Tuesday, April 12, 2011

கர வருடத்தின் முதல் நாளில் ஓம்சிவசிவஓம் ஜபிக்கவும்.




ஆத்மாக் காரனாகிய ரவி எனப்படும் சூரியன் மேஷ ராசியில் நுழையும் நாளே தமிழ்ப் புத்தாண்டு ஆகும்.ஒவ்வொரு ராசியிலும் ரவி நுழையும் நாளில் நாம் நமது வீடு அல்லது கோவில் அல்லது மலையோரக் கோவில்களில் ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்.



ஜோதிடப்படி,ரவி ஒரு ராசியின் ஆரம்ப முனையில் நிற்கும்போது அதன் பலம் பல கோடி மடங்குகளாக இருக்கும்.இதனால்,மனிதர்களின் ஆத்மாவுக்கு அந்த நாளில் (சித்திரை1,வைகாசி 1 முதலான எல்லா தமிழ் மாதங்களிலும் முதல் நாட்கள்) அளவற்ற ஆத்மசக்தி கிடைக்கும்.எதிர்காலத்தில் இந்த துறையில் மேல்நாடுகள் ஆராய்ச்சி செய்வதற்காகவே செயற்கைக் கோள்களை சூரியனை நோக்கி ஏவும்.

அந்த நாட்களில் நாம் உயரமான இடத்திலிருந்து ஓம்சிவசிவஒம் ஜபித்துவந்தால்(குறைந்தது ஒரு மணி நேரம்) நமது கர்மவினைகள் குறையும்.தேவைகள் நிறைவேறும்.



இந்த கர வருடம் 14.4.2011 வியாழன் காலை 11.20 வாக்கில் பிறப்பதால்,காலை 11.30 முதல் 12.30 வரையிலும் நமது வீட்டு மாடியில் அல்லது அருகில் இருக்கும் ஏதாவது ஒரு கோவிலுக்குள் அல்லது அருகிலிருக்கும் மலைக்கோவிலில் உயரமான இடத்தில் மரத்து நிழலில் ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்.



கர வருடம் முழுவதும் வெற்றிகர வருடமாக நமக்கு இருக்கும்.

இந்த நாளில் 14.4.11 வியாழன் அன்று ஒரு போதும் நெகடிவ்வான வார்த்தைகளைப் பேச வேண்டாம்;சிந்திக்க வேண்டாம்.

உலகின் முதல் இனமாகிய தமிழ் இனமாகிய நாம் இந்த கர வருட பிறப்பன்று தமிழ் ஈழம் பிறக்க கோவில்களில் வேண்டுவோம்;ஈழத் தமிழ் ரத்தங்களுக்கு விடிவு கிடைக்க நமது குலதெய்வத்தின் கோவில்களில் சங்கல்பம் செய்வோம்.

No comments:

Post a Comment