Saturday, September 1, 2018

கர்ம வினைகளை நிர்மூலமாக்கும் காலபைரவர் ஜபம்!!!



உங்கள் வாழ்நாள் முழுவதும் என்ன உங்களுக்கு என்ன நடக்கும் என்பதை இன்றைக்கே அறிந்து கொண்டால் வாழ்க்கை சுவாரசியமாக இருக்குமா?


உங்களுடைய வாழ்க்கையை நவக்கிரகங்கள் தீர்மானிக்கின்றன;நவக்கிரகங்கள் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட ராசியில் நிற்கும் போது நீங்கள் பிறப்பது தற்செயலான நிகழ்வு அல்ல;சென்ற நான்கு பிறவிகளில் நீங்கள் என்ன என்ன பாவச் செயல்கள் மற்றும் புண்ணியச் செயல்கள் செய்தீர்களோ அதைப் பொறுத்தே இந்த மனிதப் பிறவி உங்களுக்கு அமைகின்றது;திறமையான மற்றும் அனுபவம் நிரம்பிய ஒரு ஜோதிடரால் உங்கள் ஜாதகத்தை பார்த்தே உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு என்னென்ன எப்போது எப்படி நிகழும்? என்பதை உங்களுக்குத் தெரிவிக்க முடியும்;


இன்றும் அப்படிப்பட்ட ஜோதிடர்கள் தமிழ்நாடு,ஸ்ரீலங்கா மற்றும் இந்தியா முழுவதும் இருக்கின்றார்கள்;அவர்களை நீங்கள் நேரடியாக சந்திக்கும் வரை உங்களது வாழ்க்கைப் பயணமானது இருள் சூழ்ந்ததாகவே இருக்கும்;


உங்களுடைய கர்மவினைகளின் சுமையில் போன 4 முற்பிறவிகளில் செய்தவைகளை மட்டுமே அனுபவிக்கப் பிறந்துள்ளீர்கள்;ஆனால்,நீங்கள் ஒவ்வொருவரும் இதுவரை குறைந்தது 3000 முறை மனிதப் பிறவி எடுத்துள்ளீர்கள்.அதிக பட்சமாக 2 லட்சம் முறை மனிதப் பிறவி எடுத்திருக்கலாம்;உங்களுடைய அனைத்து முற்பிறவிகளிலும் என்னென்ன பெயர்களில் வாழ்ந்தீர்கள் என்பதை சுகர் நாடி ஜோதிடத்தின் மூலமாக தெரிவிக்க முடியும்;


என்னென்ன பாவச் செயல்கள் அல்லது புண்ணியச் செயல்கள் செய்தீர்கள் என்பதை இன்னொரு நாடி ஜோதிடத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்;

ஆனால்,ஒரு சிக்கல் என்னவென்றால் உண்மையான நாடி ஜோதிடம் சொல்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து போய்விட்டது;நீங்கள் ஒரிஜினல் நாடி ஜோதிடத்தைத் தேட ஆரம்பித்தால் குறைந்தது 12 முறையாவது ஏமாற வேண்டி இருக்கும்;


நவக்கிரகங்களை இயக்கிவருபவர் கால தேவன் என்ற கால பைரவர் ஆவார்;எல்லா சிவன் கோவில்களிலும் க்ஷேத்திர பாலராக இருக்கின்றார்;அவரின் அருளை பணம் கொடுத்து பெற முடியாது;தினமும் ஒரு மணி நேரமாவது நேரம் ஒதுக்கி மூன்று ஆண்டுகள் வரை ஜபித்து வருவதன் மூலமாக கால பைரவரின் அருளைப் பெறலாம்;


15 வயது முதல் வாழ்நாள் முழுவதும் தினமும் ஒரு மணி நேரம் ஏதாவது ஒரு மந்திர ஜபம் செய்ய வேண்டியது நம் ஒவ்வொருவருடைய= இந்துக்களாகிய ஒவ்வொருவருடைய கடமை ஆகும்;வைஷ்ணவத்தில் இருக்கும் சக்கரத்தாழ்வார்,வைஷ்ண்வ பைரவர் ஆவார்;புத்தம்,ஜைனம் போன்ற மதங்களிலும் இன்று வரையிலும் பைரவ ஜபம்,பைரவ யாகம்,பைரவ உபாசனை பின்பற்றப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றது;


ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ

இதுதான் கால பைரவரின் அருளைப் பெற உதவும் மந்திரம்;100 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்து தர்மத்தில் 4 வித சமுதாயக் கட்டமைப்பு இருந்து வந்தது;குழந்தைப் பருவம்,ப்ரம்மச்சாரிய (வாலிபப் பருவம்),இல்லறப் பருவம்,துறவறப் பருவம் என்று இருந்தது; தற்போது இரண்டே இரண்டு பருவங்களே நமது இந்து சமுதாயத்தில் இருக்கின்றன;ஒன்று இல்லறப்பருவம்,மற்றது துறவறப்பருவம்;

1965 வரை பக்தியால் தமிழகம் சித்தர் பூமி என்ற பெருமிதத்தோடு இருந்தது;1965 முதல் 2018 வரை நாத்திகம் என்ற முகமூடி அணிந்து கொண்டு  மறைமுகமாக கிறிஸ்தவ மதமாற்றம் படுதீவிரமாக நடைபெற்றுக் கொண்டு இருந்தது; 

முத்தமிழை வித்தவர் என்ற பட்டத்தைத் தனக்குத் தானே சூட்டிக் கொண்டு ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆனவர்,இலுமுனாட்டிகளின் பல்வேறு செயல்திட்டங்களை தமிழ்நாட்டிற்குள் நடைமுறைப்படுத்திவிட்டார்;

1.இந்து தெய்வ நம்பிக்கையை சீர்குலைத்து,இறைவனுக்கு என்று வாழ்ந்து வந்தவர்களை தமது கட்சியின் விசுவாசிகளாக மாற்றினார்;
2.ஆங்கில வழிக் கல்வியை வணிகமயமாக்கியதன் மூலமாக தமிழ் வழிக் கல்வியை அழித்துவிட்டார்;இன்று தமிழ் வழியில் 10 ஆம் வகுப்பு வரை படிப்பது பிச்சைக்காரத்தனம் என்ற மனோபாவம் தமிழ்நாடு முழுவதும் பரவிவிட்டது;
3.கல்வித் திட்டங்களில் கிறிஸ்தவர்கள்,இஸ்லாமியர்கள்,நாத்திகவாதிகள்,கம்யூனிஸ்டுகள்
போன்றவர்களை நுழைத்து இந்து தர்மத்தின் புராதனமான படைப்புகள் அனைத்தையும் நீக்கினார்;
4.இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையினுள் நாத்திகவாதிகளையும், கிறிஸ்தவர்களையும் கோவில் ஈ ஓக்களாக ஆக்கி கோவில்களின் பரம்பரை பணியாளர்களை கோவிலை விட்டே ஓடச் செய்தார்;அதன் பிறகு சக்தி வாய்ந்த கோவில் விக்கிரகங்கள்(மூலவர் மற்றும் உற்சவர்கள்) அனைத்தையும் கடத்தி கொண்டு மேல்நாட்டினருக்கு விற்பனை செய்தார்;


இதனால்,பிரபலமான கோவில்களைத் தவிர பெரும்பாலான ஆலயங்கள் ஒரு வேளை பூஜை செய்யப்படாமல் தனது ஆத்ம பலத்தை இழந்து வருகின்றது;இது கடுமையான பைரவ சாபங்களை முத்தமிழை வித்தவருக்கும் அவரது சந்ததியினருக்கும் 20,000 பிறவிகள் வரை துரத்தி துரத்தி அடிக்கும்;அவர்களின் செல்வச் செழிப்பை நிர்மூலமாக்கிவிடும்;

கோவில்களில் முறைப்படி பூஜை செய்யாமல் அரசியல் திமிரைக் காட்டி தான் வந்த பின்னர் பூஜை செய்ய வைப்பது;

கோவில்களில் வழக்கமாக நடைபெறும் பூஜை,அபிஷேகம்,ஆராதனைகளை தந்திரமாக நிறுத்துவது(ஒரே ஒரு கோவிலில் தீவிபத்து நிகழ்ந்தமைக்கு ஓட்டு மொத்தமாக எல்லாக் கோவில்களில் நெய்தீபம் ஏற்றாமல் தடுப்பது)

