Thursday, April 7, 2016

குடிப்பதில் இருந்து மீள உதவும் இயற்கை உணவுக் கலவை


தினசரி காலையில்  10 வில்வ இலை;ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை;ஒரு கைப்பிடி அளவு மல்லித்தழை,கூடவே சிகப்பரிசி கழுவிய தண்ணீர் ஒரு லிட்டர்=இவைகளை மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும்;

இதை மனைவிமார்கள் தங்களுடைய குடிகார கணவர்களுக்கு, மன்னிக்கவும்; மாண்புமிகு குடி நோயாளிகளான அவர்களுக்கு வெறும் வயிற்றில் சாப்பிடக்  கொடுக்கவும்;

குடிப்பழக்கம் தானாகவே சில வாரங்களில் நின்றுவிடும்;நன்றி: திரு.மாறன் ஜி அவர்களின் சிற்பி வாழ்வியல் மையம்,சிவகாசி (இங்கே மாதம் தோறும் நடத்தப்படும் இயற்கை உணவுகள் பயிற்சி முகாமில் கிடைத்த உணவுக்குறிப்பு)


நாம் ஒவ்வொருவரும் ஏன் அன்னை அரசாலை(வராகி)யைச் சரணடைய வேண்டும்?


ஏன் எனில்,நாம் மனிதப் பிறவி எடுத்து பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன;திரும்பத் திரும்ப இந்த பூமியில் பிறந்து கொண்டே இருக்கிறோம்;ஒரு பிறவியில் அதிகமான புண்ணியம் செய்தால்,அடுத்த பிறவியில் வசதியான,ஜாலியான வாழ்க்கை அமைகிறது;செல்வச் செழிப்பு வரும் போது கூடவே செல்வச் செருக்கு(பணத்திமிர்)ம் வந்துவிடுகிறது.எனவே,கண்டதற்கெல்லாம் ஆசைப்படுகிறோம்;ஆசை நிறைவேறாத பட்சத்தில் நாம் செய்யும் மூர்க்கமான செயல்கள் நமது பிறவிகளின் எண்ணிக்கையை இன்னும் அதிகப்படுத்திவிடுகின்றன;

ஒரு நடிகையைப் பார்த்து மோகம் கொண்டால் அவளை அனுபவிப்பதற்காகவே இன்னும் ஒரு பிறவி எடுக்க வேண்டியிருக்கிறது.நம்மை நினைத்து யாராவது ஏங்கிவிட்டால் அவர்களுடன் வாழ்வதற்காகவே அந்த ஒருவருக்காக நாம் இன்னும் ஒரு பிறவி அதிகமாக எடுக்க வேண்டியிருக்கிறது.

இந்த பிறவிச்சுழலை அறுத்து ஒரு போதும் பிறக்காமல் இருக்க சிவ வழிபாடு,பைரவ வழிபாடு,வராகி வழிபாடு என்று மூன்றுவிதமான வழிபாடுகள் இருக்கின்றன;

இதில் தொடர்ந்து மூன்று பிறவிகளாக சித்தரின் சீடராக இருந்திருந்தால் இப்பிறவியில் பைரவரை வழிபடத் துவங்குவோம்;அல்லது கடந்த மூன்று பிறவி முழுவதும் சிவ வழிபாடு செய்திருந்தால் இப்பிறவியில் பைரவ வழிபாட்டு முறைகள் நம்மைத் தேடி வரும்;இந்த சித்த ரகசியத்தை நமக்குத் தெரிவித்திருப்பவர் சிரஞ்சீவி சித்தர் காகபுஜண்டர் ஆவார்;

தொடர்ந்து மூன்று பிறவிகள் முழுவதும் பைரவப் பெருமானைச் சரணடைந்தப் பின்னரே நமக்கு அன்னை அரசாலை(வராகி) என்பவள் யார்? என்றே அறிய முடியும்;

ஆமாம்!
இப்பிரபஞ்சத்தில் சக்தி ரூபமாக இருப்பவளும்,நம்மை கதி மோட்சம் கொடுப்பவளுமாக இருப்பவளே அன்னை அரசாலை என்ற வராகி!!

இராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை தாலுகாவில் மங்கள மகா காளியம்மன் என்ற பெயரில் சுயம்புவாகத் தோன்றி அருள்பாலித்து வருகிறாள்;

காஞ்சிபுரத்துக்கும் அரக்கோணத்துக்கும் நடுவே பள்ளூர் என்ற கிராமத்தில் அரசாலை என்ற பெயரில் அருளாட்சி புரிந்து வருகிறாள்;

தஞ்சாவூரில் பிரகதீஸ்வரர் கோவிலில் ப்ருகத் வராகி என்ற பெயரில் உலகத்தை ஆண்டு வருகிறாள்;

மதுரையில் மீனாட்சியாக அருள்புரிந்து வருகிறாள்;

திருச்சி திருவானைக்காவில் அகிலாண்டேஸ்வரியாக அரசாண்டு வருகிறாள்;

காசியில் அன்னபூரணியாகவும்,விசாலாட்சியாகவும் நிர்வகிப்பதோடு,64 படித்துறைகளில் 64 வித பைரவப் பெருமான் களோடு 64 வித வராகிகளாகவும் இப்பூமியை ஆண்டு வருகிறாள்;

பணம்,செல்வ வளம்,ஆடம்பரம்,பூஜைப் பொருட்கள் மூலமாக இந்த அன்னையின் அருட்பார்வையைப் பெற முடியாது;

நியாயமற்றவர்களை பாரபட்சமின்றி தண்டிப்பதோடு தன்னைச் சரணடைந்தவர்களை பாதுகாப்பதில் இவளுக்கு நிகர் இவள் மட்டுமே!!!

ஒருபோதும் பிறருக்குத் தீங்கு தராமல்,பிறரின் நயவஞ்சகத்தால் பாதிக்கப்பட்டு,பிறரின் பொறாமைச் செயல்களால் துன்பப்பட்டு வேதனைப்படுபவர்களுக்கு உடனடியாக வரமும்,பாதுகாப்பும் அருள்பவள் இந்த பிரபஞ்ச அன்னை!!!

84,00,000 உயிரினங்கள் இந்த பூமியில் இருக்கின்றன;இந்த 84,00,000 உயிரினங்களாகவும் நாம் ஒவ்வொருவரும் பிறவி எடுத்தப் பின்னரே,இந்த மனிதப் பிறவி எடுத்திருக்கிறோம்;என்பது நம்மில் எத்தனை பேர்களுக்குத் தெரியும்?

மனிதப் பிறவி எடுத்ததில் இருந்து நம் ஒவ்வொருவரையும் ப்ராரப்த கர்மா,சஞ்சித கர்மா,ஆகாம்ய கர்மா என்ற க்ரியமாண கர்மா என்று மூன்று கர்மாக்கள் தான் நம்மை இயக்குகின்றன.


அன்னை மங்கள மகா காளியம்மன் என்ற அரசாலை(வராகி)யைச் சரணடைந்தால் இந்த மூன்று கர்ம்மாக்களையும் ஒரே மூச்சுக்காற்றினால் வீசித் தள்ளிவிடுவாள்;


அப்படி வீசித் தள்ளிவிட்டால்,நமக்கு இனி ஒரு பிறவி இந்த பூமியிலும்,எந்த பூமியிலும் கிடையாது;(பல பிரபஞ்சங்கள் உள்ளன;பல பூமிகள் உள்ளன;பல மனித இனங்கள் இருக்கின்றன;நாம் வாழும் பூமியில் தான் கோவில்,ஆன்மீகம்,தியானம்,தவம் இருக்கின்றது;நாம் வாழ்ந்து வரும் பூமியிலும் நமது பாரத நாட்டில் மட்டுமே இவைகள் அனைத்தும் இருக்கின்றன)ஆமாம்! முக்தியைப் பெற்றுவிடுவோம்;


எப்படி அன்னை மங்கள மகா காளியம்மன் என்ற அரசாலை(வராகி)யைச் சரணடைவது?

எப்படி அவள் மனதில் இடம் பிடிக்கும் விதமாக வழிபாடு செய்வது?

அதற்கு முன்பு இந்த மூன்று கர்மாக்களின் சுபாவங்களைப் புரிந்து கொள்வோம்;அப்போதுதான் இந்த அன்னையின் கருணையை உணர்ந்து கொள்ள முடியும்;

1.சஞ்சித கர்மா(கூட்டுவினை):நமது பல முற்பிறவிகளில் செய்த செயல்களால் நாம் சேர்த்து வ்ஐத்த ஒட்டுமொத்த கூட்டு கர்ம பலன்!
இப்பிறவியில் நாம் அடையும் உடல்,தோற்றம்,குணங்கள்,மன எழுச்சி,திறமை,ஆர்வம்,விருப்பம் ஆகியவை சஞ்சித கர்மாவின் ஒரு பகுதியாகும்;
நமக்கு ஏற்படும் பல பிறவிகளில் ஒரே மாதிரியான உடலும்,தோற்றமும்,திறமையும் அமைவதில்லை;இவை அனைத்தும் இறைசக்தியின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன.

2.ப்ராரப்த கர்மா(விதி வினை அல்லது விதிப்பலன் வினை):
நமது நிகழ்கால பிறவிக்கு காரணமான கர்மபலன்!இது சஞ்சித கர்மாவின் ஒரு பகுதியாகும்;இதனைத் தவிர்க்க இயலாது.பெருமளவிற்கு மாற்ற இயலாது.இந்த கர்மாவை அனுபவித்தே ஆக வேண்டும்;இதைத்தான் நாம் விதி என்கிறோம்.இதில் நற்பலன்,தீயபலன் ஆகியன அடங்கும்.
நமது நிகழ்கால பிறவியில் நாம் அனுபவிக்கும் சுகபோகங்களும்,செல்வச் செழிப்பும்,நமது வெற்றியும்,சாதனைகளும் முற்பிறவியின் நற்செயல்களால் ஏற்பட்டவை;

நமது நிகழ்கால பிறவியில் நாம் அனுபவிக்கும் துன்பமும்,துயரமும்,தோல்வியும் முற்பிறவியின் தீயச் செயல்களால் ஏற்பட்டவை.இதனை ஒவ்வொருவரின் ஜாதகமும் துல்லியமாகக் காண்பிக்கும்.இப்பிறவியில் ப்ராரப்த கர்ம பலனை முழுவதுமாக அனுபவித்து முடிந்ததும்,மனிதனின் வாழ்க்கை முடிவடைந்து மரணம் ஏற்படுகிறது.

இங்கே தான் எமது  ஜோதிட ஆலோசனை உங்களுக்கு ஆன்மீக வழிகாட்டுதலாக மாறுகிறது;(இதற்கு எமது 27 வருட ஜோதிட மற்றும் ஆன்மீக அனுபவம் உங்களுக்கு துல்லியமாக வழிகாட்டுகிறது)

இதன் மூலமாக தாங்கள் எந்த கடவுளை எப்படிக் கும்பிட வேண்டும்?

எவ்வளவு காலம் வழிபட வேண்டும்?

ஏன் அப்படி அந்தக் கடவுளை கும்பிட வேண்டும்? அல்லது உபாசனை செய்ய வேண்டும்? என்ற சரியான ஆலோசனை கிடைக்கிறது.இவைகளை முறையாகவும் முழுமையாகவும் பின்பற்றுவதன் மூலமாக உங்களுடைய வாழ்க்கை லட்சியத்தை அடைய முடியும்;ஆன்மீக இலக்குகளைச் சென்றடைய முடியும்;பிறவிகளின் லட்சியத்தை/லட்சியங்களையும் அடைய வழிகாட்டிட முடியும்.


முழுமுதற் பரமகுரு முத்துவடுகநாதர் ,சிங்கம்புணரி


சிங்கம்புணரி என்ற சிற்றூரில் 200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து வந்தவர் திரு.முத்துவடுகநாதர்;

இவர் திருநிறை பூவலத்தேவருக்கும்,திருவளர் குமராயி அம்மைக்கும் மகனாக அல்ல;மகானாக கி.பி.1736 இல் அவதரித்தார்;

மன்னர் பரம்பரையில் அவதரித்தமையால்,உறவுகளிடையே போட்டியும்,பொறாமையும் உருவானது;எனவே,இவரை இவரது தாயார் குமராயி அம்மாள் அவர்கள் இவரை சிங்கம்புணரிக்கு ஒரே நாளில் அழைத்துவந்துவிட்டார்;இங்கே கி.பி.1833 வரை வாழ்ந்தார்;

இவர் செய்த அற்புதங்களை எழுதத் துவங்கினால் 100 லட்சம் பக்கங்கள் காணாது;

