Sunday, October 16, 2016

நட்சத்திர ஆராதனைபவுர்ணமி(15.10.16) சிறப்புடன் நிறைவடைந்தது!













120 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த ஜன்ம நட்சத்திர ஆராதனை பவுர்ணமி விழா 15.10.16 சனிக்கிழமை அன்று விருதுநகர் மாவட்டம்,ராஜபாளையம் தாலுகா,சோழாபுரம் கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு குழல்வாய்மொழி அம்பாள் சமேத விக்கிரபாண்டீஸ்வரர் திருக்கோவிலில் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை இனிதே நிறைவு பெற்றது;


தத்புருட சிவம்,சிவபூசைச் செல்வர்,செந்தமிழ் வேள்வி வித்தகர்,சிவ.கணேசன் சிவாச்சாரியார் அவர்கள் தலைமையில் சிவவேள்வியும்,திருமுறை ஓதுதலும் நடைபெற்றது;கலசங்கள் ஏந்தி சிவசக்தியை பக்தர்கள் வலம் வந்து,ஜன்ம நட்சத்திர மரக்கன்றுகளை தமிழ்நாடு முழுவதும் வந்திருந்த பக்தர்களில் தேர்வு செய்யப்பட்டவர்கள் நட்டார்கள்;(ஒரே நட்சத்திரத்தில் பலர் வந்திருந்தமையால்,அவர்களில் ஒருவர் வீதம் 20 நட்சத்திரக்காரர்கள் 20 பேர் தேர்வு செய்யப்பட்டார்கள்)


பஞ்சவாத்தியங்கள் முழங்க உச்சிக்கால பூசையும்,சாயரட்சை பூசையும் சிறப்பாக நடைபெற்றது;பாரத தேசம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தந்திருந்தார்கள்;வர இயலாதவர்கள்,தமது பெயர்,ஜன்ம நட்சத்திரம்,வசிக்கும் ஊர் மற்றும் நிறுவனங்களின் பெயரை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டியிருந்தார்கள்;தினப்பிரதோஷ நேரமான மாலை 4.30 முதல் 6 மணி வரையிலும் அவர்களுக்கும்,இந்த விழாவில் முன்பதிவு செய்துவிட்டு கலந்து கொண்டவர்களுக்கும் பெயர்,ஜன்ம நட்சத்திரம்,வசிக்கும் ஊர் சொல்லி அர்ச்சனை செய்யப்பட்டது;சிலருக்கு ஜன்ம நட்சத்திரமும்,ராசியும் தெரியாமல் இருந்தது;அவர்களது பெயரும்,வசிக்கும் ஊரும் சொல்லி அர்ச்சனை செய்யப்பட்டது;7 நட்சத்திரங்களுக்கு மட்டும் இந்த 15.10.16 தாராபலம் இல்லாத நாளாக இருந்தபடியால்,இந்த 7 நட்சத்திர மரக்கன்றுகள் மட்டும் வேறு ஒரு நாளில் நட முடிவு செய்யப்பட்டுள்ளது;

120 வருடங்களுக்குப் பிறகு வந்த இந்த ஜன்ம நட்சத்திர ஆராதனை விழாவின் கதிர்வீச்சு 16.10.16 முதல் அடுத்த 9 நாட்கள் வரை தினமும் 10% குறைந்து கொண்டே வரும்;இதில் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டும் 7 நட்சத்திரங்களுக்கு மட்டும் தாராபலம் அதிகரிக்கும்;அந்த நாளில் மீதி 7 ஜன்ம நட்சத்திர மரக் கன்றுகள் நடப்படும்;


மதியமும்,இரவிலும் அன்னதானம் வழங்கப்பட்டது;நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை மஹாவில்வம் பவுண்டேசன் உறுப்பினர்களும்,தன்னார்வலர்களும் சிறப்பாக செய்திருந்தார்கள்;


ஓம் மஹாதேவசித்த குரு போற்றி! போற்றி!! போற்றி!!!

No comments:

Post a Comment