Monday, January 13, 2020

புனர்பூ தோஷத்தை நீக்கும் சுய வழிபாடு


புனர்பூ தோஷத்தை நீக்கும் சுய வழிபாடு

உங்கள் ஜாதகப்படி,நீங்கள் கடக லக்னத்தில் பிறந்தவரா? அல்லது கடக ராசியில் பிறந்தவரா? ஆம்   எனில்,உங்களுக்கு புனர்பூ தோஷம் இருக்கின்றது;இந்த தோஷம் உங்களுடைய வாழ்க்கைத் துணையுடனும்,தொழில் கூட்டாளிகளுடனும்,நெருங்கிய நண்பர்களுடனும் தொடர்ந்து நல்லுறவுடன் வாழ இயலாத சூழலை உருவாக்கியிருக்கும்;


தவிர,சபையில் சொல்லமுடியாத சோகங்கள் அல்லது அவமானங்கள் அல்லது குறைகள் வாழ்நாள் முழுவதும் துரத்திக் கொண்டே இருக்கும்;இதைச் சரிசெய்ய பாம்பாட்டி சித்தர் நமக்கு ஒரு பரிகாரத்தை போதித்திருக்கின்றார்;

சுமாராக 1,400 ஆண்டுகளுக்கு முன்பு கடக லக்னம்,பூசம் நட்சத்திரத்தன்று ஸ்தாபிக்கப்பட்டவர் தான் அபய சனீஸ்வரர் ஆவார்;இவர் விருதுநகர் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்தூர் மாநகரில் அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத வைத்தியநாத சுவாமி ஆலயத்தில் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகின்றார்;

புனர்பூ தோஷம் தீர,ஏதாவது ஒரு சனிக்கிழமை காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள்  மூலவராகிய அருள்மிகு வைத்தியநாதசுவாமிக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்;அருள்மிகு சிவகாமி அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும்;

முடிவாக,சனீஸ்வரருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்;அபிஷேகம் செய்த பின்னர்,வில்வ இலைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும்;பெயர்,நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்;

கோவிலை விட்டு வெளியே வரும் போது சாதுக்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்;அல்லது கோவில் வாசல் பகுதியில் திரியும் தெரு நாய்களுக்கு ஒரு வேளை உணவு தானம் (பிஸ்கட் அல்லது பொறை) செய்ய வேண்டும்;


இப்படி ஒரே ஒருமுறை செய்தாலே புனர்பூ தோஷம் நீங்கிவிடும்;அப்படி நீங்கியதை நீங்கள் உணர 90 நாட்கள் வரை ஆகும்;

No comments:

Post a Comment