Thursday, December 12, 2019

செல்வ வளம் தரும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஜபம்!!!


செல்வ வளம் தரும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஜபம்!!!

உங்களுடைய இந்த பிறவி துவங்கும் போதே உங்களுக்கு ஒரு நாளுக்கு இவ்வளவு தான் வருமானம் கிடைக்க வேண்டும் என்று தலைவிதியாக எழுதப்பட்டிருக்கின்றது;அப்படி எழுதுவதற்குக் காரணம்,நீங்கள் போன நான்கு ஜென்மங்களில் செய்த புண்ணியச் செயல்களின் தொகுப்புதான்! 

சில குறிப்பிட்ட சேவைகளை இந்த பிறவியில் சிவாலயத்தில் தினமும் செய்து வந்தால்,அடுத்த பிறவியில் இந்த பிறவியில் வாழ்ந்ததை விடவும் இன்னும் செல்வ வளத்துடனும்,செல்வாக்குடனும் வாழ முடியும்;


உங்களுடைய இந்த பிறவியில் இதுவரை கிடைத்து வரும் தினக்கூலி அல்லது வாரச் சம்பளம் அல்லது மாத வருமானம் இன்னும் அதிகரித்திட பல்வேறு வழிமுறைகள் ஆன்மீகத்தில் இருக்கின்றன;தகுந்த உண்மையான குரு கிடைத்தாலும் அவரது உபதேசத்தை பின்பற்றி முன்னுக்கு வரலாம்;


அல்லது


பின்வரும் முறைப்படி தினமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஜபம் செய்து வருவதாலும் வருமானத்தை அதிகப்படுத்திட முடியும்;


நீங்கள் மூன்று விதமான கட்டுப்பாடுகளை கண்டிப்பாக பின்பற்றியே ஆக வேண்டும்;

1.எக்காரணம் கொண்டும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அசைவம் சாப்பிடாமல் இருக்க வேண்டும்;மது,போதைப் பொருட்களை உபயோகம் செய்யக் கூடாது;

2.தினமும் அதிகாலை 4 முதல் 6 மணிக்குள் இந்த ஜபத்தை பின்பற்றி வர வேண்டும்;

3.உங்கள் வீட்டினருக்கு மட்டும் இந்த ஜப முயற்சி பற்றி தெரிவிக்கலாம்;வேறு எவருக்கும் எக்காரணம் கொண்டும் தெரிவிக்காமல் இருந்தால் மட்டுமே இந்த ஜபமுயற்சி வெற்றியைத் தரும்!


வேண்டிய பொருட்கள்:
ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படம்
நாட்டுப் பசு நெய் மாதம் ஒரு கிலோ
தாமரைத் தண்டுத் திரி 30
மஞ்சள் அல்லது வெண்மை நிற விரிப்பு =புதியது
சந்தன பத்தி 30
இவைகள் ஒரு மாதத்திற்கு வரும்;இப்படி 36 மாதங்கள் வரை விடாப்பிடியாக தினமும் அதிகாலையில் பின்வரும் மந்திரத்தை ஜபிக்க வேண்டும்;


வடக்கு நோக்கியவாறு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வைக்க வேண்டும்;கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்;விரிப்பின் மீது அமர வேண்டும்;பசு நெய்யில் தீபம் வடகிழக்குத் திசையில் ஏற்றிவிட்டு,சந்தன வாசம் தரும் பத்தியை பொருத்த வேண்டும்;

ஓம் சொர்ணாகர்ஷண பைரவாய

தனதான்ய சம்பூர்ண சத்யப்ரதாபாயா

தாரித்ரிய விமோசனாயா

ஓம் ஆம் மவ்வும் சிவய நம



ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம்,36 மாதங்கள் விடாமல் ப்ரம்ம முகூர்த்த நேரத்தில் ஜபித்து வருவதால்,உங்கள் வருமானம் படிப்படியாக அதிகரிக்கும்;பொருளாதாரத்தில் தன்னிறைவை எட்டிவிடுவீர்கள்:

துக்க வீடுகளுகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலையில் 5 நாட்கள் மட்டும் ஜப முயற்சிக்கு விடுமுறை விட வேண்டும்;

பின் குறிப்பு:ஒரு நாளுக்கு ஒரு மணி நேரத்தை விடவும் குறைவான நேரம் ஜபித்தால், 36 மாதங்களில் பலன் கிடைக்காது;மிகவும் தாமதம் ஆகும்;

அசைவம்,மதுவைக் கைவிடாவிட்டால்,இந்த ஜபமுயற்சி வெற்றியைத் தரும் என்று எண்ணாதீர்கள்;



No comments:

Post a Comment