Saturday, October 31, 2009

LONGLIFE


ஒருவரது ஆயுள்பலம் அதிகரிக்க ஆலோசனைகள்

1.தினமும் காலையும், மாலையும் அரைமணிநேரத்திற்கு குறையாமல் ப்ராணயாமம் எனப்படும் மூச்சுப்பயிற்சி செய்துவருதல்.(இந்த ப்ராணயாமப்பயிற்சியை இராமகிருஷ்ணமிஷன் கிளைகளிலும், வேறு பல இந்து மத ஆன்மீக மடங்களிலும் பயிற்றுவிக்கிறார்கள்)

இருபது நிமிடம் தன்னை மறந்த தியானம் செய்யவேண்டும்.(இதன் பெயர் ஆழ்நிலைதியானம்.நமது ஆன்மீகக்கடலில் ஆழ்நிலை தியானம் பயிற்றுவிக்கும் தமிழ்நாட்டு இடங்களை டிசம்பர் 2008 ஆம் வலைப்பூக்களில் குறிப்பிட்டுள்ளோம்..அல்லது http://www.tm.org/ என்ற ஆங்கில இணைய தளத்தில் நீங்கள் உங்கள் பகுதியில் ஆழ்நிலை தியானம் சொல்லித்தரும் இடத்தைக் கேட்டால் மின் அஞ்சல் அனுப்புவார்கள்.)
(இந்த ஆழ்நிலை தியானம் செய்யத்துவங்கிய சில நாட்களில் நமது தேவையற்ற கோபம்,ஆவேசம்,பொறாமை,ஆத்திரம்,வறுமை,பயம்,கூச்சம், தேவையற்ற வெட்கம், பதட்டம்,நோயின் வேதனைகள் எல்லாமே காணாமல் போயிருக்கும்)

2.கீழ்க்கண்ட மந்திரத்தை தினமும் காலையும்,மாலையும் குறைந்தது 32 தடவை ஜபிக்கவேண்டும்.வீட்டில் பூஜை அறை அல்லது அருகில் உள்ள கோவிலில் ஜபிக்கலாம்.

த்ரியம்பகம் யஜாமஹே
ஸீகந்திம் புஷ்டி வர்தனம்
உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர்
முக்ஷிய மாம்ருதாத்

3.பல ஜோதிடர்களிடம் உங்கள் பிறந்த ஜாதகத்தை காண்பிக்காமல் இருத்தல்

(பல ஜோதிடர்கள் சமூகப் பொறுப்புடன் இருப்பதில்லை.சிலருக்கு கருநாக்கு இருக்கும்.ஆனால் நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருப்பீர்கள்.அந்த கருநாக்கு ஜோதிடர் என்ன சொல்லுவார் என்பதை உணருங்கள்.)
(தமிழ்நாட்டில் ஒரு நப்பிக்கூட்டம் இருக்கின்றது.இவர்கள் கையில் எப்போதும்,இவர்களின் பிறந்த ஜாதகக்கட்டம் இருக்கும்.ஒரு நாளுக்கு ஒரு முறையாவது ஜாதகம் யாரிடமாவது ஓசியில் பார்க்காவிட்டால் இவர்கள் தூங்கமாட்டார்கள்.எனக்கு ஜோதிடம் தெரியும் என எவர் சொன்னாலும் போதும்.இந்த ரக மனிதர்கள் உடனே அவர் காலில் விழுந்தாவது தனக்கு ஜோதிடம் சொல்லும்படி கெஞ்சுவர்.இப்படி வாழ்நாள் முழுக்கப்பார்த்துக்கொண்டே இருப்பவர்கள் இருக்கிறார்கள்.ஒரு டீக்காக இவர்களுக்கு ஜோதிடர்கள் ஜோதிடம் பார்க்கும் கூத்தும் நடக்கிறது.இது மாபெரும் தவறு)

No comments:

Post a Comment