Showing posts with label திருவண்ணாமலை. Show all posts
Showing posts with label திருவண்ணாமலை. Show all posts

Wednesday, June 23, 2010

கோடிமடங்கு புண்ணியம் தரும் திருவாதிரை கிரிவலம்

விக்ருதி வருடத்தின் திருவாதிரை நட்சத்திர நாட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.இந்த நாட்களில் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றால் மற்ற நாட்களில் கிரிவலம் செல்லுவதால் கிடைக்கும் புண்ணியத்தை விட பலகோடிமடங்கு புண்ணியம் கிடைக்கும் என அருணாச்சலபுராணம் தெரிவிக்கிறது.
மேலும்,இந்த நாட்களில் கிரிவலம் செல்லும்போது செய்யும் அன்னதானம்,ஆடைதானம்,விளக்குதானம்,மந்திர ஜபம்,சொர்ண தானம்,தீப தானம்,மரக்கன்று நடுதல் போன்றவை பல கோடி மடங்குகள் நன்மையளிக்கும்.
எனவே, எனதருமை ஆன்மீகக் கடல் வாசகர்களே! நீங்கள் இந்த நாட்களில் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் செல்லவும்;கிரிவலம் செல்லும்போதெ அன்னதானம் செய்து நீங்களும்,உங்கள் வாரிசுகளும்,உங்கள் முன்னோர்களும் வளமுடன் வாழ்க!!!

10.7.2010 சனி மாலை 5.56 முதல் 11.7.2010 ஞாயிறு மாலை 4.59 வரை

6.8.2010 வெள்ளி நள்ளிரவு 1.56 முதல் 7.8.2010 சனி நள்ளிரவு 1.01 வரை

3.9.2010 வெள்ளி காலை 9.48 முதல் 4.9.2010 சனி
காலை 9.00 வரை

30.9.2010 வியாழன் மாலை 5.36 முதல் 1.10.2010 வெள்ளி மாலை 4.53 வரை

27.10.2010 புதன் நள்ளிரவு 1.23 முதல் 28.10.2010 வியாழன் நள்ளிரவு 12.44 வரை

24.11.2010 புதன் காலை 9.08 முதல் 25.11.2010 வியாழன் காலை 8.35 வரை
21.12.2010 செவ்வாய் மாலை 4.47 முதல் 22.12.2010 புதன் மாலை 4.20 வரை

17.1.2011 திங்கள் நள்ளிரவு 12.35 முதல் 18.1.2011 செவ்வாய் நள்ளிரவு 12.13 வரை

14.2.2011 திங்கள் காலை 8.25 முதல் 15.2.2011 செவ்வாய் காலை 8.10 வரை

13.3.2011 ஞாயிறு மாலை 4.15 முதல் 14.3.2011 திங்கள் மாலை 4.06 வரை

9.4.2011 சனி நள்ளிரவு 12.09 முதல் 10.4.2011 நள்ளிரவு 12.07 வரை

Wednesday, March 3, 2010

விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட திருஅண்ணாமலையின் பழமை


விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட திருவண்ணாமலையின் பழமை

திருவண்ணாமலையின் வயது 360 மில்லியன் வருடங்கள் ஆகின்றன என்பதை புவியியல் வல்லுநர்கள் இங்கு வந்து ஆராய்ந்து கூறியுள்ளனர்.அதே சமயம்,கிரிவலப்பாதையில் அமைந்திருக்கும் அஷ்ட(8)லிங்கங்களின் வயது 3000 ஆண்டுகளாகும்.

கி.பி.2000 க்குப்பிறகு நடந்த ஒரு புவியியல் ஆராய்ச்சிப்படி,அஷ்ட லிங்கங்களும் தத்தம் திசைக்கு நேராக அமையவில்லை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது கிழக்குத் திசையின் அதிபதியான இந்திர லிங்கம் துல்லியமாக கிழக்குத்திசையை நோக்கி அமையவில்லையாம்;

தென்கிழக்குத் திசையின் அதிபதியான அக்னிலிங்கம் துல்லியமாக தென்கிழக்கு திசையை நோக்கி அமையவில்லையாம்;

தென் திசையின் அதிபதியான எம லிங்கம் துல்லியமாக தென் திசையை நோக்கி அமையவில்லையாம்;

தென் மேற்கு திசையின் அதிபதியான நிருதி லிங்கம் துல்லியமாக தென் மேற்குதிசையை நோக்கி அமையவில்லையாம்;

மேற்கு திசையின் அதிபதியான வருண லிங்கம் துல்லியமாக மேற்கு திசையை நோக்கி அமையவில்லையாம்;

வடமேற்குதிசையின் அதிபதியான வாயுலிங்கம்

துல்லியமாக வடமேற்கு திசையை நோக்கி அமையவில்லையாம்;

வடக்கு திசையின் அதிபதியான குபேர லிங்கம்

துல்லியமாக வடக்கு திசையை நோக்கி அமையவில்லையாம்;

வடகிழக்கு திசையின் அதிபதியான ஈசான்ய லிங்கம்

துல்லியமாக வடகிழக்கு திசையை நோக்கி அமையவில்லையாம்;

சரி! 3000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அஷ்ட லிங்கங்களை நிர்மாணித்த நமது முன்னோர்கள் முட்டாள்களா? இல்லை.இல்லவே இல்லை.இங்குதான் விஞ்ஞான ஆய்வு தேவைப்படுகிறது.

இந்த விஞ்ஞான புவியியல் ஆய்வின்படி,அஷ்ட லிங்கங்களும் தத்தம் திசையிலிருந்து 30 டிகிரி விலகியிருக்கிறது.ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை துருவ நட்சத்திரம் 10 டிகிரி நகரும்.அதன் அடிப்படையில் திசைகளின் போக்கும் பத்துடிகிரி விலகிப்போகும்.

இந்த வானியல் உண்மையின் அடிப்படையில்,அஷ்டலிங்கங்கள் தத்தம் திசையை விட்டு 30 டிகிரி வரை விலகி இருக்கிறது என்றால் அவை 3000 ஆண்டுகள் பழமையானது என்றுதானே அர்த்தம்.