 17.7.16க்குள்) ஒருமுறை கையால் எழுத வேண்டும்;அப்படி எழுதியதையே தினமும் ஜபிக்க வேண்டும்;


வீட்டில் அன்னை வராகியின் படத்தை பிரேம் போட்டு வைத்துக் கொண்டு தினமும் அன்னைக்கு செவ்வரளி மாலை அல்லது தாமரைப்பூ மாலை அணிவிக்க வேண்டும்;


பச்சைத் துண்டின் மீது அமர்ந்து கொள்ளவேண்டும்;(ஒருபோதும் இந்த பச்சைத் துண்டினை துவைக்கக் கூடாது;வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது)

ஒரு மண் விளக்கில் இலுப்பை எண்ணெய் தீபத்தையும்;இன்னொரு மண் விளக்கில் நெய் தீபத்தையும் ஏற்றி வைக்க வேண்டும்;தரமான வாசனை பத்தியையும் ஏற்றி ஓம் வடிவில் அன்னைக்கு ஆரத்தி காட்டி பத்தி ஸ்டாண்டில் வைக்க வேண்டும்;ஆரத்தி காட்டும் போது நமது கோரிக்கைகளை வேண்டிக் கொள்ள வேண்டும்;

தினமும் கொஞ்சம் பேரிச்சம்பழம்(கொட்டை நீக்கப்பட்டது),ஒரு மாதுளம் பழம்,ஒரு செவ்வாழைப்பழம்,கொஞ்சம் தேன் அல்லது ஜிலேபி மற்றும் ஆரஞ்சுப் பழம் அல்லது பூந்தி படையலாக வைக்க வேண்டும்;*

ஓம் ரீங் வாத்தியாரைய்யா வாத்தியாரைய்யா

என்று ஐந்து முறை வராகி சித்தரை நினைவு கூர்ந்து ஜபிக்க வேண்டும்;அதன் பிறகே,வராகி பரணியை வாசிக்க வேண்டும்;
இன்று இரவு சாத்திய செவ்வரளி மாலை/தாமரைப்பூ மாலையை மறு நாள் இரவில் அகற்றிவிடவேண்டும்;

இன்று இரவு அன்னை வராகிக்கு படையலிட்ட பழங்கள்,இனிப்புக்களை மறுநாள் இரவு (வழிபாடு ஆரம்பிப்பதற்கு முன்பு)வீட்டில் இருப்பவர்கள் அதை பிரசாதமாக பகிர்ந்து சாப்பிடவேண்டும்;(தனித்து வாழ்ந்து வருபவர்கள் இவைகளை இரவு உணவாக மட்டுமே கூட சாப்பிடலாம்;ரத்த உறவுகள் அல்லாதவருக்கு தரக் கூடாது)

*கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருப்பவர்கள் தினமும் செவ்வாழை அல்லது பேரீட்சை மட்டுமாவது படையல் வைக்க வேண்டும்;

பெண்களும் அன்னையை வழிபடலாம்;சில இயற்கை உபாதை நாட்களன்று மட்டும் விடுமுறை விட்டுவிட்டு தொடரலாம்;

தினமும் தூங்கி எழுவதற்கு முன்பு கனவில் சில காட்சிகள் தெரியும்;அதைக் கொண்டு தாங்கள் அன்னையின் மனதில் எந்த அளவிற்கு இடம்பிடித்துவிட்டீர்கள் என்பதை உணரலாம்;


எவ்வளவுக்கு எவ்வளவு ரகசியமாக இந்த விரதத்தை செயல்படுத்துகிறீர்களோ,அவ்வளவுக்கு அவ்வளவு விரைவான பலனைப் பெறலாம்;(உடன் பிறப்புகள்,நெருங்கிய நட்புகளிடம் தெரிவிக்க வேண்டாம்)


வெகுதூர நாடுகளில் இருப்பவர்களுக்கு படம் வைத்து வழிபடும் சந்தர்ப்பமோ அல்லது படையலை தினமும் வைத்து வழிபடும் ப்ராப்தமோ இராது;அவர்கள் தினமும் இரவு 10 மணிக்கு மேல்(அந்தந்த நாட்டின் இரவு 10 மணிக்கு மேல்) 12 மணிக்குள் ஒருமுறை வீட்டில் / தங்கும் இடத்தில் வராகி பரணியை ஒரு தீபம் வடக்கு நோக்கி வைத்து கொண்டு கிழக்கு நோக்கி அமர்ந்தவாறு ஜபித்தாலும் பலன் உண்டு;


தீபம் வைத்து வழிபடக் கூடிய சந்தர்ப்பமும் சில நாடுகளில் வாழ்பவர்களுக்கு கிடைக்காது;பரவாயில்லை;வராகி பரணியை ஜபித்தால் மட்டும் போதும்;

33 நாட்கள் வெற்றி கரமாக முடித்துவிட்டவர்கள் பல ஆண்டுகளாக இருந்து வந்த வாழ்க்கைச் சிக்கல்களில் இருந்து மீண்டுவிடுவார்கள் என்பது வராகி சத்தியம்;

ஒரு மண்டலம் தொடர்ந்து பிரம்மச்சாரிய விரதம் இருக்க விரும்புவோர் 1.9.16 வியாழக்கிழமை வரை இந்த விரதத்தைத் தொடரலாம்;


இந்த நாட்களில் ஒருமுறையாவது அன்னை வராகி உங்களை தமது ஆலயத்திற்கு வரவழைத்து ஆசி தருவாள்;கடந்த பல நூற்றாண்டுகளாக பல லட்சம் அன்னை வராகியின் அன்பு மகன் களுக்கும்/மகள்களுக்கும் இப்படிப்பட்ட அரிய ஆசிகள் கிடைத்திருக்கின்றன;


இந்த விரதம் இருப்பவர்கள் தினமும் 108 முறை ஸ்ரீவாராஹி ஸகாயம் என்றும் எழுதலாம்;ஆனால்,கட்டாயம் இல்லை;


இந்த வழிமுறை இல்லறத்தாருக்கே உரியது;வராகி உபாசனை அல்ல;வராகி உபாசனை செய்வது துறவிகளுக்கே உரியது;



ஓம் அருணாச்சலாய நமஹ 

No comments:

Post a Comment