Friday, December 18, 2009

இந்தியாவின் பிரதமராவாரா ஆன்மீக சூப்பர் ஸ்டார் ரஜினி!


ஆன்மீகத்திலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்

தமிழ்த்திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த் அவர்கள்.தனது திரைப்படங்களில் அவர் வலியுறுத்தும் கருத்துக்கள் அனைத்துமே குடும்பத்தைக் காக்கும்விதமாகவும்,பெற்றோரை மதிக்கும்விதமாகவும் இருக்கின்றன.அவரே பல தடவை தனது ரசிகர்களை உங்கள் குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என பேசியிருக்கிறார்.

ருத்ராட்சத்தினை முக்கிய காரெக்டராக வைத்து தயாரித்த படம் பெரும் வெற்றி பெற்றது.

அருணாச்சலம் என்ற பெயரில் தனது கதாபாத்திரத்தை அவர் உருவாக்கினார்.அண்ணாமலை என்ற பெயரில் தனி திரைப்படத்தில் நடித்தார்.இம்மூன்றுமே அவருக்குள் திரு அண்ணாமலையின் மகிமைகளால் எழுந்த தாக்கமே!

பாபா படம் மட்டும் ஹிட் ஆகவில்லை;அந்த படத்தையும் இமயமலையில் எடுக்க விரும்பினார்.பல்வேறு ஆன்மீகக் காரணங்களால் அங்கே பாபா படத்தை எடுக்க முடியவில்லை.

திரு அண்ணாமலையின் கிரிவலப்பாதையில் ஒளிரும் சோடியம்விளக்குகள் அனைத்தும் நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அன்பளிப்பாக அளித்தவை.இத்தனைக்கும் இப்படி அன்பளிப்பு தந்ததை வெளியில் காட்டிக்கொள்ளவேண்டாம் என உரியவர்களிடம் அவர் தெரிவித்தும் எப்படியோ வெளியில் இந்த தகவல் கசிந்துள்ளது.

13.11.2009,14.11.2009,15.11.2009 இந்த மூன்று நாட்களும் ரஜினிகாந்த் அவர்கள் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு இரண்டு உதவியாளர்களுடன் அவர் வந்திருக்கிறார்.அந்த நாட்களைப்பற்றி பஞ்சாங்கத்தில் பார்த்தால், அது மாதப்பிரதோஷமும், மாதசிவராத்திரியும் உள்ள நாட்களாக வருகின்றன.

அவரது கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனான நான் விரும்புவது என்னவென்றால், ரஜினிகாந்த் இந்தியாவுக்கே பிரதமராக வேண்டும் என்பதே!

மகர ராசி, திரு வோணநட்சத்திரத்தில் பிறந்தவர் ரஜினிகாந்த்.ஜோதிடப்படி, உலக கோடீஸ்வரர்களில் 100 க்கு 80 பேர் மகரராசிக்காரர்களாக இருப்பர்.மகர ராசி சனி பகவானின் ராசி.சனியோ தர்மம்,நீதி,நியாயத்தின் அதிபதி.ஆக, நேர்மையாக வாழ்வதும், தர்மத்தை காக்கவும்,அநீதி செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் எப்பேர்பட்டவராக இருந்தாலும் அவர்களை எதிர்த்துப்போராடும் குணம் சனியின் ராசியில் பிறந்தவர்களின் குணமாக இருக்கிறது.

ஆக,சாதுக்களின் நாடான நம் பாரதம்,சித்தர்களின் ஆசி பெற்ற ரஜினியின் ஆளுகைக்கு வந்தாலே அது நமது நாட்டுக்கு மட்டுமல்ல;உலகத்துக்கே நன்மை பயக்கும்.

15.12.2009அன்று குரு பெயர்ச்சியாகிவிட்டது.மகர ராசியில் நீசமாக இருந்த குரு பகவான் கும்பராசிக்கு இடம் மாறிவிட்டார்.மகரராசிக்காரர்களுக்கு இனி பொற்காலமே!எனவே,நமது ரஜினிகாந்த் அவர்கள் அரசியல்கட்சி ஆரம்பித்து, நாத்திகத்தை ஒழித்துக்கட்டி,ஆன்மீகபூமியான தமிழ்நாட்டில் மீண்டும் ஆத்திகம் வலுப்பெற வழிசெய்ய வேண்டும்.விரைவில்,இந்தியாவையே ஆட்சி செய்ய வேண்டும் என நான் விரும்புகிறேன்.

கி.பி.2011 ஆம் வருடம் ஒரு கலையுலகத்தைச் சேர்ந்தவர்தான் இந்தியாவின் ஜனாதிபதியாவார் என ஒரு ஆங்கில ஜோதிடப் புத்தகத்தில் படித்திருக்கிறேன்.ஒரு வேளை அது நம்ம ரஜினிகாந்த் ஆக இருக்குமோ?

6 comments:

  1. முதல்வராகும் அளவுக்கு ரஜினிகாந்துக்கு அறிவும் கிடையாது மீறி அப்படி நடந்தாலும் நாட்டுக்கு எந்தபயனும் இருக்காது நண்பரே ... ஆன்மீக வாதியாக முயர்சிதுக்கொனடிருக்கும் ஒரு சராசரி நபர் தான் ரஜினி ... ஆசைகள் எது இன்னும் விட்டபாடில்லை ஆன்மீகத்தையும் அரைகுறையாக தான் தெரிந்துகொண்டிருக்கிறார் நமது தலைவர் ,,(!!)

