Saturday, September 1, 2018

எப்படி நமது ஆன்மீக பலத்தை இழக்கின்றோம்?


உலகத்தின் ஆதி மதம் இந்துமதம்;இந்து மதத்தின் அடிப்படை ஆதாரங்கள் ஆறு! இதையே ஷண்மதம் என்று அழைக்கின்றோம்.
        1.காணபத்தியம்
         2.கவுமாரம்
         3.சைவம்
         4.சைவம்
         5.வைஷ்ணவம்
         6.சாக்தம்(ஸ்ரீசக்ர உபாசனை இதில் அடங்கும்)

இதில் சைவம் மட்டும் 4 பெரும்பிரிவுகளைக் கொண்டது என்று திருமூலரின் திருமந்திரம் தெரிவிக்கின்றது;

1.சுத்த சைவம்
2.அசுத்த சைவம்
3.கடுஞ்சுத்த சைவம்
4.மார்க்க சைவம்

இந்த 4 சைவங்களையும் உள்பிரிவாக வகைப்படுத்தி இருக்கின்றார்கள்;

1.ஊர்த்த சைவம்
2.அனாதி சைவம்
3.ஆதி சைவம்
4.மகா சைவம்
5.பேத சைவம்
6.அபேத சைவம்
7.அந்தர சைவம்
8.குண சைவம்
9.நிர்குண சைவம்
10.அத்துவா சைவம்
11.யோக சைவம்
12.ஞான சைவம்
13.அணு சைவம்
14.கிரியா சைவம்
15.நாலுபாத சைவம்
16.சுத்த சைவம்

இன்றைய காலகட்டத்தில் இவைகளின் பெயர்களை மட்டுமே நம்மால் அறிந்து கொள்ள முடியும்;நீங்கள் யாராவது ஒரு சித்தர் பெருமானின் நேரடி சீடராக இருந்தால் தாங்கள் முற்பிறவிகளில் இதில் எந்த சைவத்தினை பின்பற்றினீர்கள் என்று அறிந்து கொள்ளலாம்;


விபூதி,ருத்ராட்சம்,சிவலிங்கம்,மந்திர ஜபம்,சிவனடியார் இந்த ஐந்தும் குறிப்பிட்ட நாள்/திதி/நட்சத்திரம்/ஓரையில் சேரும் போது இறை அருள் முழுமையாக கிடைத்துவிடுகின்றது;


இதை விஞ்ஞானக் கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து கண்டறிந்த கிறிஸ்தவ ஆங்கிலேயன்,நமது ஆன்மீக பலத்தை சிதைக்க திட்டமிட்டான்;அந்த திட்டமும் 300 ஆண்டுகளில் 50% அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது;அடுத்த 100 ஆண்டுகளுக்குள் கி.பி.2118 க்குள் இந்துக்களாகிய நம் அனைவரது ஆத்ம பலத்தை,ஆன்மீக சக்தியை மொத்தமாக நிர்மூலமாக்கிட பல்வேறு செயல்திட்டங்களை நமது நாட்டில் செயல்படுத்தி வருகின்றான்;

நாம் ஒவ்வொருவரும் இது பற்றிய விழிப்புணர்ச்சியுடன் கவனமாக “வாழ்ந்து வந்தால்” இதை தவிர்க்க முடியும்;அல்லது இந்து குடியரசு நாடாக நமது பாரத நாட்டினை அறிவிக்க வேண்டும்;அப்படிச் செய்தால் மட்டுமே நமது சனாதன தர்மத்தை இனிமேல் பாதுகாத்திட முடியும்;

காலையில் பல் துலக்கும் போது,ஒரு போதும் பற்பசையைப் பயன்படுத்தக் கூடாது;இனிப்பு சுவையுடைய பற்பசையை பயன்படுத்தும் போது அது மொத்த உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது;அதில் கலந்துள்ள ஃப்ளூரைடு நமது ஆன்மீக எழுச்சியை உருவாக்கும் நமது பீனியல் கிளாண்டு என்ற புருவ மத்திக்குள் இருக்கும் சுரப்பியை அழித்துவிடுகின்றது;எனவே,காலையில் பற்பொடியை மட்டுமே பல் துலக்கிட பயன்படுத்த வேண்டும்;அது துவர்ப்பு அல்லது கசப்புச் சுவையுள்ளதாக மட்டுமே இருக்க வேண்டும்;இது மட்டுமே நமது ஆத்ம வலிமையைப் பாதுகாக்கும்;

இறுக்கமான ஜீன்ஸ்ஸை பெண்கள் அணிவதால்,அவர்களின் கர்ப்பப் பையின் ஆரோக்கியம் நாசமாகின்றது;

