Saturday, March 17, 2018

ஜன்மச்சனியை சுபச்சனியாக மாற்றும் மங்கள சனி!!!

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு பிப்ரவரி 2020 வரை ஜன்மச்சனி நடைபெற்று வருகின்றது;
இதுவரை அசைவம் சாப்பிட்டாலோ,மது அருந்தினாலோ அன்று படாத பாடு பட வேண்டியிருக்கும்;

கும்பகோணத்தில் இருந்து நாச்சியார் கோவில் செல்லும் சாலையில் (திருவாரூர் மார்க்கம்) திருநரையூர் என்று ஒரு கிராமம் இருக்கின்றது;
($ திருநாரையூர் என்பது மயிலாடுதுறை அருகில் இருக்கும் சிவாலயம் என்பதை மறக்காதீர்கள்;ஒரு துணையெழுத்து மாறிவிட்டால் ஆலயமும் மாறிவிடும்$)
இங்கே அருள்மிகு பர்வதவர்த்தினி சமேத ராமனாதசுவாமி திருக்கோவில் இருக்கின்றது;இதுதான் இன்று மங்கள சனி கோவிலாக மாறியிருக்கின்றது;
இந்த ஆலயத்தினுள் சனிபகவான் தனது இரு மனைவிகளான மந்தா தேவி,ஜேஷ்டா தேவி மற்றும் இரு மகன்களான மாந்தி,குளிகன் உடன் இருந்து மங்கள சனியாக அருள் பாலித்துவருகின்றார்;
தனுசு ராசியில் பிறந்தவர்கள் ஏதாவது ஒரு சனிக்கிழமை இங்கே காலை 8 மணிக்கு செல்ல வேண்டும்;
கோவிலை வலம் வரும் போது கோவிலுக்குள் இருக்கும் தண்ணீர்க் குழாயில் வரும் தண்ணீரை நமது தலையில் தெளிக்க வேண்டும்;பிறகு,ராமனாதசுவாமியையும், அம்பாள் பர்வதவர்த்தினியையும் தரிசிக்க வேண்டும்;
அதன் பிறகுதான் மங்கள சனியை தரிசிக்க வேண்டும்;
11 மணி வரை இருந்து மனப்பூர்வமாக வேண்டிக் கொண்டு மீண்டும் ஒரு முறை பர்வதவர்த்தினி சமேத ராமனாதசுவாமியை தரிசனம் செய்ய வேண்டும்;முடிவாக கால பைரவரை தரிசிக்க வேண்டும்;
பிறகு வீடு திரும்ப வேண்டும்;வேறு எந்த கோவிலுக்கும் செல்லாமல் வீடு திரும்ப வேண்டும்;
அன்று முதல் ஒரு போதும் அசைவம்,மது தவிர்த்தே ஆக வேண்டும்;ஜன்மச்சனி சுபச்சனியாக,மங்கள சனியாக மாறிவிடும்;
தசரத மஹாராஜாவின் பெருமுயற்சியால் இந்த கோவில் நமக்கு கிடைத்திருக்கின்றது;இந்த கோவிலின் வயது 17,50,000 ஆண்டுகள் ஆகும்;
ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ

No comments:

Post a Comment