Saturday, February 20, 2016

பக்தியால் நமக்கு வர இருக்கும் சோதனைகள்,அவமானங்கள்,துன்பங்களை 90% குறைக்க முடியும்!


96 கோடி தடவை ராமா என்ற பெயரை தனது வாழ்நாள் முழுவதும் ஜபித்தவர்,தனது 97 வது வயதில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி,சீதாதேவி,லட்சுமணன்,அனுமன் சமேதமாக தரிசனம் செய்தார்;

26 கோடி தடவை சிவாய நம,சிவாய நம என்று ஜபிக்க வேண்டும்;அதன் பிறகு, செம்பைப் பார்த்தால், அது தங்கமாக மாறிவடும்;என்ற இந்த  சிவரகசியத்தை
நமக்கு சித்தர்களின் தலைவரும்,தமிழ் மொழியின் தந்தையுமாகிய அகத்திய மகரிஷி நமக்கு போதித்திருக்கிறார்;

சில குறிப்பிட்ட சிவமந்திரங்களை அண்ணாமலை கிரிவலத்தின் போது மட்டும் ஜபித்து அண்ணாமலையாரை தரிசித்தவர்களும் நம்மிடையே இந்தக் காலத்திலும் வாழ்ந்து வருகின்றனர்;


பலர் பல முற்பிறவிகளில் அன்னை அரசாலை(வராகி)யை வழிபட்டுள்ளனர்;அவர்கள் இப்பிறவியில் சில நாட்கள் அன்னையைச் சரணடைந்ததன் மூலமாக இப்பிறவியில் இது வரை இருந்து வந்த வறுமை,வேதனைகள்,அவமானங்கள் நீங்கி சுகமாக வாழ்ந்துவருகின்றனர்;

26.2.2016 வெள்ளிக்கிழமையன்று விருச்சிகராசிக்குள் செவ்வாய் பெயர்ச்சி ஆகப் போகிறார்;(45 நாட்களுக்கு ஒருமுறை ஒரு ராசியைக் கடக்கும் இவர் தற்போது ஆறரை மாதமாக தனது விருச்சிகராசியில் இருக்கப் போகிறார்)ஆகி 19.9.2016 வரை விருச்சிகச்சனியுடன் சேர்ந்து இருக்கப் போவதால்,12 ராசிக்காரர்களுக்கும் மனத்தடுமாற்றம்,திடீர் ஆவேசம்,திடீர் தற்கொலை எண்ணம்,கோபமான மன நிலையில் வாகனத்தை ஒட்டிச்செல்வது என்று நடைபெற இருக்கிறது;

ஏற்கனவே,100 நாட்களுக்கும் மேலாக அன்னை அரசாலை(வராகி)யை வழிபட்டு வருபவர்களுக்கு இந்த ஆறரை மாதங்கள் பெரிய அளவு துன்பங்கள் வராது;அன்னை அரசாலை(வராகி)யின் கருணை மனத்தினால் நிம்மதியாக இந்த கால கட்டத்தைக் கடந்துவிடுவீர்கள்:

மற்றவர்கள் இந்த மறுபதிவினை வாசித்தப் பின்னராவது, அன்னை அரசாலை(வராகி)யைச் சரணடைவது நன்று;எதற்காக இதை மீண்டும் நினைவூட்டுகிறோம்?

எது கோடீஸ்வர வாழ்க்கை தெரியுமா?
கடன் இல்லாமல்,நோய் நொடி இல்லாமல்,தினசரி வாழ்க்கை அமைதியாகவும்,நிம்மதியாகவும்  ஓடிக்கொண்டிருந்தால்,அதுவே கோடீஸ்வர வாழ்க்கை;

அசைவம் தவிர்த்துவிட்டு,இந்த மந்திர ஜபத்தை ஜபிப்பது அவசியம்;மது அருந்துவதையும் கைவிடவும்;


அரசாலையின் அருளைப் பெற்றுத்தரும் வராகி சித்தரின் பெயருடன்(பெயரைச் சேர்த்தால் 13 பெயர்கள்!!!)


ஓம் ரீங் வாத்தியாரைய்யா வாத்தியாரைய்யா
பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரீ
சமயசங்கேதா
வராகீ
போத்ரிணி
சிவா
வார்த்தாளீ
மஹாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரீ
அரிக்னீ

அன்னை அரசாலை(வராகி) சிவனும்,சக்தியும் இணைந்த வடிவமே! எனவே,அன்னையை வழிபடுவதன் மூலமாக ஒரே சமயத்தில் சிவனையும்,சக்தியையும் ஒருங்கே வழிபடுவதற்குச் சமம்;சிவலிங்கம் என்பது சிவசக்தி கலப்பே! சிவலிங்க வழிபாட்டிற்கு இணையானது அன்னை அரசாலை(வராகி) மந்திர ஜபம்!

கடலுக்குள் மூழ்கிக் கிடந்த பூமியை வராக அவதாரம் எடுத்து தனது கொம்புகளால் தூக்கி நிறுத்தியவர் மஹாவிஷ்ணு;அப்படி தூக்கி நிறுத்தும் சக்தியை அன்னை அரசாலை(வராகி)யிடம் இருந்து பெற்றவர் மஹாவிஷ்ணு;அவரது பத்து அவதாரங்களில் ஒன்றுதான் வராஹ அவதாரம்;எனவே.அன்னை அரசாலை(வராகி)யை வழிபடுவது வைஷ்ணவ வழிபாட்டிற்கும் இணையானது;

வராகி மாலையில் 32வது பாடலில் முதல் வரியைக் கவனியுங்கள்;சிவஞானபோதகி என்று வரும்;ஈசனைப் பற்றி அறிய ஏராளமான நூல்கள் உள்ளன;அவைகளில் முதன்மையானது சிவஞான போதம்!

இந்த சிவஞானபோதத்தை மனிதர்களுக்கு புரியும் விதமாக போதிக்கும் ஆசிரியை,குரு அன்னை அரசாலை மட்டுமே!


ஓம் வராகி சிவசக்தி ஓம்

No comments:

Post a Comment