Tuesday, January 1, 2019

ஜீவசமாதிகளுக்குள் இருக்கும் மஹான்களின் அருளைப் பெறும் நாட்கள்!!!



உலகம் முழுவதும் கர்ம பூமியாக இருந்தாலும்,அந்த கர்மவினைகளை முழுமையாகத் தீர்க்கக் கூடிய பரிகாரங்கள்,ஆலயங்கள்,அது பற்றிய விளக்கங்களைத் தரும் ஜோதிடர்கள்,ஆன்மீக பெருமக்கள் வாழ்ந்து வருவது தமிழ்நாட்டில் தான்;

இந்து வல்லரசு என்று அழைக்கப்படும் பாரத நாட்டின் அரசியல் தலைநகரமாக புது டெல்லி இருக்கின்றது;

பொருளாதாரத் தலைநகரமாக மும்பை இருக்கின்றது;

ஆன்மீகத் தலைநகரமாக சென்னையை அறிவிக்கும் காலம் நெருங்கிக் கொண்டு இருக்கின்றது;



ஆன்மீகம் மற்றும் ஜோதிடத்தில் தான் இன்றைய கலியுகத்தில் பித்தலாட்டமும்,ஏமாற்றுதலும் மிக அதிகமாகிவிட்டது;இப்படி ஏமாறுபவர்கள் இது நமது முன்வினையின் விளைவு என்று எண்ணுவதில்லை;மாறாக,தெய்வ நம்பிக்கையை இழந்துவிடுகின்றார்கள்;ஆன்மீக முயற்சிகளை கைவிட்டுவிடுகின்றார்கள்;

சீக்கிரம் தாம் செய்யும் பரிகாரங்கள்,கோவில் பயணங்கள்,அபிஷேகங்களுக்கு பலன் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள்;தாம் விரும்பும் கால கட்டத்திற்குள் பலன் கிடைக்காத பட்சத்தில் ஆன்மீக முயற்சியில் தாம் ஏமாந்துவிட்டதாக நம்புகின்றார்கள்;

விரைவான பலன் ஆன்மீக முயற்சியில் வேண்டும் என்று விரும்புவோர் அண்ணாமலை கிரிவலம் மாதம் தோறும் (தேய்பிறை) சிவராத்திரியில் செல்ல வேண்டும்;

வீட்டில் உடனடியாக பலன் தரக் கூடிய தெய்வங்களான       ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் அல்லது ஸ்ரீ மஹாவராஹி அல்லது ஸ்ரீ சரபேஸ்வரர் வழிபாடுகள் அல்லது மந்திர ஜபத்தினை பின்பற்ற வேண்டும்;

கூடவே ஒரு வருடத்தில் குறிப்பிட்ட காலகட்டங்களில் உங்கள் ஊரில் இருக்கும் ஜீவசமாதிகளை வழிபட/ஜபிக்க/அன்னதானம் செய்ய வேண்டும்;

ஜோதிடப்படி,கோள்சாரப்படி,செவ்வாய்க்கிரகம் விருச்சிகராசியை 18 மாதங்களுக்கு ஒருமுறை கடக்கும்;அப்போது,செவ்வாய்க்கிரகம் கேட்டை நட்சத்திரத்தை கடக்கும் நாட்களில் வரும் செவ்வாய்க்கிழமைகளில் ஜீவசமாதிகளில் சித்திரான்னம் அல்லது ஏதாவது ஒரு சாதம் படையல் இட வேண்டும்;தாமரை மலர்களால் அல்லது மல்லிகை பூக்களால் அர்ச்சனையும்,அலங்காரமும் செய்ய வேண்டும்;ஏதாவது 30 நிமிடம் தியானம்  செய்ய வேண்டும்;அல்லது ஏதாவது ஒரு சிவமந்திரத்தை ஜபிக்க வேண்டும்;உடனடியான பலனைப்பெறலாம்;அசைவம்,மதுவைக் கைவிட்டவர்களுக்கு மட்டுமே பலன் கிட்டும் என்பதை மறக்காதீர்கள்;

அல்லது கேட்டை நட்சத்திரமும்,செவ்வாய்க்கிழமையும் கூடி வரும் நாட்களிலும் இப்படி வழிபட்டு மகான்கள்,சித்தர்களின் ஆசிகளை பெருமளவு பெற முடியும்;



26.3.2019 செவ்வாய்க்கிழமை காலை 11.48 முதல் 27.3.2019 புதன் விடிகாலை வரை;

23.4.2019 செவ்வாய்க்கிழமை;

18.2.2020 செவ்வாய்க்கிழமை காலை 8.44 வரை;

28.1.2020

4.2.2020


இவ்வாறு ஜீவசமாதிகள்,சித்தர் பீடங்கள்,மகான்கள் ஐக்கியமான இடங்களில் வழிபாடு செய்வதால்,நீண்ட காலக் கடன்கள் தீரும்;தீராத நோய்கள் குணமாகும்;புத்திர பாக்கியம் கிட்டும்;யாருக்கு என்ன ஏக்கமோ அந்த ஏக்கம் நியாயமான ஏக்கமாக இருந்தால் அது நிறைவேறும்;

அவ்வாறு நிறைவேறும் வரையிலும் இந்த நாட்கள் அனைத்திலும் ஜீவசமாதி வழிபாடு செய்ய வேண்டும்;

ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் இடியாப்ப சித்த குரு நம ஸ்வாஹா


ஓம் அருணாச்சலாய நமஹ

No comments:

Post a Comment