Friday, February 25, 2011

தமிழர்களின் புராதனக்கலைகளில் ஒன்று அவதானம்




அவதானம் என்றால் நினைவுத்திறன் என்று பெயர்.அஷ்டாவதானி என்றால் எட்டு விதமான விஷயங்களை ஒரே நேரத்தில் கவனிப்பது என்று பெயர்.சோடேச அவதானி என்றால் ஒரே நேரத்தில் 16 விதமான விஷயங்களைக் கவனித்து பதிலை பின்னர் கூறுதல் என்று பொருள்.சதாவதானி,தசாவதானி என்றெல்லாம் நமது தாத்தாக்கள் இருந்திருக்கிறார்கள்.

தசாவதானி எனில் ஒரே நேரத்தில் பத்து விஷயங்களை கவனித்தல்

சதாவதானி எனில் ஒரே நேரத்தில் நூறு விஷயங்களை கவனித்தல்

சகஸ்ராவதானி எனில் ஒரே நேரத்தில் ஆயிரம் விஷயங்களைக் கவனித்தல்


நமது கூர்ந்த கவனிப்புத் திறனை வளர்க்க இந்த பயிற்சியில் கலந்துகொள்ளலாம்.ஒவ்வொரு ஞாயிறும் பயிற்சி இருக்கும்.

உதாரணமாக,திருக்குறளின் 1330 பாடல்களை மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும்.அதன்பிறகு, கரும்பு என்ற சொல் எத்தனாவது பாடலில் இருக்கிறது என்பதை சொல்லும் திறனை வளர்த்துக்கொள்ளலாம்.

தமிழர்களின் புராதன நுண்கலைகளில் ஒன்று மீண்டும் தமிழ்நாடு முழுவதும் பரவ இந்த பதிவு வெளியிடப்படுகிறது.



1 comment: