Tuesday, April 13, 2010

12 ராசிக்காரர்களுக்கும் விக்ருதி வருடப்பலன்கள்

விக்ருதி வருட ஜோதிடப்பலன்கள்

இதுவரை ஏழரைச்சனியால் கஷ்டப்பட்டுவந்த கடகராசிக்காரர்கள்,இந்த விக்ருதி வருடத்தின் முதல் நாளிலிருந்து மிக நல்ல செய்தியைப் பெறுவார்கள்.எந்த வேலையில் சேருவது? அல்லது எந்தத் தொழிலை ஆரம்பிப்பது? என்ற குழப்பம் நீங்கும் நாள் இந்த ஆண்டுப்பிறப்பு.
இதுவரை இருந்துவந்த வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்ந்துவந்த நிலை, இனி, பெரும் செல்வச்செழிப்பை நோக்கிச் செல்லும்.
உங்களை சிறிதும் மதிக்காமல் இருந்தவர்கள் உங்களைத் தேடி வரத்துவங்குவர்.(நமது வாழ்க்கையில் யாரும்,எதுவும்,எப்போதும் நிலையில்லை என்ற மனநிலை உங்களுக்குள் தோன்றும்)

இதே நிலைதான் அஷ்டமச்சனியை அனுபவித்துவந்த மகர ராசிக்காரர்களுக்கும்.

மேஷம்,விருச்சிகம்,ரிஷபம்,தனுசு,துலாம் ராசிக்காரர்கள் மிகவும் நிதானமாகவும் திட்டமிட்டும் தமது வருவாயை செலவழிக்க வேண்டும்.
மேஷம்,விருச்சிகம் ராசிக்காரர்கள் 15.5.2010 வரை பொறுமை காக்க வேண்டும்.அதுவரை உங்களைச் சீண்டுபவர்களிடமிருந்துகூட, விலகிச் செல்வது நன்று.ஏழுமாதங்களாக பல்வேறுமுறைகளில் அவமதிப்பை,கவனக்குறைவைப் பார்த்த நீங்கள் அட்லீஸ்ட் 2.5.2010 வரை மட்டுமாவது பொறுமை காக்கவும்.அன்று குருபகவான் மீனராசிக்கு அதிசாரம் ஆவதால்,அன்றுமுதல் குருவின் பார்வை உங்கள் ராசிநாதனாகிய செவ்வாயைப் பார்க்கிறார்.அன்று முதல்,படிப்படியாக உங்களைப் பலப்படுத்திக்கொள்ளுங்கள்.

கும்பம் மற்றும் கன்னிராசிக்காரர்களுக்கு முறையே அஷ்டமச்சனி,ஜன்மச்சனியை அனுபவித்துவருகின்றனர்.குருவின் அதிசாரத்தால் 60% கஷ்டம் நீங்கி சுகம் பெறுவர்.

சிம்மம் மற்றும் மீனராசியினர் எதையும் யோசித்துச்செய்வது நல்லது.கடந்த காலத்தவறுகள் திடீரென விஸ்வரூபம் எடுக்கலாம்.

No comments:

Post a Comment