நடிகைகள் தொப்புள் தெரிய நடிப்பதால்,அவர்களுக்கு இப்பிறவி மற்றும் இனி வரும் பிறவிகளில் குழந்தையின்மை உண்டாகின்றது;எந்த பெண்ணாக இருந்தாலும் தனது கணவனைத் தவிர,தெரிந்தோ தெரியாமலோ ஒரு போதும் தனது தொப்புளைக் காட்டக் கூடாது;இந்த சித்தர் உபதேசத்திற்குப் பின்னால் ஒரு புராண கால சம்பவமும் உண்டு;அதை வெளிப்படையாக தெரிவிக்க குரு அனுமதி கிடைக்கவில்லை ;

குழந்தை பிறந்த பின்னர்,தாய்ப்பால் தராமல் இருப்பதால் உடலின் இளமையைப் பராமரிக்கும் ஹார்மோன்கள் வலிமை இழக்கின்றன;


கோவில்களில் கிடைக்கும் விபூதி,குங்குமம் போன்றவைகளை ஒருபோதும் விற்பனை செய்யக் கூடாது;விலைக்கு வாங்கக் கூடாது;அப்படிச் செய்தால் அதில் ஆழ்ந்த தெய்வ பக்தி இருக்காது;ஒவ்வொரு ஆலயத்தையும் விபூதி மற்றும் குங்குமம் தயாரிக்கும் மையமாக மாற்றிட வேண்டும்;இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை கோவில்களை நிர்வாகிக்கும் வரை இது நடக்காது;(இன்றைய கால கட்டத்தில் கடைகளில் கிடைக்கும் விபூதியில் ஆன்ம பலத்தை அதிகரிக்கும் ஆன்மீகப் பொருட்கள் இல்லை)

விபூதி தயார் செய்ய,ஒவ்வொரு சிவாலயத்திலும் கோசாலை அமைக்க வேண்டும்;சிறு குற்றம் கூட இல்லாத அளவுக்கு அதைப் பராமரிக்கும் சிவ தொண்டர் படையை அமைக்க வேண்டும்;கோசாலை மற்றும் ஆலயத்தின் உள்ளே தவறு செய்தால் தீராத மற்றும் பரிகாரத்திற்கு உட்படாத சாபங்களுக்கு ஆளாக வேண்டி இருக்கும்;

1 கோடி தேவ ஆண்டுகள் சிவலோகத்தில் ஒருவர் வாழ்வதும்,ஒரே ஒருஇரவு  கோ(பசு)லோகத்தில் வாழ்வதற்குச் சமம் என்று சித்தர்பெருமக்கள் தெரிவித்துள்ளார்கள்;அதனால்,நமது கோசாலைகளில் நாட்டுப் பசுக்களை மட்டும் வளர்க்க வேண்டும்;ஒரு போதும்,செயற்கையான முறையில் உருவாக்கப்பட்ட ஜெர்ஸிப்பசுவை வளர்க்கக் கூடாது;கோமாதாவின் பெருமைகளை மக்கள் அறிந்து கொள்ள கலியுகத்தின் ஆரம்பத்தில் பல சித்தர்கள் பூமிக்கு வருகை தந்தார்கள் என்று அறியும் போது ஆச்சரியமாக இருக்கின்றது;


முற்பிறவிகள் நான்கில் சிவாலயத்திற்குள் காமக்களியாட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு மட்டுமே இப்பிறவியில் மருந்தே இல்லாத காம நோய் வருகின்றது;


முற்பிறவிகளில் மித மிஞ்சிய சிற்றின்ப ஆசைகளால் காமவேட்டை ஆடியவர்களுக்கு இப்பிறவியில் வெண்குஷ்டம் வருகின்றது;தகுந்த இறைவழிபாடு,பரிகாரம்,மனம் திருந்துதல் செய்யாதபட்சத்தில் தொடர்ந்து ஆறு பிறவிகளுக்கு குஷ்ட நோய் தொடரும் என சித்தர்களின் உபதேசம் தெரிவிக்கின்றது;


பசுவின் உடலில் இருந்து வெளிவரும் சாணத்தை தாமரை இலையில் ஒரு குறிப்பிட்ட லக்னத்தில் பிடிக்க வேண்டும்;அதை நிர்ணயம் செய்ய அந்த கோசாலையில் நிரந்தரமான ஜோதிட வல்லுநர்கள் வேண்டும்;


சிவ தீட்சை பெற்றவர்களைக் கொண்டு முறையான விதத்தில் விபூதியை தயார் செய்ய வேண்டும்;பத்து சதுர கி மீ பரப்பளவில் இருக்கும் ஆலயங்களுக்கு ஒரு சிவாலய வளாகத்தில் தயாராகும் விபூதியை இலவசமாக(தானம்) தர வேண்டும்;