இவர் இங்கே திருமணம் செய்து,இவருக்கு மூன்று மகன் மற்றும் ஒரு மகள் பிறந்தனர்;இவரது வழித்தோன்றல்கள் இன்றும் இவரது ஜீவசமாதிக்குப் பூஜை செய்து வருகின்றனர்;

மங்கள மகாகாளியம்மன் என்று அழைக்கப்படும் ஆதிவராகியின் உபாசகராக வாழ்ந்து வந்த இவரை தொடர்ந்து வழிபட்டால்,அன்னை ஆதி வராகி(அரசாலை)யின் அருள் நமக்குக் கிட்டும்;

ஒவ்வொரு பவுர்ணமியன்றும் இங்கே தங்கி நள்ளிரவு பூஜையில் கலந்து கொள்ளலாம்;தொடர்ந்து 6 பவுர்ணமிகள் கலந்து கொண்டால் நமது நீண்டகால மாந்திரீகச் சிக்கல்கள்,கண்திருஷ்டி தீர்ந்துவிடும்;

தொடர்ந்து 3 பௌர்ணமிக்கு இங்கே வந்து பவுர்ணமி பூஜையில் கலந்து கொண்டால்,அன்னையின் அருளுக்குரிய சரியான குரு நமக்குக் கிட்டுவார்;

இவரை இப்பகுதியில் வாத்தியார் அய்யா என்று அன்போடும்,பாசத்தோடும் அழைக்கின்றனர்;


படத்தில் இருக்கும் இந்தப் படத்தை நமது செல்போன் வால்பேப்பராக வைத்துக் கொள்வோமே!


திறமைக்கு அங்கீகாரமும்,உழைப்புக்கு ஏற்ற மரியாதையும் தரும் அன்னை ஆதிவராகி வழிபாடு!


1960களுக்குப் பிறகு,தமிழ்நாட்டில் அறிவாளிகளுக்கும்,உழைப்பாளிகளுக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கிறதா? கிடைப்பது படிப்படியாக குறையத் துவங்கியது;

அப்படிக் கிடைத்திருந்தால்,அவருக்கு ஸ்ட்ராங்கான ரெக்கமண்டேஷன் அல்லது தனிப்பெரும் செல்வாக்கு இருந்தால் மட்டுமே கிடைக்கும்;

இன்றைக்கோ இன்னும் பலவிதமான லாபிகள் உருவாக்கி வைத்திருந்தால் மட்டுமே திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கிறது;உழைப்புக்கு ஏற்ற மரியாதையும் கிடைக்கிறது;

1990களில் குறுக்கு வழிகளில் பதவிக்கு வந்தார்கள்;

2000 களில் குறுக்கு வழிகளில் பதவிக்கு வந்தவர்கள்,தன்னைச் சுற்றிலும் அதே போன்ற அணியை உருவாக்கினார்கள்;

2010களில் இருந்து குறுக்கு வழிகளில் வருபவர்களை மட்டுமே அதிகாரத்தில் அமர வைத்தார்கள்;இதனால்,உழைப்பவர்கள் உரிய அங்கீகாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர்;

10 ஆண்டுகள் என்று இல்லை;20 ஆண்டுகள்,30 ஆண்டுகளாக உழைத்த உழைப்பிற்கு உரிய மரியாதை இல்லாமல் கடுமையான மன உளைச்சலில் வாழ்ந்து வருபவர்கள் மிக அதிகம்;

அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் குறைந்த பட்சம் ஒராண்டு வரை;அதிக பட்சம் மூன்று ஆண்டுகள் வரை தினமும் அன்னை ஆதிவராகி என்ற அரசாலை என்ற வாராகியை வழிபடவேண்டும்;

வழிபட ஆரம்பித்த மூன்றாம் நாளில் இருந்தே அன்னை ஆதி வராகியின் சூட்சுமப் பாதுகாப்பு கிட்ட ஆரம்பிக்கும்;90 நாட்களுக்குப் பிறகு,அடுத்துக் கெடுப்பவர்கள் விலகிச் செல்ல ஆரம்பிப்பார்கள்;180 ஆம் நாளில் இருந்து இதுவரை இருந்து வந்த துரோகச் சுவர்கள் தகர்ந்துவிடும்;300 ஆம் நாளில் இருந்து உழைப்புக்கும்,திறமைக்கும் உரிய அங்கீகாரம் கிட்டும்;


