Tuesday, August 14, 2018

மஹாவராகியின் பிறந்த நாட்கள் 17.7.2018 & 15.8.2018

இந்த விளம்பி ஆண்டு,ஆடி மாதத்தில் இரண்டு முறை வளர்பிறை பஞ்சமி திதி வந்திருக்கின்றது;
ஆடி 1 ஆம் நாள்(17.7.2018 செவ்வாய்)
மற்றும்
ஆடி 30 ஆம் நாள் (15.8.2018 புதன்) அன்றும் வளர்பிறை பஞ்சமி திதி இருக்கின்றது;இந்த இரண்டு நாளுமே அன்னை மஹாவராகியின் பிறந்த நாள் ஆகும்;

ஸ்ரீசக்கரம் என்ற பெயருடைய அமைப்பின் மையத்தில் இருந்து அனைத்து தெய்வங்களையும் படைத்து,காத்து,பராமரித்து வருகின்றாள்;
ஸ்ரீலலிதா பரமேஸ்வரியின் அனைத்து படைகளையும் தலைமை தாங்கி நடத்துபவள் ஸ்ரீமஹாவராகி!

ஸ்ரீலலிதா பரமேஸ்வரியின் புருவ மத்தியில் இருந்து ஸ்ரீலலிதா பரமேஸ்வரியின் ஆணையின் பெயரில் ஆடி மாதம் வரும் வளர்பிறை பஞ்சமி அன்று உதயமானாள்;
இன்றும் நம் ஒவ்வொருவருடைய புருவ மத்தியிலும் சூட்சுமமாக இயங்கி வரும் ஆக்ஞ்சா சக்கரத்தை இயக்கிவருவது மஹாவராகி தான்!

மன வளக் கலை மன்றத்திற்கு தினமும் சென்றால்,ஒரு வாரம்/மாதம் கழித்து,குரு தட்சிணை பெற்றுக் கொண்டு நமக்கு ஒரு தீட்சை தருவார்கள்;
அங்கே,பேராசிரியர் என்ற பொறுப்பில் இருப்பவர்,நமது புருவ மத்தியைத் தொடுவார்;நமது மலத்துவாரத்திற்கு உள்ளே சுருண்டு கிடக்கும் குண்டலினி சக்தி உடனே நமது புருவ மத்திக்கு வரும்;
100 பேர்களுக்கு இப்படி தீட்சை கொடுத்தால்,80 பேர்கள் வரை புருவ மத்தியில் ஒரு சக்கரம் சுழல்வது போன்ற உணர்வு உண்டாகும்;இது தமிழ்நாட்டில் பிறந்து,தமிழ்நாட்டிலேயே வாழ்ந்து வருபவர்களுக்கு மட்டுமே நிகழும்;
அப்படி புருவ மத்தியில் சக்கரம் சுழலும் உணர்வு பெற்றவர்களுக்கு, இன்னும் ஒரு சில பிறவிகள் மட்டுமே இருக்கின்றன என்று அர்த்தம்;
அவர்களுக்கு மீதி 6 சக்கரங்களும் இயங்க ஆரம்பித்து விட்டதாகவும் அர்த்தம்;
புருவ மத்தியில் சக்கரம் சுழலும் உணர்வு பெறாதவர்களுக்கு கடுமையான கர்மச் சுமைகள் நிறைய இருக்கின்றன என்று அர்த்தம்;
தீட்சை பெற்ற ஒரு வாரத்திற்குள் மீண்டும் மனவளக் கலை மன்றத்திற்குச் சென்று மறு தீட்சை பெற வேண்டும்;புருவ மத்தியிலேயே நமது குண்டலினி சக்தி இருந்தால் நமது உடல் நிலை கெட்டுவிடும்;மறு தீட்சை பெற்ற பின்னர்,புருவ மத்தியில் இருந்து மீண்டும் மூலாதாரத்திற்கு குண்டலினி சக்தி சென்றுவிடும்;
அதன் பிறகு,தினசரி தியானம் செய்தாலும்
வாரம் ஒரு நாள் கோவிலுக்கு சென்றாலும்
ஏதாவது ஒரு செயலை ஆழ்ந்த கவனத்துடன் செய்தாலும் மீண்டும் தானாகவே புருவ மத்தியில் குண்டலினி சக்தி சக்கரம் போல சுழல ஆரம்பிக்கும்;
அதனால் தான்,அன்னை மஹாவராகியை ஆக்ஞாசக்ரேஸ்வரீ என்று அழைக்கின்றோம்;