குங்குமம் தயார் செய்ய எலுமிச்சை தோட்டங்களை இயற்கை உரங்கள் போட்டு வளர்க்கவும்,பராமரிக்கவும் வேண்டும்;ஸ்ரீலலிதா சகஸ்ர நாமம் முழுமையாகத் தெரிந்த சாக்தர்களைக் கொண்டு குங்குமத்தை தயார் செய்ய வேண்டும்;

விஸ்வாமித்திரர் மகரிஷியின் கோபத்தினால் உண்டானது பத்திராட்சம்;இது ருத்ராட்சத்திற்கு இணையாக மகரிஷி உருவாக்கியது;இதில் கிடைக்கும் ஒரு முக பத்ராட்சத்தை இணையத்தில் ஒரு முக ருத்ராட்சம் என்று விற்பனை செய்கின்றார்கள்;இது மாபெரும் சாபத்தை உருவாக்கிவருகின்றது;


கடுவன் பூனையின் உடலில் இருந்து வெளிப்படுவது தான் புனுகு ஆகும்;இது கடுவன் பூனையின் விந்தாக இருந்தாலும்,கடுவன் பூனையானது எப்போதும் சிவ நினைவுடன் இருக்கும்;புனுகினை சிவனுக்கு சட்டமாக அணிவிக்கலாம்;பைரவருக்கு அணிவிக்க பைரவரின் அருள் உடனடியாக கிடைக்கும்;நவக்கிரகங்களில் ராகு மற்றும் கேதுவுக்கும் அணிவிக்கலாம் என்பது சித்தர்கள் மட்டும் அறிந்த ரகசியம் ஆகும்;


கடைகளில் கிடைக்கும் புனுகு செயற்கையானது;அதனால் சிறிதும் இறை அனுபூதி கிடைக்காது;இன்றைய கால கட்டத்தில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப வணிக நோக்கில் புனுகினை டன் கணக்கில் உற்பத்தி செய்ய முடியாது;கலியுகமாக இருப்பதால் கடுவன் பூனையை வளர்ப்பதற்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் அனுமதி கிட்டாது;  சித்தர்களின் ஆசிகள் இருந்தால் ஒரே ஒரு முறை புனுகு நமக்கு கிடைக்கலாம்;ஒரு சில இடங்களில் புனுகு விற்பனை செய்யப்படுவதாக அறிகின்றோம்;ஒரு கிராம் புனுகின் விலை ரூ.2000/- க்கு விற்பனை செய்யப்படுகின்றதாம்;


கோரோசனை என்பது பசுவின் உடலில் இருந்து வெளிவரும் ஒரு அற்புத பொருள்;ஒரே ஒரு கிராம் கோரோசனை ஒரிஜினல் கிடைத்தால் அடுத்த 60 நாட்களில் நம் ஒவ்வொருவராலும் உண்மையான சிகப்பழகை அடைந்துவிட முடியும்;முழு இந்தியாவுக்கும் கோரோசனை சித்த வைத்தியர்களுக்கும்,மூலிகை ஆராய்ச்சியாளர்களுக்கும் தேவைப்படுகின்றது;இதுவும் ஒரு கிராம் ரு.5000/-க்கு மும்பையில் இருந்து மட்டுமே கிடைக்கின்றது;மும்பையில் இருந்து இந்தியா முழுவதற்கும் சப்ளையாகின்றது;


1985 வரையிலும் விறகு அடுப்பினை எல்லோரும் பயன்படுத்தி வந்தோம்;அடுப்புக் கரி கிடைத்தது;அதன் மூலமாக வாரம் ஒரு நாள் வீட்டில் சாம்பிராணி,குங்கிலியம் போன்றவைகளை நெருப்புத் தணல் வளர்த்து வீடு முழுக்க காட்டினோம்;பொறாமை எண்ணங்கள் சாம்பிராணி புகையில் வீட்டை விட்டு ஓடின;மண்ணெண்ணெய் அடுப்பு அறிமுகம் ஆனது;அப்புறம் கேஸ் அடுப்பு பரவலானது;போட்டி,பொறாமை எண்ணங்களால் பல கோடி இந்துக்களின் வீடுகள் இன்று நோயாலும்,கடனாலும்,தேவையற்ற சச்சரவுகளாலும் அவதிப்பட்டுக் கொண்டு இருக்கின்றன;


