Thursday, January 3, 2019

தீராத கடன் தீர




மிகுந்த கடனால் அவதிப்படுபவர்கள்,எத்தனையோ பரிகாரங்கள் செய்தும் வறுமையில் இருந்து விடுபடமுடியாமல் தவிப்பவர்கள்,வியாபாரத்தில் லாபமே பார்க்க முடியாமல் வியாபாரத்தை கைவிடமுடியாமல் இடியாப்பச்சிக்கலில் மாட்டியுள்ளவர்கள் பட்டீஸ்வரம் சிவாலயம் வரவேண்டும்;


இங்கே வருகை தந்து காராம்பசுவின் பாலைக் கறந்து அதன் இளஞ்சூடு ஆறும் முன்பாகவே இங்கே இருக்கும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும்;

இதை மாசி மகம் ( 19.2.2019 செவ்வாய் காலை 10.31 முதல் 20.2.2019 புதன் காலை 8.53 வரை மகம் நட்சத்திரம் இருக்கின்றது ) அன்று செய்ய வேண்டும்;

இந்த வருடம் வரும் மாசி மகம் முதல் ஒவ்வொரு மாதமும் வரும் மகம் நட்சத்திர நாளில் இப்படி அபிஷேகம் என்று அடுத்த வருடம் வரும் மாசி மகம் வரை செய்து வர வேண்டும்;

தொடர்ந்து இப்படி மாதம் ஒரு முறை மகம் நாளன்று அபிஷேகம் செய்து வர படிப்படியாக பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு வழிகள் கிட்டும்;
ஓம் சத்குரு இடியாப்பசித்த குரு நம ஸ்வாஹா

No comments:

Post a Comment