Tuesday, October 20, 2009

ASTROQANDA

ஜோதிடக் கேள்வி பதில் பகுதி 2

அ)பாலாஜி, புதுக்கோட்டை,தஞ்சாவூர் மாவட்டம்
6.10.86,சுவாதி நட்சத்திரம்

ஜீன் 2010 முதல் 4 மாதங்கள் வரை ஓரளவு சிறப்பான வாழ்க்கை இருக்கும்.ஜனவரி 2011 முதல் வாழ்க்கை மிகச் சிறப்பாக இருக்கும்.20.11.2010 வரை சனி தசையில் சுக்கிரபுக்தி நடைபெறுகிறது.மறுநாள் முதல் வாழ்க்கையில் வசந்தம் துவங்குவதை கண்கூடாக உணரலாம்.

தாங்கள் உடனே செய்ய வேண்டியது 9 சனிக்கிழமைகளுக்கு உடல் ஊனமுற்றோர்களுக்கு அன்னதானமும், உதவியும் செய்து வர வேண்டும்.

அல்லது நல்லெண்ணெய் தானம், இரும்புப்பொருட்கள் தானம் (கோயிலுக்கு அல்லது மனிதர்களுக்கு) செய்ய வேண்டும்.

எண்கணிதப்படி தங்களின் பெயரை மாற்றவும்.

ஆ) சி.சீனிவாசன், சேலம் மாவட்டம்.22.2.1983
அப்பா சிவராகு
தாங்கள் குடும்ப அமைப்பை தகர்க்கும் விதமாக செயல்பட்டு வருகிறீர்கள்.இந்த செயல்பாட்டை 27.10.2009க்குள் அடியோடு நிறுத்தவும்.

தாங்கள் எங்கு சென்றாலும் உங்களுக்கு வரவேற்பு இருப்பதாக நம்புகிறீர்கள்.ஆனால் அது ஆரம்பத்தில் மட்டுமே.

மூலம் நட்சத்திரத்தன்று காரைக்குடி அருகில் உள்ள கற்பகவிநாயகர் கோவிலுக்குச் சென்று தங்கள் பெயரில் அர்ச்சனை செய்யவும்.ஒரு முறை மட்டும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தன்று திங்களூர்(சந்திர பகவான் ஸ்தலம்) சென்று வழிபாடு செய்யவும்.

தாங்கள் பிறந்த ஊரிலிருந்து தெற்குத்திசையிலிருந்து மனைவி அமைவாள்.

மேற்கூறியவற்றைச் செய்த பின்னர், தங்களின் பெயரை மாற்றவும்.

இவற்றை முடித்தால் தங்களுக்கு அரசுப்பணி கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.
வாழ்க வளமுடன்!!!

No comments:

Post a Comment