கோவில்களுக்கு சாம்பிராணி,குங்கிலியம் தானம் தரும் பழக்கமே நின்று போய்விட்டது;கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாரம் ஒரு முறை சிவாலயத்திற்கு குங்கிலியம் தானம் செய்து வர வேண்டும்;கறுப்பு குங்கிலியம்,சிகப்பு குங்கிலியம்,வெள்ளை குங்கிலியம் என்று எதை வேண்டுமானாலும் தானம் செய்யலாம்;குங்கிலிய தானம் தொடர்ந்து செய்து வருதன் மூலமாக எல்லா மனித ரகசியங்களும் தெரியும்;எம தூதுவர்களிடம் இருந்து விடுதலை பெறும் சக்தி கிடைக்கும்;பிறரையும் எமதூதர்களிடம் இருந்து மீட்கும் ஆற்றலையும் அருணாச்சலேஸ்வரர் வழங்குகின்றார்;


ஒரு ஊரில் மனிதர்கள் செய்த அனைத்து பாவங்களையும் அந்த ஊரில் இருக்கும் சிவலிங்கம் தன்னுள் ஈர்த்துக் கொள்ளும்;குங்கிலிய தூபம் இடும் போது மட்டுமே ஈர்த்துக் கொள்ளும்;அவ்வாறு ஈர்த்து,புண்ணியத்தை நறுமணம் கமழும் வெண் புகையாக வெளிவிடுகின்றார்;


சிவனை முழு முதற்கடவுளாக நினைப்பவர்கள் தினமும் சிவாலயத்திற்கு குங்கிலியம் தானம் செய்ய வேண்டும்;அப்படி தொடர்ந்து செய்து வந்தால்,செய்பவரின் குருவின் வார்த்தையை நிறைவேற்றுவதற்கு உறுதுணையாக குங்கிலியப் புகை இருக்கும்;குருவுடனே இருக்க வைத்து நமது பிறவியை அறுக்கும்;


தினமும் காலையில் தூங்கி எழுந்ததும் ,இரு உள்ளங்கைகளையும் பார்த்தவாறு “ஓம் உத்தாத லக மகரிஷிக்கு ஜெய்” என்று ஒன்பது முறை ஜபிக்க வேண்டும்;இப்படிச் செய்து வந்தால் மட்டுமே சிவனருள் நமக்கு கிட்டும்;சிவனருளைப் பெறுவதற்காக கடந்த பல கோடி ஆண்டுகளாக பல ஆயிரம் கோடி மனிதர்கள் பல்வேறு வழிகளில் முயற்சி செய்து வருகின்றார்கள்;


இவைகளை முறையாகவும்,அமைப்பு ரீதியாகவும்=இன்னும் சொல்லப்போனால் கார்ப்பரேட் ரீதியாகவும் செயல்படுத்தினால் மட்டுமே நமது சனாதன தர்மத்தை பாதுகாக்க முடியும்;
மதமாற்றம் ஒரு நுண்ணிய பயங்கரவாதம்; அது என்ன நுண்ணிய? நம்மால் உணர முடியாத என்று அர்த்தம்;


இமயம் முதல் இலங்கை வரையிலும்,குஜராத் முதல் மியான்மர் வரையிலும் பண்பாட்டினால் சனாதன தர்மத்தை மக்கள் பின்பற்றி வருகின்றார்கள்;இவர்கள் வேறு மதத்திற்கு மாறினால்,தமது ஆன்ம பலத்தை இழந்துவிடுகின்றார்கள்;



டைனோசரைப் பற்றி ஒரு உண்மையை இங்கே விவரிக்க வேண்டி இருக்கின்றது;ஒரு டைனோசரின் நீளம் ஒரு கி.மீ.அதன் வாலை ஒரு உயிரினம் கடித்தால்,அப்படி கடிபட்ட உணர்வு டைனோசரின் மூளைக்கு தகவலாகச் செல்ல ஐந்து மணி நேரம் ஆகுமாம்;அதனால் தான் டைனோசர் இனம் அழிந்ததாம்;மனிதனின் காலில் ஒரு எறும்பு கடித்தால் மறுவிநாடியே மனிதமூளைக்கு தகவல் சென்றுவிடுகின்றது;மனித நரம்புகள் மூலமாக விநாடிக்கு 256 கி.மீ. வேகத்தில் சென்றடைந்து விடுகின்றது;     அதே போல,கேரளாவில் 1600களில் முதன் முதலில் கிறிஸ்தவ மத மாற்றம் நிகழ்ந்த போது அதை காஷ்மீர் இந்துக்கள் அது ஒரு பெரும் ஆபத்து என்பதை உணரவில்லை;இப்போது 1.9.2018 இல் மதமாற்றத்தினால் உண்டான அழிவுகளை நாம் உணரத் துவங்கியிருக்கின்றோம்;

No comments:

Post a Comment