Wednesday, May 23, 2018

மன அடக்கம் தரும் அஸ்வாரூடா வராகி என்ற குதிரைக்காரி!


உலகத்தில் வாழ்ந்து வரும் ஒவ்வொருவரும் முந்தைய பிறவிகள் நான்கில் செய்த பாவ,புண்ணியத்தினால் விளைந்த கர்மவினைகளை அனுபவிக்கவே இப்பிறவி எடுத்துள்ளார்கள்;இதில் விலங்குகளும்,மரம் செடி கொடிகளும் அடங்கும்;

புராணங்களை வாசித்துப் பார்த்தால்,ஒரு உண்மை விளங்கும்;இந்திரன்,தேவர்கள்,கந்தர்வர்கள்,அசுரர்கள் என்று யாராக இருந்தாலும் முறையற்ற காம இச்சையால் ரிஷியிடம் அல்லது துறவியிடம் சாபம் பெற்றிருப்பார்கள்;அல்லது நான் என்ற அகங்காரத்தினால் சாபம் பெற்று தனது பதவியை இழந்திருப்பார்கள்;

அது எப்படி தேவ உலகத்தில் வாழ்ந்து வருபவர்களுக்கும் நான் என்ற அகங்காரம் உண்டாகின்றது;முறையற்ற காம இச்சை தோன்றுகின்றது என்று கேள்வி கேட்டால் பதில் சொல்ல ஆளில்லை;

ஆக,பல கோடி பிறவிகளாக ஒவ்வொரு மனிதனும் சேமித்த புண்ணிய சக்திகளின் தொகுப்பாகவே ஒருவன் இந்திரப் பதவியை அடைகின்றான்;அல்லது அஷ்டதிக்கு பாலகர் என்ற பொறுப்பினை ஏற்கின்றான்;பிரம்மா என்பதும் ஒருவித பதவியே;விஷ்ணு என்பதும் ஒரு வித பதவியே;அதனால் தான் 1970 க்கு முந்தைய ஜோதிட நூல்கள்,வைத்திய நூல்கள்,ஆன்மீக வெளியீடுகளை வாசித்தால் இறைவன் என்றால் அது ஈசன் என்பதை உணரலாம்;

மஹா கணபதி உபாசனை செய்வதன் மூலமாக தடைகளை நீக்கி விடலாம்;

பைரவ உபாசனை செய்து வருவதன் மூலமாக கர்ம வினைகளை கரைத்துவிடலாம்;

ஸ்ரீவித்யா உபாசனை செய்து வருவதன்  மூலமாக பாவமற்ற நிலையை அடைந்துவிடலாம்;

அண்ணாமலை கிரிவலம் செல்வதன் மூலமாக மீண்டும் இந்த பூமியில் பிறவாத முக்தியை அடைந்துவிடலாம்;


இன்றைய கலியுகத்தில் உபாசனை என்ற ஆன்மீக வழிமுறையை பின்பற்ற யாராலும் இயலாது;மனிதர்களே உட்புக முடியாத வனப்பகுதிக்குள் சிலர் உபாசனை செய்து வருகின்றார்கள்;இன்றைய ஜனத்தொகை விகிதப்படி 1 கோடியில் ஒருவருக்கு உபாசனை கைகூடும்;மற்றவர்களுக்கு உபாசனையை போதிப்பதற்குக் கூட ஆன்மீக குரு கிடைப்பதில்லை;


இங்கே யாம் தெரிவிப்பது பக்தி மார்க்கத்தில் தான்;

இறைசக்தியின் அருளை பெற நான்கு விதமான வழிமுறைகளை நமது முன்னோர்களாகிய சித்தர்பெருமக்கள் போதித்திருக்கின்றார்கள்;

1.ராஜ யோகம் = ப்ராணயாமம்,யோகா,வாசி யோகம் மூலமாக முயற்சிப்பது

2.ஞான யோகம் = பக்தி நூல்களை வாசிப்பது,குருவின் வழிகாட்டுதல் படி செயல்படுவது

3.கர்ம யோகம் = மனதைக் கட்டுப்படுத்தத் தெரிந்த எவரும் இதைச் செயல்படுத்தலாம்;சுவாமி விவேகானந்தரின் பேச்சுக்கள் அடங்கிய கர்ம யோகம் நூல் தான் இதற்கு வழிகாட்டி;

4.பக்தி யோகம் =இன்றைய கால கட்டத்தில் இல்லறவாசிகளான நமக்கு இதுதான் ஒத்து வரும்;காவடி எடுப்பது,பாத யாத்திரை செல்வது;அன்னதானம் செய்வது;கோவில் கட்டுவது/மறு நிர்மாணம் செய்வது/சீரமைப்பது; தினசரி மந்திர ஜபம் செய்வது;ஆன்மீக முயற்சிகளை ஜோதிடத்தின் அடிப்படையில்,ஜோதிட வழிகாட்டுதலின் படி செயல்படுத்துவது;

 அஸ்வாரூடா மாலையை    தினமும் ஒருமுறையும்,ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அன்று ஐந்து அல்லது இருபத்தைந்து முறையும் ஜபிக்க வேண்டும்;அஸ்வாரூடா வராகிக்கு தனியாக ஒரு தீபம் ஏற்றி வைத்து அந்த தீபத்தை பார்த்தவாறு ஜபிப்பது சிறப்பு;அந்த சமயத்தில் மனதில் அன்னையின் உருவம் தெரியும் விதமாக நினைத்துக் கொண்டே(இதற்கு பாவனை என்று பெயர்) ஜபிக்க வேண்டும்;

சில வாரங்கள் அல்லது மாதங்களுக்குப் பிறகு,அஸ்வாரூடா வராகியின் அருளை சூசகமாக உணரலாம்;அதன் பிறகு தொடர்ந்து அஸ்வாரூடா மாலையை ஜபித்து வர மூன்று முதல் ஐந்து  ஆண்டுகளுக்குள் மனமானது மிதமிஞ்சிய சிற்றின்ப ஆசையில் இருந்து முழுமையாக விலகிச் சென்றுவிடும்;


நமது ஆன்மீக லட்சியங்களை நோக்கி அதன் பின்னர் படுவேகமாக முன்னேறலாம்;



அஸ்வாரூடா மாலையையும்,அஸ்வாரூடா வராகியின் முழுமையான வழிபாட்டுமுறையையும் பெற விரும்புவோர் எம்மை நேரில் சந்திக்கவும்;

No comments:

Post a Comment