Sunday, May 14, 2017

அன்னை மஹாவராகியின் அருளைத் தரும் தொடர் ஜபம்!!!


உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் என்று அனைத்தையும் சதாசிவனின் அருளால் நிர்வகித்து வருபவர் மஹா கால பைரவப் பெருமான்! இவருக்கு சூட்சுமமாக நின்று அருளையும்,ஆற்றலையும் அருளுவது அன்னை மஹாவராகியே!!!

ஒவ்வொரு பஞ்சமி திதி அன்றும் பராசக்தி என்ற ராஜராஜேஸ்வரியானவள் ருத்ர சக்தி,சத்ரு சக்தி,மித்ர சக்தி,துவார சக்தி,விகல்ப சக்தி என்ற ஐந்துவிதமான சக்திகளையும் உலகம் முழுவதும் இருக்கும் அம்பாள் சன்னதியின் கோபுரக் கலசங்கள்,திரு அண்ணாமலை,சதுரகிரி மலை,கொல்லிமலை,சக்தி பீடங்கள் அனைத்தும் மற்றும் அன்றைய நாட்களில் கோவில்களின் பிரகாரங்களில் இடப்படும் மாக்கோலங்கள் மற்றும் தீபங்கள் மூலமாக பிரதிபலித்து பக்தர்களை அடைகின்றன;

இந்த ஐந்துவிதமான சக்திகளுக்கும் அதிபதியாக இருப்பது உத்திரம் நட்சத்திரம் ஆகும்;எனவே,உத்திரம் நட்சத்திரமும் பஞ்சமி திதியும் சேர்ந்து வரும் நாட்களின் அன்னை மஹாவராகியின் ஜபத்தை நிறைவு செய்யும் விதமான தினசரி ஜபம் செய்வது அவசியம்;

நாளை 15.5.2017 திங்கட்கிழமை அன்று துவங்கி 28.7.2017 வெள்ளிக்கிழமை அன்று வளர்பிறை பஞ்சமியும்,உத்திரம் நட்சத்திரமும் அன்னை மஹாவராகியின் பிறந்த திதியும் சேர்ந்தே வர இருக்கின்றது;

நாளை முதல் தினமும் அன்னை மஹாவராகியின் 12 பெயர்களை அதிகாலையில் 30 நிமிடமும்,இரவுப் பொழுதில் 30 நிமிடமும் ஜபித்து வரவேண்டும்;

கூடவே தினமும் மஹாகால பைரவப்பெருமானின் வாகனமான நாய்க்கு உணவு தானம் செய்து வரவேண்டும்;இதைச் செய்ய இயலாதவர்கள் மாதம் ஒருமுறையாவது அண்ணாமலைக்கு இரவுப்பொழுதில் கிரிவலம் செல்ல வேண்டும்; கிரிவலப் பாதை முழுவதும் பைரவர்களை தரிசிக்கலாம்;அவர்களுக்கு பிஸ்கட்,பொறை தானம் செய்து கொண்டே வரவேண்டும்;

புதன் கிழமை மற்றும் சனிக்கிழமை தோறும் உள்ளூரில் இருக்கும் சிவாலயம் சென்று அங்கே ஒரு மணி நேரம் (இரவு பொழுது மிகவும் நன்று) அன்னையின் 12 பெயர்களை ஜபித்து வரவேண்டும்;

இப்படி மூன்றுவிதமான செயல்களைச் செய்து வரவேண்டும்;நிறைவாக 28.7.2017 வெள்ளிக்கிழமை அன்று காலை 7 மணிக்குள் அன்னை மஹாவராகி இருக்கும் சன்னதிக்கு சென்று பின்வரும் பொருட்களை தானமாக தரவேண்டும்;வசதிப்படுபவர்கள் அபிஷேகம் செய்வது நன்று;இந்த நாளில் காலை 10.43க்கு பஞ்சமி திதி இருந்தாலும்,உத்திரம் நட்சத்திரம் காலை 9 மணி வரை தான் இருக்கின்றது அதற்குள் வழிபாடு/அபிஷேகம்/பிரார்த்தனையை நிறைவு செய்துவிடுவது அவசியம்;

செவ்வாழைப்பழம்
மாதுளம் பழம்
மாம்பழம்
பலாப்பழம்
திராட்சைப்பழம்

போன்றவைகளை படையலாக இடவேண்டும்;தினமும் ஒரு மணி நேரம் வரை அன்னை மஹாவராகியின் 12 பெயர்களை ஜபித்து வரவேண்டும்;இதன் மூலமாக கடந்த காலங்களில் நமக்கு பிறர் செய்திருந்த மாந்திரீக பாதிப்புகள் அனைத்தும் விலகிவிடும்;

ஓம் ரீங் வாத்தியார் ஐயா வாத்தியார் ஐயா
பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரீ
சமயசங்கேதா
வராகி
போத்ரிணி
சிவை
வார்த்தாளீ
மஹாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரீ
அரிக்நீ

இந்த பெயர்களை மனதிற்குள் (உதடு அசையாமல்) ஜபித்துவரவேண்டும்;

ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் அருணாச்சலாய நமஹ

No comments:

Post a Comment