Thursday, November 21, 2019

மார்கழி மாதத்தின் பெருமைகளில் ஒன்று!!!


மார்கழி மாதத்தின் பெருமைகளில் ஒன்று!!!

உங்களுடைய நீண்டகால பிரச்சினை ஒன்றை தீர்க்க ஈசன் திருவுள்ளம் கொண்டிருக்கின்றார்;

நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்!!!

17.12.2019 செவ்வாய்க்கிழமை அன்று மார்கழி மாதம் ஆரம்பமாக இருக்கின்றது;அன்று முதல் 30 நாட்களுக்கு தினமும் அதிகாலையில்(3.30 முதல் 4.30 வரை) குளித்துவிட்டு,உங்கள் ஊரில் இருக்கும் சிவாலயத்திற்குச் செல்ல வேண்டும்;

இந்த 30 நாட்களும் முதன் முதலில் உங்கள் ஊரில் இருக்கும் ஈசனை தரிசிப்பவராக நீங்கள் இருக்க வேண்டும்;(நீங்கள் மட்டும் இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்)


இப்படிச் செய்தால்,தை 1 ஆம் நாளன்று உங்களுடைய நீண்டகாலப் பிரச்சினை ஒன்று முடிவுக்கு வந்துவிடும்;
கடந்த பல நூற்றாண்டுகளாக இந்த முதல் சிவ தரிசனம் பல கோடி மனிதர்களுக்கு பல கோடி துயரங்களை நீக்கி இருக்கின்றது;


சிவாலயத்திற்குள் நுழைந்தது முதல் வெளியேறும் வரை ஏதாவது ஒரு சிவமந்திரத்தை ஜபிக்க வேண்டும்;

அதுவரை போனிலோ,நேரிலோ எவரிடமும் பேசக் கூடாது;


சிவாய நம,சிவசிவ,நமச்சிவாய,ஓம் நமச்சிவாய என்று எந்த ஒரு சிவ மந்திரத்தையும் ஜபிக்கலாம்;

No comments:

Post a Comment