Sunday, September 16, 2018

அனைத்துப் பிறவிகளின் கர்மவினைகளையும் தீர்க்கும் அண்ணாமலை கிரிவலம்!!!


இன்று நாம் மனிதப் பிறவி எடுத்து வாழ்ந்து வருகிறோம்;
நமது முற்பிறவிகளைப் பற்றி நாம் அறிவதில்லை;அறிய முயன்றாலும்,10,000 பேர்களில் ஒருவருக்குத் தான் சரியான முற்பிறவி ரகசியங்கள் கிடைக்கின்றன;

இந்நிலையில் ஒரு சிவரகசியம் அடியேனுக்கு சித்தர் பெருமக்களால் பல ஆண்டுகளுக்கு முன்பு போதிக்கப்பட்டிருக்கின்றது;அதை அனுபவபூர்வமாக உணர்ந்தப் பின்னரே,தங்களிடம் பகிர்கிறோம்;அப்படிப் பகிர்ந்து கொள்வதை எமது கடமையாக எண்ணுகின்றோம்;
84,00,000 உயிரினங்கள் பூமியில் இருக்கின்றன;இவைகளில் பெரும்பாலானவைகளின் ஆயுள் ஒரு நாள் அல்லது சில வாரங்கள் தான்;இந்த 84,00,000 உயிரினங்களாகவும் நாம் பிறந்து,பிறந்து இறந்தப் பின்னரே இறுதியாக மனிதப் பிறப்பு நமக்குக் கிட்டியிருக்கின்றது;
மனிதப் பிறவியாக பிறந்தப் பின்னர்,சுமாராக 2,00,000 முறை திரும்பத் திரும்ப மனிதப் பிறப்பு எடுத்துள்ளோம்;
3000 மனிதப் பிறவிகளில் நமக்கு ஒரு சரியான குரு கிடைக்க மாட்டாரா? என்று ஏங்கியப் பின்னரே 3001 வது பிறவியில் தகுந்த குரு நமக்கு அமைவார்;என்பது சித்தர்களின் தலைவரும்,தமிழ் மொழியின் தந்தையுமாகிய அகத்தியப் பெருமான் தெரிவிக்கும் சித்தரகசியம் ஆகும்;
ஒரு வருடத்தில் ஒரு நாள் வரும்;அந்த நாளில் குறிப்பிட்ட நேரம் வரும்;அந்த நேரம் குறைந்தது 4 மணி நேரம் வரை இருக்கும்;அதிக பட்சம் 24 மணி நேரம் வரை இருக்கும்;
இந்த நாளில்,இந்த நேரத்தில் அண்ணாமலை கிரிவலம் சென்றால்,இதுவரை நாம் மனிதப் பிறவி எடுத்தது முதல் இன்று வரையிலும் எத்தனை பிறவிகளில் எவ்வளவு கர்மவினைகளை(பாவம்) சேர்த்தோமே? அத்தனையும் கரைந்து காணாமல் போய்விடும்;
21.9.2018 வெள்ளிக்கிழமை காலை 4.31 முதல் மாலை 6.30க்குள் திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்,
மாலை 6.31 முதல் 22.9.2018 சனிக்கிழமை இரவு 8.56 வரை அவிட்டம் நட்சத்திரத்தில்(மகரம் & கும்பம்) பிறந்தவர்களும்;
22.9.2018 சனிக்கிழமை இரவு 8.57 முதல் 23.9.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 6.20 வரை சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;

6.10.2018 சனிக்கிழமை மாலை 4.34 முதல் 7.10.2018 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.10 வரை பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்

21.10.2018 ஞாயிற்றுக்கிழமை இரவு 9.11 முதல் 22.10.2018 திங்கட்கிழமை காலை 8.07 வரை பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்,காலை 8.08 முதல் அன்று இரவு 10.13 வரை உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்

5.11.2018 திங்கட்கிழமை விடிகாலை(ஞாயிறு நள்ளிரவு) 1.13 முதல் இரவு 9.10 வரை அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்

20.11.2018 செவ்வாய்க்கிழமை மதியம் 1.16 முதல் மாலை 5.05 வரை ரேவதி நட்சத்தில் பிறந்தவர்களும்,மாலை 5.06 முதல் 21.11.2018 புதன்கிழமை மதியம் 1.20 வரை அசுபதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்

4.12.2018 செவ்வாய்க்கிழமை மதியம் 1.22 முதல் 5.12.2018 புதன்கிழமை விடிகாலை(செவ்வாய் நள்ளிரவு) 4.13 வரை சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;
5.12.2018 புதன் விடிகாலை 4.14 முதல் மதியம் 12.47 வரை விசாகம் (துலாம் & விருச்சிகம்) நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;

20.12.2018 வியாழக்கிழமை அதிகாலை 4 மணி முதல் இரவு 1.54 வரை கார்த்திகை நட்சத்திரத்தில் (மேஷம் & ரிஷபம்) பிறந்தவர்களும்

3.1.2019 வியாழக்கிழமை விடிகாலை 4 மணி முதல் மதியம் 12.09 வரை அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;மதியம் 12.10 முதல் 4.1.2019 வெள்ளிக்கிழமை அதிகாலை 4.29 வரை கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;

18.1.2019 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் 19.1.2019 சனிக்கிழமை காலை 8.14 வரை மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;காலை 8.15 முதல் மதியம் 3.16 வரை திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;

1.2.2019 வெள்ளிக்கிழமை இரவு 9.04 முதல் இரவு 11.05 வரை மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்,இரவு 11.06 முதல் 2.2.2019 சனிக்கிழமை 10.31 வரை பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;

17.2.2019 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி முதல் மதியம் 1.42 வரை புனர்பூசம் (மிதுனம் & கடகம்) நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;மதியம் 1.43 முதல் நள்ளிரவு 2.12 வரை பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;

3.3.2019 ஞாயிற்றுக்கிழமை மதியம் 3.30 முதல் 4.3.2019 திங்கட்கிழமை மதியம் 1.10 மணிக்குள் திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;மதியம் 1.11 முதல் மாலை 5.30 வரை அவிட்டம் நட்சத்திரத்தில்(மகரம் & கும்பம்) பிறந்தவர்களும்;

18.3.2019 திங்கட்கிழமை மதியம் 2.23 முதல் மாலை 6.45க்குள் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;மாலை 6.46 முதல் 19.3.2019 செவ்வாய்க்கிழமை 12 மணி வரை மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;

2.4.2019 செவ்வாய்க்கிழமை காலை 9.51 முதல் நள்ளிரவு 1.36 வரை சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்; நள்ளிரவு 1.37 முதல் 3.4.2019 புதன்கிழமை காலை 11.46 வரை பூரட்டாதி நட்சத்திரத்தில் (கும்பம் & மீனம்) பிறந்தவர்களும் கண்டிப்பாக அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;
இதில் குறிப்பிடப்படாத நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அடுத்த தமிழ் வருடப் பிறப்பு வரை காத்திருக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்;


அண்ணாமலையாரின் அருளைப் பெற இதுவும் ஒரு சிறந்த சந்தர்ப்பம்! பயன்படுத்தி அருளோடும்,வளமோடும் வாழ்க!!!

ஓம் ரீங் அகத்தீசா! அகத்தீசா!!
ஓம் ரீங் அருணாச்சலா அருணாச்சலா!!!

No comments:

Post a Comment