Tuesday, October 13, 2009

DIWALIGREETS

ஆன்மீகக்கடல் வாசகர்களுக்கு நன்றிகள்

இதுவரை 161 வாசகர்கள் எமது கோரிக்கையை ஏற்று கேள்விகள் கேட்டுள்ளனர்.அவர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள்!!!
தீபாவளித்திருநாள் விடுமுறைகளில் இந்த 161 வாசகர்களுக்கும் ஜாதகம் கணிக்கப்பட்டு, தீபாவளித் திருநாளுக்கு அடுத்த வாரத்தில் பதில்கள் வெளியிடப்படும்.
எனது ஆன்மீகக்கடல் வாசக வாசகிகள்,சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!
கி.பி.2010 தீபாவளிக்குள் நீங்கள் ஒவ்வொருவரும் சுயச்சார்புடன் வாழ வாழ்த்துகிறேன்.
சுயச்சார்பு என்றால்,யாரையும்,எப்போதும்,எதற்காகவும் நம்பாமல் தன்னை மட்டும் நம்பி வாழும் வாழ்க்கை என்று பொருள்.இதற்கு உதாரணமாக நமது பாரதநாடு கி.பி.1799 வரை திகழ்ந்தது.கி.பி.2010 முதல் மீண்டும் அந்த நிலையை அடைந்துவிடும்.

தற்போது சுயச்சார்பான நாடு இஸ்ரேல் ஆகும்.
தற்போது சுயச்சார்பான இயக்கம் ஆர்.எஸ்.எஸ்.ஆகும்.
தமிழர்களில் சுயச்சார்பின் நேரடி உதாராணம் நமது துருவ நட்சத்திரம் பிரபாகரன் ஆவார்.
முதலில் பொருளாதார ரீதியில் சுயச்சார்பை அடைவோம்.சேமிப்பும்,சிக்கனமும்(கஞ்சத்தனம் கூட தப்பில்லை) நம்மை சுயச்சார்புள்ளதாக மாற்றும்.
அடுத்தபடியாக, மனித உறவுகளில் சுயச்சார்புள்ள உறவுகளை உருவாக்குவோம்.
இதனால், நாம் வாழும் சமுகத்தை சுயச்சார்புள்ளதாக மாற்றுகிறோம்.
இவ்வளவும் நடந்தால் நமது நாடே சுயச்சார்புள்ள நாடாக மாறும்.

No comments:

Post a Comment