Wednesday, October 5, 2016

ஒரே நிமிடத்தில் உங்கள் ஆரோக்கியத்தை மதிப்பிடும் முகாம்!




உணவு,உறக்கம்,(முறையான) உடலுறவு இம்மூன்று “உ”க்களும் சரியான விகிதத்தில் யார் பின்பற்றுகின்றார்களோ,அவர்கள் ஆயுள் முழுவதும்,தமது வாழ்நாளின் இறுதி மூச்சு விடும்வரையிலும் நோய் நொடி இன்றி முழு ஆரோக்கியத்தோடு வாழ்வார்கள் என்று சித்தர்களின் ஆரோக்கிய குறிப்புகள் தெரிவிக்கின்றன;

காலை,மதியம்,இரவு என்று மூன்று வேளைகளிலும் பசித்தப் பின்னரே சாப்பிடவேண்டும்;வீட்டில் சமைத்ததை மட்டுமே சாப்பிடவேண்டும்;வீட்டில் சமைத்ததை சாப்பிட முடியாத போது,இயற்கை உரங்களால் விளைவிக்கப்பட்ட காய்கறிகள்,பழங்களை மட்டுமே சாப்பிடவேண்டும்;ஒரு போதும் பொறிக்கப்பட்ட உணவுகளையும்,மைதாவில் தயாரான உணவுகளையும் சாப்பிடவே கூடாது;

ஒவ்வொரு ஆணும்,பெண்ணும் 8 மணி நேரம் தூங்கவேண்டும்;தூங்கி எழும் நேரம் காலை 6 மணிக்குள் இருக்க வேண்டும்;இரவு தூங்க ஆரம்பிக்கும் நேரம் 9 மணி முதல் 10 மணிக்குள் இருக்க வேண்டும்;(இதைச் சீர்குலைப்பவையாக ஆரம்பத்தில் டிவி சீரியல்கள் இருந்தன;இப்போது அதை ஸ்மார்ட்போனும்,இணையமும் கைப்பற்றிக்கொண்டன)கடினமான தரையில்,மெல்லிய விரிப்பின் மீது தூங்குவது நன்று;ஏ சி அறையில் தூங்குவது ஆரோக்கியத்தைக் கெடுத்துவிடும்;ஜன்னலைத் திறந்து வைத்துத் தூங்குவது நன்று;

15 நாட்களுக்கு ஒருமுறை தம்பதியர் தமக்குள் தாம்பத்தியம் வைத்துக் கொள்ள வேண்டும்;தாம்பத்தியத்தை நிறுத்தி நிதானமாக ரசித்துச் செய்ய வேண்டும்;இன்றோ அப்படியா இருக்க முடியுது?இதிலும் அவசரப்படுவதால் தான் மன நலமும்,உடல் நலமும் கெடுகின்றன;ஆயுள் குறைகின்றது;

மாதம் ஒரு சனிக்கிழமை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்;(தமிழ் மாதத்தின் கடைசி சனிக்கிழமை இதற்கு மிகவும் ஏற்ற நாள்)மறுநாள் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று எக்காரணம் கொண்டும் வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்லாமல்(அலையாமல்)! இப்படிச் செய்வதன் மூலமாக,அடுத்த ஒரு மாதத்திற்கு உடல் அதிக வெப்பத்தையோ அல்லது குளிரையோ தாங்கும் திறனுடன் இயங்கும்;ஆனால்,இன்று ஆண்டுக்கு ஒருமுறை கூட எண்ணெய்க் குளியல் செய்ய நேரமில்லை;கிடைக்கும் எண்ணெய்யும் கலப்படம் அல்லது அதிகச் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயில் உயிராற்றலே இல்லை;

இந்த மூன்றுவிதிகளையும் நம் ஒவ்வொருவராலும் பின்பற்ற முடியாத அளவுக்கு உலகமயமாக்கல்,தாராளமயமாக்கல் கெடுத்துவிட்டது;எனவேதான் வீட்டுக்கு ஒரு நோயாளி என்ற சூழ்நிலையால் இன்று நம் ஒவ்வொருவரும் போதுமான உயிராற்றல்,சத்துக்கள் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டே இருக்கின்றோம்;(உலகமயமாக்கல்,தாராளமயமாக்கல் பற்றிய விளக்கம் விரைவில்!)

இதைச் சரி செய்ய வரும் 8.10.16 சனிக்கிழமை அன்று விருதுநகர் மாவட்டம்,ராஜபாளையம் மகா நகர்,முடங்கியார் சாலை(அப்பல்லோ மெடிக்கல்ஸ் அருகில் தெற்கு நோக்கி இருக்கும் சாலை)யில் இருக்கும் கமலம் அண்ணாமலை காம்ப்ளக்ஸில் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை அயல்நாட்டுக் கருவியின் மூலமாக முழு உடல் பரிசோதனை 60 விநாடிகளில் (ஒருவருக்கு) செய்யப்பட இருக்கின்றது;தாங்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ளலாம்;

அடுத்த 3 வது நிமிடத்தில் முழு உடல்பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் தாங்கள் எந்தெந்த இயற்கை உணவுப் பொருட்களால் செய்யப்பட்ட மாத்திரைகள்,சாறுகள் எவ்வளவு நாட்கள் சாப்பிடவேண்டும் என்ற மருத்துவ ஆலோசனையும் வழங்கப் படுகின்றது;இயற்கை உணவுப் பொருட்களால் செய்யப்பட்டவைகள் இங்கேயே விலைக்குக் கிடைக்கும்;அடுத்த 4 மாதங்களில் முழு ஆரோக்கியம் பெறுவீர்கள்;(கடந்த நான்கு ஆண்டுகளாக பல ஆயிரம் பேர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு முழு ஆரோக்கியம் பெற்றுள்ளார்கள்)


மிகவும் குறைவான முழு உடல் மருத்துவப் பரிசோதனைக் கட்டணம் உண்டு;மேலும் விபரம் அறிய மற்றும் முன்பதிவு செய்ய வாட்ஸ் அப் எண்: 8870832788

No comments:

Post a Comment