Sunday, July 31, 2016

வராகி அவதாரங்களில் முதன்மையான வராகி சக்திகள்:அஸ்வாரூடாதேவி & சம்பத்கரி வராகி!!!


ராஜராஜேஸ்வரியின் படைத்தலைவியாக பிரபஞ்ச அன்னை வராகி இருக்கின்றாள்;இவளது படையில் இருக்கும் குதிரைப்படைத்தளபதியாக இருப்பவள் வராகியின் 64 அவதாரங்களில் ஒருத்தியான குதிரைக்காரி என்ற அஸ்வாரூடா இருக்கின்றாள்;இவளது படையில் இருக்கும் யானைப்படையின் தலைவியாக சம்பத்கரி வராகி இருக்கின்றாள்;

நமது ஐம்புலன்களையும் அடக்கி ஆள்பவள் இவள்;இவளை உபாசித்தால்,அரசாங்கம்,அரசுகள்,அதிகாரத்தில் இருப்பவர்கள் அனைவரும் நமக்கு கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள்;நம்முடைய மனதில் உருவாகும் தேவையற்ற மற்றும் மித மிஞ்சிய சிற்றின்ப ஆசைகளை முழுமையாகக் கட்டுப்படுத்திட இந்த அன்னையைச் சரணடைவது மட்டுமே பிரபஞ்சத்தின் ஒரே வழி! (வேறு வழி இல்லை;)மேலும்,நான் என்ற அகங்காரம் அழியவும் இந்த அன்னை வழிபாடு அவசியம்;

எதிரிகளின் தீரவே தீராத,திருந்தவே திருந்தாத திமிரை அடக்கிட விரும்புவோர் சம்பத்கரி வராகியை வழிபடவேண்டும்;

இவையெல்லாம் முறையான தீட்சை பெற்றே வழிபடவேண்டிய வராகி வடிவங்கள்;

தஞ்சை பெரிய கோவிலுக்குள் இருந்து கொண்டு தமிழ்நாட்டையே ஆண்டுவருபவள் ப்ருஹத் வராகி;இந்த அன்னையை முறைப்படி யார் வழிபட்டு வருகின்றார்களோ அவர்கள் இந்த பூமியில் மனிதர்கள் வசிக்கும் அனைத்துப் பகுதிகளையும் வெற்றி கொள்வார்கள்;இந்த அன்னையை முறைப்படி வழிபட்டதால் தான் ராஜராஜசோழனின் படைகள் உலகத்தில் மூன்றில் இரண்டு பகுதியை கைப்பற்றி உலகத்தின் மிகப் பெரிய அரசாங்கத்தை உருவாக்கியது;இவரது சோழ சாம்ராஜ்ஜியம் இன்றைய இந்தியா முழுவதும்,பங்களாதேஷ்,திபத்,சீனா முழுவதும்,ஜப்பான்,மலேஷியா,சிங்கப்பூர்,ஹாங்காங்,கொரியத் தீபகற்பம்,பிலிப்பைன்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா,ஸ்ரீலங்கா முழுவதும் பரவியிருந்தது;

உலகத்தை முதன் முதலில் ஜெயித்தது அலெக்ஸாண்டர் என்பது திட்டமிட்ட பொய்;அலெக்ஸாண்டர் கைப்பற்றிய நிலப்பரப்பு,ராஜராஜசோழனின் சாம்ராஜ்ஜியத்தில் 100 இல் ஒரு பங்கு கூட கிடையாது என்பதுதான் உண்மை;

ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ
ஓம் ஹ்ரீம் மஹா வராகி நமஹ

ஓம் வராகி சிவசக்தி ஓம்






No comments:

Post a Comment