தெய்வநம்பிக்கை இல்லாதவர்களையும்,வேறு மதத்தைச் சேர்ந்தவர்களையும் அறநிலையத்துறை அறங்காவலர் ஆக்குவது;சிறப்பு விழாகுழுவுக்கு தலைவர் ஆக்குவது;

பல கோடி முறை அபிஷேகம் ஆராதனை கண்ட மூலவர்,உற்சவரை திருடி இலுமுனாட்டிகளுக்கு விற்பனை செய்வது;

கோவில் சொத்துக்களைத் திருடுவது;திருடுவதற்குத் துணை போவது;இவைகள் அனைத்தும் பைரவ சாபத்தை தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் தந்துவிட்டது;

சரி,நாம் என்ன செய்ய?

26.1.2020 வரை தனுசு ராசியினர் கடுமையான கஷ்ட காலமான ஜன்மச்சனி காலத்தை அனுபவித்து வருகின்றார்கள்; அவர்கள் அது வரை அசைவம்,மது இரண்டையும் கண்டிப்பாக தவிர்த்துவிட்டு தினமும் 1008 முறை ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ என்று ஜபித்து வர வேண்டும்;அல்லது எழுதி வர வேண்டும்;1008 முறை இயலாதவர்கள் 108 முறை கண்டிப்பாக ஜபித்து அல்லது எழுதி வர வேண்டும்;


26.1.2020 முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு மகர ராசியினருக்கு ஜன்மச்சனி வர இருக்கின்றது;26.1.2020 க்குள் செய்யும் சிறிய தவறுகளால் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு படாத பாடு படப் போகின்றார்கள்;அவர்களும் தினமும் 1008 முறை ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ என்று ஜபித்து வர வேண்டும் அல்லது எழுதி வர வேண்டும்;1008 முறை இயலாதவர்கள் 108 முறை கண்டிப்பாக ஜபித்து அல்லது எழுதி வர வேண்டும்;


சனிக்கிரகத்திற்கு நவக்கிரக பதவி கொடுத்தவர் கால பைரவர்;சிவபெருமானின் முதன்மை அவதாரம் ஆவார்;பைரவ ஜபமும் சிவ ஜபத்தின் ஓர் அங்கமே!கிராமங்களில் இன்றும் நடைமுறையில் இருக்கும் முனீஸ்வரர் வழிபாடு என்பதும் தாந்த்ரீக சாஸ்திரப்படி பைரவ வழிபாடு தான் என்பதை அறிந்து கொள்ளவும்;

ஜோதிடர்கள்,அருள்வாக்கு சொல்பவர்கள்,எண் கணித நிபுணர்கள் அனைவரும் தினமும் ஜபிக்க வேண்டிய தெய்வம் மஹா கால பைரவப் பெருமான் ஆவார்;கால பைரவரும் மஹா கால பைரவரும் ஒருவரே!

சனியின் குருவாக இருக்கும் கால பைரவரை தினமும் ஜபித்து வந்தால் சனிபகவான் மகிழ்ச்சி அடைந்து தனது உக்கிரத்தை குறைத்துக் கொள்வார் என்பது சித்தர்கள் வாக்கு!

1995 முதல் நமது நாட்டிற்குள் உலக மயமாக்கல் என்ற முகமூடியை அணிந்துகொண்டு முதலாளித்துவம் புகுந்தது;இதனால்,இப்போது 2019 இல் எல்லோரும் பணத்தின் பின்னால் பேய் வேகத்தில் ஓட வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகிவிட்டது;செல்வத்தின் அதிபதியான ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை தினமும் ஜபிக்கலாம்;


துர்கை சித்தர் ஐயா எழுதிய சொர்ண பைரவ அஷ்டகம் என்ற பாடலை தினமும் 27 முறை ஜபித்து வந்தால் நேர்மையான வழியில் வருமானம் அதிகரிக்கும்;தினமும் அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் உங்கள் வீட்டின் பூஜை அறையில் இவ்வாறு ஜபித்து வந்தால் 1008 நாட்களுக்குப் பிறகு செல்வ வளம் மிக்க வாழ்க்கையைப் பெறுவீர்கள்;


குருவின் அருள் கிடைக்க வேண்டுமென்றால்,நாம் ஒவ்வொருவரும் இப்பிறவியில் மூன்று ஆண்டுகள் வரை தினமும் ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும்;

No comments:

Post a Comment