நீங்கள் செய்ய வேண்டியது இரண்டே இரண்டு கட்டுப்பாடுகள் தான்;
1.அசைவம் சாப்பிடக் கூடாது;
2.இந்த அன்னை ஆதிவராகி என்ற அரசாலை வழிபாட்டை பரமரகசியமாக தினமும் பின்பற்ற வேண்டும்;(அலுவலகத்தில் அங்கீகாரம் கிடைக்க விரும்புவோர் அலுவலகத்தில் இது தொடர்பான எந்த ஒரு விவாதமும் வைத்துக் கொள்ளக் கூடாது;வீட்டில்/குடும்பத்தில் அங்கீகாரம் கிடைக்க விரும்புவோர் வீட்டில் ரகசியம் காத்து வழிபடவேண்டும்)

இந்த இரண்டு விதிமுறையையும் பின்பற்றிக் கொண்டு, அன்னை ஆதி வராகியின் 12 பெயர்களை தினமும் காலையில் 15 நிமிடமும்,இரவில் 15 நிமிடமும் ஜபிக்க வேண்டும்;

ஒரு மாதம் ஆன பின்னர்,காலையில் 30 நிமிடமும்,இரவில் 30 நிமிடமும் தினமும் ஜபிக்க வேண்டும்;

மூன்றாம் மாதம் துவங்குவதற்கு முன்பு எம்மை ஒரு முறை நேரில் சந்திப்பது அவசியம்;


காலையில் 6 மணிக்குள்ளும்,மாலை 6 மணிக்குப் பிறகு இரவு 11 மணிக்குள் வரும் நேரத்தில் ஜபிப்பது நன்று;


அரசாலையின் அருளைப் பெற்றுத்தரும் வராகி சித்தரின் பெயருடன்(பெயரைச் சேர்த்தால் 13 பெயர்கள்!!!)


ஓம் ரீங் வாத்தியாரைய்யா வாத்தியாரைய்யா
பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரீ
சமய சங்கேதா
வராகி
போத்ரிணீ
சிவை
வார்த்தாளி
மகாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரி
அரிக்நீ


இவைகள் தான் அந்த 12 பெயர்கள்!




ஆன்மீக லட்சியம்

வெறும் ஐந்து ஆண்டுகள் மக்களின் வாக்கின் மூலமாக ஒரு ஊரை நிர்வாகிக்கும் பொறுப்பு(பதவி அல்ல;) நம்மில் வெகு சிலருக்கு வந்து சேருகின்றது;

8,00,00,000 தமிழர்களை 235 பேர்கள் நிர்வாகிக்கின்றனர்;அதுவும் அவர்களின் ஆயுள் முழுக்க அல்ல;வெறும் ஐந்து ஆண்டுகள்! இந்த ஐந்து ஆண்டு அதிகாரத்திற்கே இப்படி பெருமைப்பட்டு,தன்னை முன்னிலைப்படுத்துகின்றனர் வெற்றி பெற்றவர்கள்!

எத்தனையோ பிறவிகளாக சேமித்த புண்ணியத்தால்,இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் பிறந்திருக்கின்றோம்;அடுத்த பிறவி இன்னும் உயர்வாக அமைய வேண்டுமா? அல்லது இனி இந்த பூமியில் பிறக்காமலேயே இருக்க வேண்டுமா?

பின்வரும் காரியங்களை உங்கள் வாழ்நாளில் செய்து முடித்துவிடுங்கள்;உங்களின் ஆன்மீக லட்சியம் அல்லது ஆன்மீக நோக்கங்கள் நிறைவேறும்;

சுய கட்டுப்பாட்டு விதி எண் 1.அசைவம்,மது இவைகளைத் தவிர்த்துவிட்டு இவைகளைச் செய்தால் மட்டுமே நிறைவேறும்;

சுய கட்டுப்பாட்டு விதி எண் 2:உங்களுக்கு உபதேசம் செய்பவரைத் தவிர வேறு எவரிடமும் இது தொடர்பாக கலந்து ஆலோசனை செய்ய வேண்டாம்;அப்படிச் செய்தால்,குழப்பமே மிஞ்சும்;

பத்து ஆண்டுகளில் 1000 முறை அண்ணாமலை கிரிவலம் சென்று வரவும்;இதைச் செய்ய முடியாதவர்கள் திருவாதிரை நட்சத்திரம் வரும் இரவில் கிரிவலம் செல்லவும்;அப்படி 108 திருவாதிரை நட்சத்திர நாட்களில் அண்ணாமலை கிரிவலம் செல்வது அவசியம்;

