Monday, February 7, 2011

மேல்நாட்டு இதழியல் முறையும்,கீழ்நாட்டு இதழியல் வடிவமைப்பும்




இலங்கையின் அதிபர் இராஜபக்ஷேவுக்கு கல்லீரலில் புற்றுநோய் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.இதனால்,இதற்கு முந்தைய புகைப்படங்களை விட,தற்போதைய புகைப்படத்தில் முகத்தில் வீக்கம் தெரிகிறது.

இதுதான் மேல்நாட்டு இதழியல் முறைப்படி உலகம் முழுவதும் பரவியிருக்கும் செய்தி.



இனி கீழ்நாட்டு இதழியல் முறைப்படி,இந்த செய்தியை வாசிப்போமா?



எத்தனையோ பிறவிகளாக சேர்த்துவைத்த புண்ணியத்தின் விளைவாக இலங்கை நாட்டின் மன்னனாகும் வாய்ப்பு,இந்தப்பிறவியில் இராஜ பக்ஷேவுக்கு கிடைத்தது.அப்படி கிடைத்த வாய்ப்பினை அவர் தனது ராஜதந்திரத்தினால் இலங்கையின் சமாதான புறா என்ற பெயரை எடுத்திருக்கலாம்.உலக வரலாற்றில் அழியாத அற்புதமான தலைவர் என்ற பெயரையும் எடுத்திருக்கலாம்.

ஆனால்,குறுகிய கண்ணோட்டத்தாலும்,அரக்கத்தனத்தை வெளிப்படுத்திட வாய்ப்பு கிடைத்தது போலவும்,தனது சிங்கள இனத்தின் காவலனாகவும் காட்டிக்கொள்ளும் விதமாக தனது நாட்டின் குடிமக்களையே கொடூரமாகவும்,மனித குல தர்மங்களை மீறியும்,ஒரு ட்ரில்லியன் (ஆயிரம் கோடி கோடி)ஹிட்லருக்குச் சமமாகவும் அழித்து இந்த அரிய மானிடப்பிறவியையும்,அற்புத அதிபர் பதவியின் மரியாதையையும் கெடுத்துக்கொண்டார்.

தமிழினத்தைச் சேர்ந்த பெண்கள்,சிறுவர்கள்,முதியவர்களை இன்று வரையிலும் நிம்மதியாகவும்,மன மகிழ்ச்சியோடும் வாழ வைக்காவிட்டாலும் பரவாயில்லை;தினசரி வாழ்க்கையையே நரகத்தை விடவும் வாழ வைத்து,புத்த மதத்தின் மாண்பையே சிதைத்து,இன்று கல்லீரல் புற்றுநோயாளியாகிவிட்டார்.

இவர் செய்த கொடூரபாவத்தை இவர் நீக்கிட இன்னும் பல கோடி மனித பிறப்பெடுக்க வேண்டியிருக்கும் என இந்துதர்ம நீதி நூல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment