Tuesday, March 15, 2016

கடவுளும் மனிதனின் சிந்தனையும்


இந்த உலகில் நான் மட்டும் துன்பத்தை அனுபவிக்கவில்லை;கோடி கோடியான மக்கள் துன்பத்தை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்;ஆனால்,ஒவ்வொருவரும் தான் மட்டும் வாழ்வில் துன்பத்தை அனுபவிப்பதாக நினைத்துக் கொண்டு வாழ்கின்றனர்;

ஆனால்,ஈசனுக்குத் திருவிளையாடலும் கிடையாது;தொழிலும் கிடையாது;

இது போன்ற விஷயங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் ஈசனாகிய இறைவன்!

ஏனென்றால், மெய்,வாய்,கண்,மூக்கு,செவி,கரணங்கள்,கருவிகள் அனைத்தையும் கொடுத்து,நம் கையில் பணத்தையும் கொடுத்து,தொழிலையும்(அல்லது வேலையையும்) கொடுத்து,
“இது நல்லது;இது கெட்டது;யுக தர்ம நியதிகளுக்குத் தக்கவாறு சற்று மாறுபடும்;இதை வைத்து நீ பிழைத்துக் கொள்: என்று மட்டும் ஈசன் கூறுகின்றான்;

இறைவன் கொடுத்த விஷயங்களை வைத்துக் கொண்டு முறையாக வாழ நமக்குத் தெரியவில்லை;அவ்வாறு வாழத் தெரியாமல்,அனைத்தையும் கொடுத்த ஈசனையே நிந்திக்கிறோம்;


No comments:

Post a Comment