Tuesday, December 24, 2019

செல்வ வளங்களை அருளும் பைரவ மந்திரம்



வறுமை நீங்கி செல்வ வளம் பெருகிட:
கண்டிப்பாக அசைவம்,மது இரண்டையும் கைவிட்டிருக்க வேண்டும்;இல்லாவிட்டால்,இம்மந்திர ஜபம் பலன் கிடைப்பது கடினம்;

250 கிராம் அல்லது 500 கிராம் கொண்ட தங்கக் காசு வைத்திருப்பவர்கள்,அதில் சுத்தமான சந்தனத்தை தங்கக் காசின் மீது வைக்கவும்;அந்த சந்தனத்தின் மீது குங்குமம் வைக்கவும்;
இந்த தங்கக் காசினை பைரவரின் பாதம் அருகில் வைத்து பின்வரும் மந்திரத்தை 1008 முறை ஜபிக்கவும்;

ஓம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் சொர்ணப்ரதாயி நம ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம்

மறுநாள் ஜபிக்கும் முன்பு,தங்கக் காசின் மீது இருக்கும் சந்தனம்,குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைக்கவும்;


வீட்டில் ஜபிக்க விரும்புவோர்,ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் போட்டோவின் முன்பாக இந்த தங்கக் காசினை வைக்கவும்;முதல் நாள் வைத்த சந்தனம்,குங்குமத்தை அடுத்த நாள் முழுமையாக எடுத்து நெற்றியில் அணிய வேண்டும்;

தங்கக் காசு இல்லாதவர்கள்,மேலே கூறிய வழிமுறையைப் பின்பற்ற வேண்டியதில்லை;அவர்களுக்கு எளிமையான வழிமுறை இதோ:


இம்மந்திரத்தை மட்டும் வீட்டில் தினமும் 1008 முறை ஜபித்து வரலாம்;ஆனால்,ஒவ்வொரு வளர்பிறை அஷ்டமி நாள்,தேய்பிறை அஷ்டமி நாள்,வெள்ளிக்கிழமைகளில் உங்கள் ஊரில் இருக்கும் சிவாலயம் சென்று அங்கே இருக்கும் கால பைரவர் சன்னதியின் முன்பாக அமர்ந்து 1008 முறை இம்மந்திரத்தை ஜபிக்க வேண்டும்;

முதல் 48 நாட்கள் ப்ரம்மச்சார்யத்தைக் கடைபிடித்தால்(எந்த ஒரு ரொமான்ஸ் நடவடிக்கையிலும் ஈடுபடாமல் இருப்பது=படம் கூட பார்க்காமல் இருப்பது அவசியம்) அளவற்ற செல்வ வளத்தை படிப்படியாகத் தரும்;


தினமும் 1008 முறை மந்திரம் ஜபிப்பவர்களுக்கு முதல் நாளில் இருந்தே உடல் வெப்பம் அடையும்;சூடான உணவில் நெய் சேர்த்து தினமும் சாப்பிட வேண்டும்;அல்லது தினமும் ஒருமுறையாவது இளநீர் அருந்தி வர வேண்டும்; மோர் மற்றும் தண்ணீர் அதிகம் அருந்த வேண்டும்;

No comments:

Post a Comment