இன்றைய பன்னாட்டு நிறுவனங்கள் தயார் செய்யும் பற்பசைகளில் ஃப்ளூரைடு என்ற வேதிப் பொருளைச் சேர்க்கின்றார்கள்;இதை பயன்படுத்தி தினமும் பல் துலக்கினால்,நமது புருவ மத்தியில் இயங்கும் பீனியல் கிளான்டு அழிந்துவிடும்;அதன் பிறகு,நமது குண்டலினி சக்தியை எழுப்பவே முடியாமல் போய்விடும்;
உலக அளவில் வாழும் பல இனங்களில் ஆன்மீக ஆற்றல் நமது நாட்டில் இருப்பவர்களுக்கு மட்டுமே உண்டு;புருவ மத்தியில் கடுகு அளவுக்கு இருக்கும் ஒரு சுரப்பியே பீனியல் கிளாண்டு;மனவளக் கலை மன்றத்திற்கு சென்று தீட்சை எடுத்தால்,நமது மூலாதாரத்தில் சுருண்டு (பாம்பு போல கிடக்கும்) குண்டலினி சக்தி எழந்து புருவ மத்திக்கு வரும்;புருவ மத்தியில் இருக்கும் பீனியல் கிளாண்டு என்ற சுரப்பிக்குள் நுழைந்துதான் சக்கரம் போல சுற்றும்;அந்த பீனியல் கிளாண்டுவையே இல்லாமல் அழித்துவிட்டால்,ஆன்மீகத்தில் இனி வரும் காலங்களில் இந்துக்களாகிய நாம் யாரும் முன்னேறவே முடியாமல் போய்விடும்;

இலுமுனாட்டிகளின் அடிமைகளான பன்னாட்டு நிறுவனங்கள் நமது ஆன்மீக முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பை நிரந்தரமாக அழிக்கவே நமது பற்பசைகளில் இந்த பீனியல் கிளாண்டு சுரப்பியை நிரந்தரமாக அழிக்கும் ஃப்ளூரைடுவை கலந்து விற்பனை செய்து வருகின்றன;


காலையில் பல் துலக்கிட,நாம் பயன்படுத்தும் பல்பொடியின் சுவை கசப்பு அல்லது துவர்ப்பாக மட்டுமே இருக்க வேண்டும்;இனிப்பு பற்பசையாக இருந்தால் நம்மை நாமே நோயாளியாக ஆக்கிடத் துவங்கி இருக்கின்றோம் என்று அர்த்தம்;
தமிழர்கள் ஒவ்வொருவரும் தினமும் அன்னை மஹாவராகியை ஒரு மணி நேரம் ஜபிக்க வேண்டும்;


அப்படி ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் மூன்று ஆண்டுகளுக்கு குறையாமல் ஜபித்தால் மட்டுமே நமது வாழநாள் முழுவதும் எதிரிகள்,துரோகிகள் தொல்லையின்றி நிம்மதியாக வாழ முடியும்;

தினமும் இரவில் ஒருமுறை வராகி மாலையை ஜபிக்கலாம்;

அல்லது


பின்வரும் 13 பெயர்களை இரவு தூங்கிடச் செல்லும் முன்பு ஒரு மணி நேரம் ஜபிக்கலாம்;
ஓம் ரீங் வாத்தியார் ஐயா,வாத்தியார் ஐயா
பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரீ
சமயசங்கேதா
வராகி
போத்ரிணீ
சிவை
வார்த்தாளீ
மஹாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரீ
அரிக்நீ
இந்த 13 பெயர்களை மட்டும் ஜபித்தால் போதும்;அன்னையின் கருணை நமக்கு கிட்டிவிடும்;


64 வகையான வராகி அவதாரங்கள் இருக்கின்றன;

சிவனின் ஐந்து முகங்களில் சதாசிவனின் மனைவியாக மஹாவராகி இருந்து நம்மை காத்து வருகின்றாள்;


புதன் கிரகத்தின் ப்ராண தேவதை உன்மத்த பைரவர் ஆவார்;இவரது துணை சக்தி உன்மத்த வராகி!

ஸ்ரீராஜராஜேஸ்வரியின் படைத்தலைவியாக இருப்பவளும் ஒரு மஹாவராகி!

வைஷ்ணவத்தில் மஹாவிஷ்ணுவின் வராக அவதாரத்திற்கு பக்கபலமாக இருந்தவள் மஹாவராகி;
எனவே,சைவம்,வைஷ்ணவம்,சாக்தம் என்ற மூன்று வழிபாட்டு முறைகளிலும் இருந்து நம்மை காப்பவள மஹாவராகி!
இல்லறத்தில் இருந்தவாறு யாராலும் வராகி உபாசனை செய்ய முடியாது;இங்கே,பக்தி மூலமாக அன்னை மஹாவராகியின் அருளைப் பெறும் வழிமுறையையே தெரிவித்துள்ளோம்;

No comments:

Post a Comment