உங்கள் பிறந்த ஜாதகப்படி,உங்களுக்கு என்றே இருக்கும் ஒரு கோவிலுக்கு ஒரு வருடத்தின் குறிப்பிட்ட நாளில் சென்று அபிஷேகம் செய்யவும்;

ஒரு தமிழ் வருடத்திற்குள்(சித்திரை 1 முதல் பங்குனி 30க்குள்) அட்டவீரட்டத் திருத்தலங்களுக்கு ஒரு முறை பயணித்து வரவும்;

ஒரு பசுவை உங்கள் ஜாதகப்படி அமைந்திருக்கும் ஆலயத்திற்கு தானமாகத் தரவும்;

3,00,000 முறை அஷ்ட கணபதி மந்திரம் ஜபித்து மந்திர ஸித்தி அடையவும்;

குறைந்தது 1000 நாட்கள் அதிகபட்சமாக 3000 நாட்கள் தினமும் காலையில் 30 நிமிடமும்,இரவில் 30 நிமிடமும் ஆதிவராகி வழிபாடு+மந்திரஜபம்+தானம்+அர்ப்பணம்(தர்ப்பணம் அல்ல) செய்து வரவும்;

மாதம் ஒரு நாள் உள்ளூரில் இருக்கும் சிவாலயத்தின் வாசலில் அன்னதானம் அல்லது அதற்கு இணையான தானம் செய்யவும்;

மாதம் ஒரு நாள் குலதெய்வ வழிபாடு செய்யவும்;

உங்களுடைய ஜனன நட்சத்திர சித்தரை தரிசிக்க முயற்சிக்கவும்;

இவைகள் அனைத்தையும் உங்களுடைய 15 வது வயதில் இருந்து 65 வது வயதிற்குள் பூர்த்தி செய்யவேண்டும்;


மற்றவை தங்களை நேரில் சந்திக்கும் போது. . . கை.வீரமுனி. . .ஸ்ரீவில்லிபுத்தூர். 9092116990

நாமும் நமது ஊரில் இயற்கை உணவுக்கான ஆர்கானிக் கடையை ஆரம்பிக்க இவர்களை நாடுவோமா?

சமைக்காத உணவு சாப்பிட்டு வந்த நமது முன்னோர்கள் பல ஆண்டுகளாக ஆரோக்கியமாக (நோய்கள் இன்றி) வாழ்ந்து வந்துள்ளனர்;

இதை இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப மாற்றியமைத்து மருத்துவமுறையாக மாற்றியுள்ளனர் நமது முன்னோர்கள்;அதுதான் இயற்கை மருத்துவம்;

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் இயற்கை மருத்துவர்கள் உருவாகி வருகின்றனர்;

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தலைமைத் தபால் நிலையம் அருகில் அமைந்திருப்பது தாய் வழி இயற்கை மருத்துவக் கடை ஒன்று திரு.மாறன் ஜி அவர்கள் தலைமையில் கடந்த 17 ஆண்டுகளாக இயங்கிவருகின்றது;

சிவகாசியில் இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்ச்சியை உருவாக்குவதோடு,இயற்கை உணவுகளை தினமும் விற்பனை செய்தும் வருகின்றனர்;

தவிர,இயற்கை விவசாயத்தை தமிழ்நாட்டில் உருவாக்கி பரப்பிய திரு.கோ.நம்மாழ்வார் அவர்களின் வழிகாட்டுதலால் இவர்கள் சிற்பி வாழ்வியல் மையம் என்ற அமைப்பை நடத்தி வருகின்றனர்;

இந்த சிற்பி வாழ்வியல் மையமானது இயற்கை உணவுகளை எப்படித் தயாரிப்பது? எப்படி ஒரு ஊரில் இயற்கை உணவுகளை வர்த்தக ரீதியில் தயாரிப்பது,விழிப்புணர்ச்சியை உருவாக்குவது,சந்தைப்படுத்துவது,விற்பனை செய்வது என்பதைப் பற்றி பயிற்சி முகாம்கள் மூலமும்,நேரடி உதவி மூலமாகவும் பயிற்றுவித்து வருகின்றனர்;

நாமும் நமது ஊரில் இயற்கை உணவுக்கான ஆர்கானிக் கடையை ஆரம்பிக்க இவர்களை நாடுவோமா?

