Saturday, August 12, 2017

திருக்கடவூர்மயானம்


திருச்சிற்றம்பலம்
1.வரிய மறையார், பிறையார், மலை ஓர் சிலையா வணக்கி 
எரிய மதில்கள் எய்தார், எறியும் முசலம் உடையார்,
கரிய மிடறும் உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்;
பெரிய விடைமேல் வருவார் அவர் எம்பெருமான் அடிகளே .
மங்கை மணந்த மார்பர், மழுவாள் வலன் ஒன்று ஏந்திக்
கங்கை சடையில் கரந்தார் கடவூர் மயானம் அமர்ந்தார்;
செங்கண் வெள் ஏறு ஏறிச் செல்வம் செய்யா வருவார்,
அம் கை ஏறிய மறியார் அவர் எம்பெருமான் அடிகளே.
3.ஈடு அல் இடபம் இசைய ஏறி, மழு ஒன்று ஏந்தி,
காடு அது இடமா உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்;
பாடல் இசை கொள் கருவி படுதம் பலவும் பயில்வார்,
ஆடல் அரவம் உடையார் அவர் எம்பெருமான் அடிகளே.
4.இறை நின்று இலங்கு வளையாள் இளையாள் ஒருபால் உடையார்,
மறை நின்று இலங்கு மொழியார், மலையார், மனத்தின் மிசையார்
கறை நின்று இலங்கு பொழில் சூழ் கடவூர் மயானம் அமர்ந்தார்;
பிறை நின்று இலங்கு சடையார் அவர் எம்பெருமான் அடிகளே.
5.வெள்ளை எருத்தின் மிசையார், விரி தோடு ஒரு காது இலங்கத்
துள்ளும் இளமான் மறியார், சுடர் பொன் சடைகள் துளங்கக்
கள்ளம் நகு வெண்தலையார் கடவூர் மயானம் அமர்ந்தார்;
பிள்ளை மதியம் உடையார் அவர் எம்பெருமான் அடிகளே.
6.பொன்தாது உதிரும் மணம் கொள் புனை பூங்கொன்றை புனைந்தார்,
ஒன்றா வெள் ஏறு உயர்த்தது உடையார், அதுவே ஊர்வார்
கன்று ஆ இனம் சூழ் புறவின் கடவூர் மயானம்
அமர்ந்தார்;
பின் தாழ்சடையார், ஒருவர் அவர் எம்பெருமான் அடிகளே.
7.பாசம் ஆன களைவார், பரிவார்க்கு அமுதம் அனையார்,
ஆசை தீரக் கொடுப்பார், அலங்கல் விடை மேல் வருவார்;
காசை மலர் போல் மிடற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார்;
பேச வருவார், ஒருவர் அவர் எம்பெருமான் அடிகளே.
8.செற்ற அரக்கன் அலறத் திகழ் சேவடி மெல்விரலால்
கல் குன்று அடர்த்த பெருமான் கடவூர் மயானம்
அமர்ந்தார்;
மற்று ஒன்று இணை இல் வலிய மாசு இல் வெள்ளிமலை போல்
பெற்றொன்று ஏறி வருவார் அவர் எம்பெருமான் அடிகளே.
9.வரு மா கரியின் உரியார், வளர்புன் சடையார், விடையார்,
கருமான் உரி தோல் உடையார் கடவூர் மயானம்
அமர்ந்தார்;
திருமாலொடு நான் முகனும் தேர்ந்தும் காண முன் ஒண்ணாப்
பெருமான் எனவும் வருவார் அவர் எம்பெருமான் அடிகளே.
10.தூய விடை மேல் வருவார், துன்னார் உடைய மதில்கள்
காய வேவச் செற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார்;
தீய கருமம் சொல்லும் சிறு புன் தேரர், அமணர்,
"பேய், பேய்!" என்ன வருவார் அவர் எம்பெருமான்
அடிகளே.
11.மரவம்பொழில் சூழ் கடவூர் மன்னு மயானம் அமர்ந்த,
அரவம் அசைத்த, பெருமான் அகலம் அறியல் ஆகப்
பரவும் முறையே பயிலும் பந்தன் செஞ்சொல் மாலை,
இரவும் பகலும் பரவி நினைவார், வினைகள் இலரே.
திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment