Tuesday, October 18, 2016

மகத்தான பாதுகாப்பையும்,வலிமையையும் தரும் மஹாவராகிஜபம்!!!



உலகம் தோன்றியது முதல் இன்றுவரையிலும் இருக்கும் வழிபாட்டுமுறைகள் இரண்டே இரண்டு மட்டும் தான்!

முதலாவது லலிதாம்பிகை வழிபாடு என்ற ஸ்ரீவித்யா உபாசனை;மற்றது சிவ வழிபாடு;மற்றவைகள் அனைத்தும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவானவையே!

ஸ்ரீவித்யா உபாசனை என்பது மிகவும் பரந்துவிரிந்த ஆன்மீகக்கடல் போன்றது;இதன் ஆரம்பமுனைகளாக பலவகைகள் உள்ளன;அதில் முதன்மையானதும்,முக்கியமானதுமாக இருப்பதுதான் மஹாவராகி வழிபாடு!

லலிதாம்பிகை என்ற ராஜராஜேஸ்வரி என்ற லலிதா பரமேஸ்வரி என்ற திரிபுரசுந்தரி என்ற மனோன்மணி தான் சிவ கடவுள்களையும் இயக்கும் முழு முதல் பெண் சக்தி!
இவளது புருவ மத்தியில் இருந்து தோன்றியவள் தான் மஹாவராகி! (நமது புருவமத்தியில் சூட்சுமமாக இருந்து நம்மை வழிநடத்துவதும் இவளே!)

ராஜராஜேஸ்வரியின் படைகளை நடத்தும் தலைமைத் தளபதியாக இருப்பவள் தான் மஹாவராகி!

அதன் பிறகு,புதன் கிரகத்தின் ப்ராணதேவதையாக இருப்பவர் உன்மத்த பைரவர்;இவரது துணை சக்தியாக ஒரு வராகி சக்தியை மஹாவராகி தோற்றுவித்தாள்;இவர்கள் இருவரும்(உன்மத்த பைரவரும்,வராகியும்) நமது புத்தியில் நின்று நம்மை இயக்கிவருகின்றார்கள்;

நாம் செய்யும் செயல்களை எட்டுவகைகளாகப் பிரிக்கலாம்;இந்த எட்டு வகைச் செயல்கள் மூலமாக 64 வகையான பாவம் அல்லது புண்ணியத்தை நம் ஒவ்வொருவராலும் செய்ய முடியும்;எனவே தான் மனிதர்களின் வாழ்க்கையை நிர்ணயிக்க நவக்கிரகங்களை சதாசிவன் என்ற அண்ணாமலையார் படைத்தார்;நவக்கிரகங்களின் பிராணதேவதைகளாக அஷ்டபைரவர்களையும் ஆதியோகியான அருணாச்சலேஸ்வரர் தோற்றுவித்தார்;

அஷ்ட கர்மா என்பதுதான் மாந்திரீகம் ஆகும்;வசியம்,மோகனம்,ஸ்தம்பனம்,ஆகர்ஷணம்,
வித்வேஷணம்,பேதனம்,மாரணம் என்ற எட்டுவிதமான செயல்கள் தான் இவை!இந்த எட்டு செயல்களிலும் கைதேர்ந்தவர்கள் பாரத தேசம் முழுவதும் 100 பேர்கள் இருந்தால் அதிகமே! வசியம்,ஸ்தம்பனம் இந்த இரண்டையும் கற்றுக் கொண்டுதான் இன்று ஆன்மீக ஸேவை ஆற்றிட பலர் பொதுவாழ்க்கைக்கு வருகின்றார்கள்;


அஷ்ட கர்மாக்களை இயக்குவது அஷ்டபைரவர்களே! அஷ்ட பைரவர்களின் சூட்சும சக்திகளாக இருந்து அவர்களையே இயக்குவது அஷ்டவராகிகளே!!!

எந்த ஒரு கடவுளையும் முறைப்படி பூஜை,யாகம் என்று வழிபட்டால் அந்தக்கடவுள் பூஜை செய்தவருக்கு,பெரும் அளவில் பணம் செலவு செய்து யாகம் நடத்தியவருக்கு வரம் தந்துதான் ஆகவேண்டும்;அந்த மனிதன் நல்லவனா அல்லது அயோக்கியனா அல்லது சுயநலத்திற்குச் செய்தானா என்றெல்லாம் பார்க்க முடியாது;

ஆனால்,மஹாவராகியை அப்படி பூஜை,யாகம்,ஜபம் செய்து ஏமாற்றிவிட முடியாது;அன்னை மஹாவராகியை ஜபிக்க ஆரம்பித்த சில நாட்களிலேயே அவள் நமது மனதிற்குள் புகுந்து நாம் யார்? எதற்காக இன்று முதல் இவளை நினைத்து ஜபிக்க ஆரம்பிக்கின்றோம்? என்று கவனிப்பாள்;அப்போது நாம் யாருக்கும் மனதால் கூட தீங்கு நினைக்காமல் இருந்து பிறர் நமக்கு மகத்தான துரோகங்களும்,துயரங்களும் தந்து அதை எதிர்கொள்ளக் கூட முடியாமல் தவிப்பவர்களுக்கு ஒடோடி வந்து காப்பாள்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

தன்னைச் சரணடைந்த தமது பக்தர்களை காப்பாற்றுவதற்காக எப்பேர்ப்பட்ட மந்திரவாதிகளையும் ஒழித்துக் கட்டத் தயங்கமாட்டாள்;அதுமட்டும் அல்ல;இதுவரை பிறர் தமது பக்தர்களுக்குச் செய்த துரோகம்,மாந்திரீகத் தீமைகள் என்னென்ன என்பதை தமது பக்தர்களுக்குப் புரியவைப்பாள்;சில காலம் விடாமல் ஜபித்து வரும் போது அதில் இருந்து மீட்டு நம்மை வளமோடும்,சுகத்தோடும் வாழ வைப்பாள்;

எனவே,பின்வரும் அன்னை மஹாவராகியின் 12 பெயர்களை காலையில் 108 முறையும்,இரவில் 108 முறையும்(45 நிமிடங்கள் ஜபித்தால் போதும்;எண்ண வேண்டாம்) ஜபித்துவருக!

ஓம் ரீங் வாத்தியார் ஐயா,வாத்தியார் ஐயா
பஞ்சமி
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரி
சமயசங்கேதா
வராகி
போத்ரிணி
சிவை
வார்த்தாளி
மகாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரி
அரிக்நி

இவைகள் தான் அந்த 12 பெயர்கள்;

 தினமும்  ஜபித்துவந்தவர்களுக்கு அன்னை மஹாவராகி வரங்களை அள்ளிக் கொடுத்திருக்கின்றாள்;

பலரது நீண்டகால வாழ்க்கைச் சிக்கல்கள் தீர்ந்திருக்கின்றன;

பலர் மாந்திரீகத்தினால் பாதிக்கப்பட்டு வாழ்ந்து வந்தவர்கள் அனைவரும் அதில் இருந்து விடுபட்டுள்ளார்கள்;

விரிவாக எழுத அன்னை மஹாவராகி அனுமதிக்கவில்லை;

ஓம் அகத்தீசாய நமஹ


No comments:

Post a Comment