சர்க்கரை நோய்,மூட்டுவலி,முதுகு வலி,ஆஸ்த்மா,புற்று நோய் என்று எந்த நோயாக இருந்தாலும் இயற்கை உணவுகள் மூலமாக முழுமையாக குணப்படுத்த முடியும்;
ஒருமுறை நேரடியாகச் சென்று(முன் அனுமதி பெற்றுத்தான்) மருத்துவ ஆலோசனை பெறவும்;

திரு.மாறன் ஜி அவர்களின் செல் எண் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும்;


பாரம்பரியம் காப்போம்;ஆரோக்கியமாக வாழ்வோம்;

ஜோதிட நினைவூட்டல் எச்சரிக்கை!


26.2.16 அன்று விருச்சிகராசிக்குள் பெயர்ச்சியான செவ்வாய்,இம்முறை வக்கிரமடைவதால் 19.9.16 வரை அங்கேயே இருக்கப் போகிறார்;ஏற்கனவே,அதே விருச்சிகராசியில் சனிபகவான் இருப்பதாலும் இருவரும் ஒரே ராசியில் 19.9.16 வரை சஞ்சாரித்து வருவதாலும்,12 ராசிக்காரர்களும் இந்த 6 மாதத்தில் மன நிம்மதியிழக்கும் சூழ்நிலை உருவாகியிருக்கின்றது;
இந்த ஜோதிட அமைப்பினால் நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒருவிதத்தில் பாதிப்பிற்குள்ளாகிக் கொண்டிருக்கின்றோம்;


தினமும் 30 நிமிடம்(காலையிலும்,இரவிலும்) ஏதாவது ஒரு கடவுளின் பெயரை ஜபித்து வருவதால் இந்த யுத்தக் கிரகங்களின் பாதிப்பு நம்மை நெருங்காது;


தினமும் குலதெய்வம் கோவிலுக்குச் சென்று வருபவர்களுக்கு 26.2.16 முதல் 19.9.16 வரை மன உறுதியோடு இருப்பார்கள்;


தினமும் அருகில் இருக்கும் சிவாலயத்திற்குச் செல்பவர்கள்,ஈசனின் அருட்பார்வையால் இந்த யுத்தக் கிரகப் பாதிப்பிலிருந்து தப்பிவிடுவர்;


தினமும் அன்னதானம் செய்பவர்கள் எப்போதும் நிம்மதியான மனநிலையில் வாழ்ந்து வருவர்;

தினமும் அண்ணாமலை கிரிவலம் செல்பவர்கள் இந்த கிரகச்சேர்க்கையால் பாதிக்கப்படமாட்டார்கள்;

தினமும் மனவளக்கலை மன்றதியானம் அல்லது ஏதாவது ஒரு தியானம் செய்பவர்களுக்கு இந்த பாதிப்பு வராது;

தினமும் பசுவுக்கு அகத்திக்கீரை அல்லது வாழைப்பழம் தானம் செய்பவர்கள் யுத்தக்கிரகப் பாதிப்பிலிருந்து விலகி வாழ்வார்கள்;

தினமும் அன்னை அரசாலை(ஆதிவராகி)யின் 12 பெயர்களை காலையில் 30 நிமிடமும்,இரவில் 30 நிமிடமும் ஜபித்து வருபவர்கள் வளமான வாழ்க்கையையும்,நிம்மதியான நாட்களையும் அனுபவிப்பார்கள்;


அரசாலையின் அருளைப் பெற்றுத்தரும் வராகி சித்தரின் பெயருடன்(பெயரைச் சேர்த்தால் 13 பெயர்கள்!!!)


ஓம் ரீங் வாத்தியாரைய்யா வாத்தியாரைய்யா

பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரீ
சமயசங்கேதா
வராகி
போத்ரிணி
சிவை
வார்த்தாளி
மஹாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரி
அரிக்னி

இவைகள் தான் அந்த 12 பெயர்கள்;இவைகளை தினமும் ஜபிப்பதன் மூலமாக ஆதிவராகி என்ற மங்கள மகாகாளியின் அருளைப் பெறுவர்;

19.9.16 வரை அனைத்து ராசிக்காரர்களும் ஒருமுறைக்கு இருமுறை எதையும் யோசித்து செய்யவும்;

ஓம் வராகி சிவசக்தி ஓம்