Thursday, January 3, 2019

மனம் வருந்தி ஈசனைச் சரண் அடைந்தவர்களுக்காக....

 


மனத்தால் செய்த பாவங்கள் தீர ஒரு சுலபமான வழி உண்டு;சென்னையில் இருக்கும் திருநின்றவூர் அருள்மிகு இருதயாலீஸ்வரர் ஆலயத்தில் உழவாரப் பணி அல்லது அடிப்பிரதட்சணம் அல்லது அங்கப் பிரதட்சணம் செய்ய வேண்டும்;இந்த ஆலயத்தின் வளர்ச்சிக்கு நம்மால் ஆன எது செய்தாலும் மனதால் செய்த பாவங்கள் தீரும்;ஆனால்,திரும்பவும் அதே பாவங்களை ஒரு போதும் செய்யக்கூடாது;

அல்லது/மேலும்


உடலாலும் மனதாலும் செய்த பாவங்கள் தீர,திங்கட்கிழமை மற்றும் பெளர்ணமி நாட்களில் அண்ணாமலை கிரிவலம் வரவேண்டும்;

கிரிவலம் முழுவதும் ஒரு போதும் பேசாமல் இருந்து ஏதாவது ஒரு சிவமந்திரம் ஜபித்து வரவேண்டும்;வசதி உள்ளவர்கள் கன்றுடன் கூடிய பசுவை அழைத்துக் கொண்டு கிரிவலம் வரலாம்; கிரிவலம் நிறைவடையும் போது அந்த கன்றையும்,பசுவையும் அண்ணாமலையாரின் கோசாலைக்கு அன்பளிப்பாக கொடுத்துவிட வேண்டும்;

திங்களும் பவுர்ணமியும் வரும் நாளில் அல்லது பூசமும் திங்களும் வரும் நாளில் கிரிவலம் வருவது மிகுந்த வரங்களைத் தரும்;

21.1.2019 திங்கட்கிழமை அன்று காலை 11.08 வரை பவுர்ணமி திதி இருக்கின்றது;அன்று முழுவதும்,மற்றும் மறுநாள் விடிகாலை 3.59 வரை பூசம் நட்சத்திரம் இருக்கின்றது; 

16.6.2019 ஞாயிறு மதியம் 3 மணிக்குத் துவங்கும் பவுர்ணமி மறுநாள் 17.6.2019 திங்கள் மதியம் 2.54 வரை இருக்கின்றது;17.6.2019 திங்கள் சூரிய உதயத்தில் இருந்து மதியம் 2.54 வரை அண்ணாமலை கிரிவலம் வரலாம்;

11.11.2019 திங்கள் மாலை 6.46 க்கு பவுர்ணமி ஆரம்பம் ஆகின்றது;மறுநாள் சூரிய உதயம் வரை அண்ணாமலை கிரிவலம் வர வேண்டும்;

10.3.2020 திங்கள் காலை சூரிய உதய நேரத்தில் இருந்து இரவு 11.36 வரை பவுர்ணமி இருக்கின்றது;

21.10.2019 திங்கள் மதியம் 2.44 முதல் பூசம் ஆரம்பமாகின்றது;மறுநாள் மதியம் 1.35 வரை பூசம் இருந்தாலும்,மறுநாள் சூரிய உதயத்திற்குள் அண்ணாமலை கிரிவலம் நிறைவு செய்துவிட வேண்டும்;

18.11.2019 திங்கள் இரவு 9.32 வரை பூசம் இருக்கின்றது;இன்று காலை சூரிய உதயத்தில் இருந்து இரவு 9.32 க்குள் அண்ணாமலை கிரிவலம் நிறைவு செய்ய வேண்டும்;

இளநீரால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும்;அது கோமுகம் வழியாக வரும் போது அதை ஒரு பாத்திரத்தில் பிடித்து வைத்து,சித்த பிரம்மை,மன நோய் உள்ளவர்களை அருந்தச் செய்ய வேண்டும்; இப்படித் தொடர்ந்து செய்து வந்தால் மன நோய்களும்,சித்தபிரம்மையும்,காத்துகருப்பும் விலகிவிடும்;

இந்த நாளில் அண்ணாமலை கிரிவலம் செல்வோம்;அளவற்ற வரங்களை பெறுவோம்;

ஓம் ஸ்ரீஅண்ணாமலை குருவே துணை

No comments:

Post a Comment