Monday, October 28, 2019

முன்வினை தீர்ந்து நிம்மதியாக வாழ சத்குருவின் உபதேசம்!!!


தீராத பகை,எதிர்ப்புகள் நிரந்தரமாக விலக சத்குருவின் உபதேசம்!!!

உங்களுடைய வாழ்க்கையில் இதுவரையிலும் தேவையில்லாத எதிரிகள்,துரோகங்கள் வந்துகொண்டே இருக்கின்றனவா?

ஏழரைச்சனி,அஷ்டமச்சனி காலம் உங்களுக்கு இல்லாத போதும் இம்மாதிரியான துயரங்கள் உங்களுடைய நிம்மதியான வாழ்க்கையைச் சீரழித்துக் கொண்டு இருக்கின்றதா?

சத்குரு இடியாப்ப சித்தர் பெருமான் ஒரு அரிய சிவரகசியத்தை நமக்கு உபதேசம் செய்திருக்கின்றார்;

ஞாயிற்றுக்கிழமையும் மாத சிவராத்திரியும் வர வேண்டும்;மறு நாள் திங்கட்கிழமையும் அமாவாசையும் வர வேண்டும்;

அரச மரம் மட்டும் தனியாக இருக்கும் ஆலயமாக இருக்க வேண்டும்;
அந்த ஆலயம் எந்த கடவுள் ஆலயமாகவும் இருக்கலாம்;விநாயகர்,முருகக் கடவுள்,மாரியம்மன்,துர்கை அம்மன்,சிவபெருமான்,பெருமாள் கோவில்,கருப்பசாமி,முனீஸ்வரன் என்று எந்த தெய்வம் இருக்கும் கோவிலாகவும் இருக்கலாம்;

இந்த நாளில் உங்கள் ஊரில் இருக்கும் ஏதாவது ஒரு ஆலயத்தில் ஞாயிறு பகல் முழுவதும் அங்கே தங்க வேண்டும்;உண்ணாவிரதம் இருக்க வேண்டும்;உண்ணாவிரதம் இருந்தவாறு  சத்குருவின் ஆசியையும்,அங்காள பரமேஸ்வரியின் அருளையும் தரும் மந்திரத்தை 108 முறை ஜபித்துவிட்டு,இறை மந்திரங்களில் ஏதாவது ஒன்றை அன்று முழுவதும் ஜபிக்க வேண்டும்;

சத்குருவின் ஆசியையும்,அங்காளபரமேஸ்வரியின் அருளையும் தரும் மந்திரம்:

ஓம் ஸ்ரீ சர்வ ஸ்ரீசாக்த பரப்ரம்ம மகரிஷி
மகேஸ்வராய கெளஸ்துப புருஷாய
இடியாப்ப சித்த ஈச மஹராஜ் கீ ஜெய்!!!

அன்று இரவில் அங்கே தூங்காமல் தங்க வேண்டும்;இரவில் தாங்கள் ஜபிக்க வேண்டிய மந்திர பட்டியல்:

விநாயகர் கோவில் எனில்: ஒம் கிலி அங் உங்

முருகக்கடவுள் கோவில் எனில்:வெற்றி வேல்,வீர வேல்!!!

சிவன் ஆலயம் அல்லது ஜீவசமாதி ஆலயம் எனில்: 

காமோ கார்ஷீத் மன்யுர கார்ஷீத் நமோ நமஹ

அம்பாள் ஆலயம் எனில்:ஓம் சக்தி பராசக்தி

அங்காளபரமேஸ்வரி ஆலயம் எனில்:

ஓம் ஸ்ரீசர்வ ஸ்ரீசாக்த பரப்பிரம்ம மகரிஷி
மகேஸ்வராய கெளஸ்துப புருஷாய
இடியாப்ப சித்த ஈச மஹராஜ் கீ ஜெய்!

துர்கை ஆலயம் எனில்:

ஓம் காத்யாய நாயகி வித்மஹே
கன்னிய குமாரி தீமஹி
தன்னோஹ் துர்கி ப்ரசோதயாத்

பத்ரகாளி ஆலயம் எனில்:மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

முனீஸ்வரன் கோவில் எனில்:ஓம் ரீங் சிவசிவ அல்லது சிவசிவ

வராகி ஆலயம் எனில்:ஓம் ஐம் க்லெளம் சிவபஞ்சமியை நமஹ

குலதெய்வம் கோவில் எனில்:
ஓம் அகத்தீசாய நமஹ;ஓம் அருணாச்சலாய நமஹ

க்ருஷ்ணர் ஆலயம் எனில்: சர்வம் க்ருஷ்ணார்ப்பணம்

அனுமன் ஆலயம் எனில்:ஸ்ரீராமா ஜெய ராமா ஜெய ஜெய ராமா


இரவு முழுவதும் தூங்காமல் இருக்க முடியாத பட்சத்தில் நள்ளிரவு 1 மணி வரையாவது தூங்காமல் இருக்க வேண்டும்;


மறுநாள் திங்கட்கிழமை காலை சூரிய உதயம் ஆன பிறகு,காலை 8 முதல் 9 மணிக்குள் அரச மரத்தை 108 முறை பக்தியோடு வலம் வர வேண்டும்;அதன் பிறகு,பிற மரங்கள் இருந்தாலும் அதில் ஒன்று அல்லது இரண்டையும் 108 முறை வலம் வர வேண்டும்; 
பிறகு,அங்கே இருந்து அருள் பாலித்து வரும் தெய்வத்திடம் மனப்பூர்வமாக வேண்டிக் கொள்ள வேண்டும்;அன்று மதியம் 12 மணிக்கு மேல் வீடு திரும்ப வேண்டும்;

ஞாயிறும் சிவராத்திரியும் வரும் நாளில் திருவாதிரை நட்சத்திரம் வந்தால்,பல கோடி மடங்கு புண்ணியத்தினால்,ஈசனின் அருள் கிட்டும்;ஆழ்ந்த மன நிம்மதி கிடைக்கும்;நன்றி:ஸ்ரீ அகஸ்திய விஜயம் ,மாத இதழ்,பக்கம்4,5;வெளியீடு டிசம்பர் 2018


ஞாயிற்றுக் கிழமையும் சிவராத்திரியும் சேர்ந்து 22.3.2020 அன்று வர இருக்கின்றது;

திங்கட்கிழமையும் அமாவாசையும் 23.3.2020 அன்று சேர்ந்து வந்தாலும்,அமாவாசை திதியானது மதியம் 1.13க்கு தான் ஆரம்பமாகிறது;எனவே,அரச மரத்தை 108 முறை சுற்ற வேண்டும் எனில்,மாலை 4.30 முதல் 6 மணிக்குள் சுற்ற வேண்டும்;

No comments:

Post a Comment