Tuesday, March 15, 2016

நாட்டின் பாரம்பரியத்தை மாற்றிய சிந்தனைவாதிகள்!


நேருவின் ஆட்சிக்காலத்தில்,நேரு பின்பற்றிய வறட்டுத்தனமான சோஷலிஷ சித்தாந்தத்தால் நாட்டின் பொருளாதாரம் நாசமானது ஒரு பக்கம் இருக்க,மறுபக்கம் ஊடகம்,ஒவ்வொரு மாநிலத்திலும் மாவட்ட அளவிலும்,நகர அளவிலும் இருக்கும் இலக்கிய அமைப்புகள்,கல்வி நிறுவனங்களிலும் இடதுசாரிகள் “முற்போக்குவாதிகள்” என்ற முகமூடியுடன் ஊடுருவினர்;ஊடுருவி இந்த நாட்டின் கல்வி மற்றும் பண்பாட்டை சீரழித்தனர்;

அதற்கு உதாரணம்:டெல்லியில் அமைந்திருக்கும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைத் துவக்கிய போது,வரலாற்று உண்மைகளைத் தொகுத்து வெளியிடப் போகிறோம்;எனவே,அதற்குரிய ஆவணங்களான செப்புப் பட்டயங்கள்,ஒலைச்சுவடிகள்,கல்வெட்டுக்களை எம்மிடம் தாருங்கள் என்று டெல்லி முழுக்க அறிவித்தனர் இந்த இடதுசாரி கல்வியாளர்கள்;டெல்லி மக்களும் பல நூற்றாண்டுகளாக தமது பரம்பரைப் பொக்கிஷமாக பாதுகாத்துவந்த ஒலைச்சுவடிகள்,பட்டயங்களை டெல்லிப் பல்கலைக்கழகத்தில் குவித்தனர்;

இந்த இடதுசாரி கல்வியாளர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

அனைத்தையும் படி எடுக்காமலேயே,பிரதி எடுக்காமலேயே எரித்துவிட்டனர்;அழித்துவிட்டனர்;அதில் எப்பேர்ப்பட்ட வரலாற்று உண்மைகள் அழிந்தனவோ!!!

கிறிஸ்தவ ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியினால் பாரத நாட்டின் பெரும் வரலாற்றுத் தலைவர்களான சாணக்கியர்,குப்தர்கள்,மராட்டிய மாநிலத்தில் பிறந்து தேசபக்தியையும்,தெய்வபக்தியையும் தமது நாட்டின் ஒவ்வொரு குழந்தைக்கும் ஊட்டும் விதமாக வாழ்ந்து காட்டிய வீரசிவாஜியின் வீரதீர சாகசங்கள் போன்றவை சிறுமைப்படுத்தப்பட்டு,முகலாய அரசர்களான அக்பர்,ஷாஜகான்,அவுரங்கசீப் போன்றவர்களின் வரலாறும்,திப்பு சுல்தான்,ஹைதர் அலி போன்றவர்களின் வரலாறும் எவ்வாறு பெரிதுபடுத்தப்பட்டதோ அதையே தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி இடதுசாரிகள் சுதந்திர இந்தியாவில் இந்த மண்ணுக்கே உரிய கலாச்சாரம்,பண்பாடு மற்றும் வரலாற்றை நாம் அறிந்து கொள்ளவிடாமல் செய்துவிட்டனர்;அப்படி இவர்கள் செய்து 70 ஆண்டுகள் ஓடிவிட்டன;

கூடவே கிறிஸ்தவப் பிரசங்கங்களும் மறைமுகமாக நுழைக்கபப்ட்டது;அது எப்படி என்றால்,கிறிஸ்துவ மிஷனர்களின் சேவை பெரிதுபடுத்திக் காட்டப்பட்டது;கிறிஸ்துவப் பாதிரிமார்களே அன்பின் உறைவிடமாகவும் கருணைக் கடலாகவும் இருப்பது போலவும் சித்தரிக்கப்பட்டு லட்சக்கணக்கான கதைகள்,கவிதைகள்,கட்டுரைகள்,விளம்பரங்கள்,திரைப்படங்கள்,விளம்பர வாசகங்கள்,விளம்பர போட்டோக்களில் திணிக்கப்பட்டன;70 ஆண்டுகளாக!!!

கிறிஸ்துவர்களான ஆங்கிலேயனின் ஆட்சியில் ஒவ்வொரு ஊரிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை கல்விச் சேவைப்பணிக்காகவும்,சிறுபான்மையினர் நலனுக்காகவும் என்று இலவசமாகப் பெற்று,அதில் கட்டப்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அரசு உதவி என்ற பெயரில் சம்பளமும் வழங்கப்பட்டதை வசதியாக மறைத்துவிட்டனர்;உண்மையில்,கிறிஸ்துவ ஆங்கிலேயன் வருவதற்கு முன்னர் தமிழ்நாட்டில் மட்டும் ஒரு லட்சம் திண்ணைப்பள்ளிக்கூடங்கள் இருந்தன என்பது நமக்கு மறைக்கப்பட்டது;

கிறிஸ்துவப் பாதிரிமார்கள் பற்றி ஆக்கபூர்வமாக ஊடகங்களிலும்(மாத இதழ்,வார இதழ்,தினசரி செய்தித்தாள்,வானொலி விளம்பரம்,டிவி விளம்பரம்,பிட் நோட்டீஸ் விளம்பரம்)கதை,கவிதை,கட்டுரை,தொடர்கதை,நெடுங்கதை
போன்றவைகளிலும் சித்தரிக்கப்பட்டு வந்த அதே நேரத்தில்,இந்து ஆன்மீகவாதிகள் பிற்போக்குத்தனத்தின் இருப்பிடமாகவும் சித்தரிக்கப்பட்டனர்;

ஆனால்,உண்மையில் கிறிஸ்துவர்கள் கூட,கிறிஸ்து பாதிரிமார்கள் அன்பின் உறைவிடமாக இருப்பவர்கள் என்பதை ஒத்துக் கொள்வதில்லை;பிற தொழில்களைப் போல,பாதிரித் தொழிலும் ஒரு தொழில் அவ்வளவுதான்;சிரத்தையுடன் தொழில் செய்பவர்கள் உண்மையிலேயே அந்தப் பதவிக்கு உரிய கண்ணியத்துடன் இருக்கிறார்கள்;ஆனால்,பெரும்பாலான பாதிரிமார்கள் அப்படி இருப்பதில்லை;


நன்றி:கல்விக்கூடங்களா? கயவர் கூடங்களா? என்ற கட்டுரையில் இருந்து;பக்கம் 8,சுதேசிச் செய்தி,வெளியீடு  மார்ச் 2016

No comments:

Post a Comment