    ReplyDelete
  2. ஒரு கண்டக்டராக வாழ்ந்த ரஜினி இன்று நூறுகோடி ரூபாய்களுக்கு அதிபதி ஆனது தனது கடும் உழைப்பு + 1% அதிர்ஷ்டம் தான் காரணம்.

    சுயநலத்தின் உச்சமான தொழில்தான் சினிமா.அந்த மாயச்சுரங்கத்திலேயே முதலிடம் இருக்கும் ரஜினி தமிழ்நாட்டை ஆளும் தகுதி உள்ளவர்தான்.

    யாருக்கு தகுதி உண்டோ அவருக்கு உரிய பதவி உரிய நேரத்தில் கிடைக்கும்.

    ரஜினியால்,ரஜினியின் திரைப்படங்களால் எத்தனை லட்சம் தமிழ் இளைஞர்கள் தனது பெற்றோரையும்,உடன் பிறந்த சகோதரிகளையும் பொறுப்பாக பராமரித்துவருகிறார்கள் என்பது தெரியுமா?ஆழ்வார்கள்,நாயன்மார்கள் வாழ்ந்த தமிழகத்தில் நாத்திகம் என்ற நரகல் வாடை பரவியது.அதிலிருந்து மீட்டு, தமிழகத்தில்
    ஆன்மீக எழுச்சியை உருவாக்கிய ஒரு நடிகர் ரஜினிகாந்த்.அவர் ஆன்மீகத்தில் அவர் எந்தளவுக்கு முன்னேறியிருக்கிறார் என்பது அவருக்கும் அவரது குருநாதருக்கு மட்டுமே தெரிந்திருக்கும்.
    உலகில் உள்ள அனைத்தும் நம்மைத் தேடி வரட்டும் என்பதே ரிக் வேதத்தின் மையக்கருத்து.அந்த கருத்தை ஒரு சினிமா நடிகராக இருந்து தன்னால் ஆன அளவுக்கு செயல்படுத்திவரும் ரஜினிக்கு ஆளும் தகுதி தானாகவே வரும்.

    ReplyDelete
  3. Respected Sir
    Please dont encourage any film personality for Indian politics. We had enough proof that there is no change in the condition of people so far. I didnt expect this article from good people like you

    ReplyDelete
  4. Rajini sir can do.
    only a good spiritual man can direct people to right path.we all are seeing rajini sir for long time.
    his simplicity and spiritualness will make him as a good leader.

    VALGA VAIYAGAM!! VALGA VALAMUDAN!!

    ReplyDelete
  5. நாகராஜ் அவர்களே! நீங்கள் சொல்லும் கருத்து நிஜமாகவும் யதார்த்தமாகவும் இருந்தாலும்,பாமர மக்கள் இன்னும் ஓசி டிவிக்குத்தானே அலைகிறார்கள்.
    ரூ.5000/-கொடுத்து ஒரு சிறு கலர் டிவி வாங்கக் கூட வக்கில்லையா?நமக்கு.இருந்தும் இலவசம் என்ற போதையினை இந்த திராவிடக்கட்சிகள் நமது தன்மானத்தமிழர்களுக்குக் கொடுத்து,கொடுத்து கெடுத்தல்லவா வைத்திருக்கிறார்கள்.
    கலர் டிவி இலவசமாகக் கொடுப்பதால் சன் டிவி மற்றும் கலைஞர் டிவியின் விளம்பர வருமானம் பல மடங்கு எகிறும் என்பது சாதாரண மக்களுக்கும்,படித்த அறிவாளிகளுக்கும் தெரியவில்லை.
    அறிவாளியைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்புணர்ச்சி நமது தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கிறதா?
    முதல்வன் படத்தில் முதலமைச்சராக வரும் அர்ஜீன் ,அரசியல் என்னும் சாக்கடையில் சிக்கி தனது பதவியைக் காப்பாற்றும்போது,நிம்மதியாக ஆட்சி செய்யத்தான் நம்முடைய ஆள்வோர்களுக்கு நேரமிருக்குமேயொழிய,மக்கள் நலமெல்லாம் மண்ணாங்கட்டி.
    அரிதாரம் பூசி,நடிப்பவர்கள் தானே நமக்கு கடவுள்களாகத் தெரிகிறார்கள்.அப்படிப்பட்ட அரிதாரம்பூசும் மனிதர்களில் சிறந்தவர் எனப்பார்த்தால் ரஜினிதானே இருக்கிறார்.

    ReplyDelete
  6. //கி.பி.2011 ஆம் வருடம் ஒரு கலையுலகத்தைச் சேர்ந்தவர்தான் இந்தியாவின் ஜனாதிபதியாவார் என ஒரு ஆங்கில ஜோதிடப் புத்தகத்தில் படித்திருக்கிறேன்.ஒரு வேளை அது நம்ம ரஜினிகாந்த் ஆக இருக்குமோ?//

    2012 வந்தாச்சு இப்போ சொல்லுங்க பிரதிபா பாட்டி பதவி காலம் முடிய போகுது ரஜினி தான் ஜனாதிபதி ஆவாரா?

    ReplyDelete