Thursday, October 13, 2016

120 வருடங்களுக்குப் பிறகு வர இருக்கும் நட்சத்திர ஆராதனை பவுர்ணமியில் கலந்து கொள்ள இருக்கும் அன்பர்களுக்கு..!



15.10.16 சனிக்கிழமையன்று வர இருக்கும் புரட்டாசி பவுர்ணமி அன்று விருதுநகர் மாவட்டம்,ராஜபாளையம் தாலுகா சோழாபுரம்(ராஜபாளையத்தில் இருந்து சங்கரன் கோவில் செல்லும் சாலையில் 8 வது கி.மீ தூரத்தில் இருப்பது) அருள்மிகு குழல்வாய்மொழி சமேத விக்கிரபாண்டீஸ்வரர் திருக்கோவிலில் ஜன்ம நட்சத்திர ஆராதனை பவுர்ணமி விழா காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற இருக்கின்றது;

இதில் கலந்து கொள்ள விரும்புவோர்கள் பின்வரும் பூக்களைக்கொண்டு வர முயற்சி செய்யும் படி மஹாவில்வம் பவுண்டேஷன் அன்புடன் கேட்டுக் கொள்கின்றது;

அசுபதி    =சாமந்தி
பரணி     =முல்லை
கார்த்திகை =செவ்வரளி
ரோகிணி   =பாரிஜாதம்
மிருகசீரிடம்=ஜாதிப்பூ
திருவாதிரை=வில்வப் பூ
புனர்பூசம்  =மரிக்கொழுந்து
பூசம்     =பன்னீர்மலர்
ஆயில்யம் =செவ்வரளி
மகம்     =மல்லிகை
பூரம்     =தாமரை
உத்திரம்  =கதம்பம்
அஸ்தம்  =வெண் தாமரை
சித்திரை  =மந்தாரை
சுவாதி   =மஞ்சள் அரளி
விசாகம்  =இருவாட்சி
அனுஷம் =செம்முல்லை
கேட்டை =பன்னீர் ரோஜா
மூலம்   =வெண் சங்கு மலர்
பூராடம்  =விருட்சி
உத்திராடம் =சம்பங்கி
திருவோணம்=சிகப்பு ரோஜா
அவிட்டம் =செண்பகம்
சதயம்   =நீலோற்பலம்
பூரட்டாதி =வெள்ளை அரளி
உத்திரட்டாதி=நந்தியா வர்த்தம்
ரேவதி =செம்பருத்தி


குறைந்தது 250 கிராம் அல்லது ஒரு பாக்கெட் உதிரிப் பூக்களாக கொண்டு வரவேண்டும்;மாலையாக கட்டினாலும்,கண்டிப்பாக உதிரிப் பூக்கள் கொண்டு வரவேண்டும்;

உங்கள் பகுதியில் இப்பூக்கள் கிடைக்காமல் இருந்தாலோ அல்லது தாங்கள் புறப்படும் வரை தங்களின் ஜன்ம நட்சத்திர பூ கிடைக்காவிட்டாலோ வருந்தவேண்டாம்;

120 வருடங்களுக்குப் பிறகு வரும் இந்த அற்புத நாளில் நட்சத்திர மலர்களால்,ஜன்ம நட்சத்திர விருட்சங்களை ஆராதித்து நடுவதன் மூலமாக இதுவரை இருந்து வந்த அனைத்து கர்மவினைகளும் கரைந்து காணாமல் போய்விடும்;வளமான,நலமான மற்றும் சிறப்பான எதிர்காலம் இந்த நாளில் இந்த ஆலயத்திற்கு வருபவர்களுக்கு நிச்சயமாகக் கிட்டிவிடும்;


ஓம் மஹாதேவ சித்தகுரு போற்றி! போற்றி!! போற்றி!!!  

No comments:

Post a Comment