Tuesday, April 12, 2011

இயற்கை விவசாயத்தினால் விளைவிக்கப்பட்ட அரிசி மற்றும் காய்கறிகள் விற்பனைக்கும்,சமூக சேவையுடன் கூடிய வியாபாரமும்






ரசாயன உரங்களால் வளர்க்கப்பட்ட அரிசி,காய்கறிகளை நாம் சாப்பிட்டு வருவதால்,தாய்ப்பால் கூட கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சாகி வருவதைப் பற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆய்வு நம் இந்தியாவில் நிரூபித்தது.

இந்த நிலையை மாற்றிட முழுக்க முழுக்க இயற்கை உரங்களைக் கொண்டு பயிரிடப்பட்டு அரிசி,காய்கறிகள் விளைவிக்கப்பட்டு நமது தமிழ்நாட்டிலும் விற்பனை செய்துவருகின்றனர்.

கிலோ ரூ.35/-,ரூ.45/-க்கு சாதாரண அரிசியும்,ரூ.45/-ரூ.55/-க்கு பொன்னி அரிசியும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இந்த இயற்கை உரங்களால் விளைவிக்கப்பட்ட அரிசியை நாம் தினமும் சோறாக்கி உண்பதால் சர்க்கரை நோய்,மூட்டு வலி முதலான நோய்களின் வேதனை குறைகின்றன.சில காலங்கள் தொடர்ந்து சாப்பிடும்போது நமது மருந்துச்செலவும் குறைகிறது.

படிக்கும் குழந்தைகள் இந்த வகையான உணவுகளைச் சாப்பிட்டு வரும்போது நினைவுத்திறன் அதிகரிக்கிறது;ஞாபக மறதி குறைகிறது என ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.

1 comment: