Saturday, October 19, 2019

விரையச் சனியின் துயரங்கள் தீர பைரவப் பரிகாரம்




ஜனவரி 2020 முதல் இரண்டரை ஆண்டுகள் வரையிலும் தனுசு ராசியினருக்கு விரையச்சனி நடைபெற்று வருகிறது. எனவே, தினமும் தனுசு ராசிக்காரர்கள் கால பைரவர் சன்னிதிக்குச் சென்று தேங்காயில் நெய்தீபம் ஏற்றி வைத்து,கால பைரவ சதநாமாவாளியை எட்டு முறை ஜபிக்கவும்.

சனிப்பிரதோஷ நாட்களில் திரு அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;மாலை 4.30க்கு ஈசான லிங்கத்தை வந்தடைந்திருக்க வேண்டும்;அங்கே நடைபெறும் சனிப்பிரதோஷ பூஜையை தரிசிக்க வேண்டும்;இதனால்,சனியின் தாக்கம் பெருமளவு குறையும்;

அல்லது

திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் இருக்கும் ஸ்ரீவைகுண்டம் ஊரில் அமைந்திருக்கும் சிவாலயமானது தென் தமிழ்நாட்டின் நவகைலாசங்களில் ஒன்றாகும்.இங்கு இருக்கும் சிவபெருமான்,சனி பகவானின் அம்சத்தோடு அருள்கிறார்.இங்கு மேற்கூறிய சனிப்பிரதோஷ நாட்களில் கால பைரவர் வழிபாடு செய்வது சிறப்பாகும்;மேலும் தேய்பிறை அஷ்டமி நாட்களில் இங்கே வருகை தந்து ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்று ஜபிக்கலாம்;






கோவிலுக்குச் செல்ல முடியாதவர்கள்,வீட்டில் மேற்குச் சுவர் அல்லது தெற்குச் சுவரில் எலுமிச்சை பழத்தில் சூலாயுதம் வரைந்து,அதன் மீது குங்குமம் தடவிட,சூலாயுதம் தெளிவாகத் தெரியும்.

இந்த சூலாயதத்தின் முன்பாக,கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து தேங்காயில் நெய்தீபம் ஏற்றிட வேண்டும்.ஏற்றி வைத்துவிட்டு,பைரவரது சதநாமாவளியை எட்டு முறை ஜபிக்க வேண்டும்.இந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் அசைவம் சாப்பிடுவதைக் கைவிடவும்.பைரவ சதநாமாவளி கிடைக்காதவர்கள் ஓம் சம்ஹார பைரவாய நமஹ என்ற பைரவ மந்திரத்தையோ அல்லது ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற பைரவ மந்திரத்தையோ 108 முறை ஜபித்து வர வேண்டும்;

No comments:

Post a Comment