Thursday, April 4, 2019

பேய்,பிசாசு பற்றிய உண்மைகளும்,அது பற்றிய திரைப்படங்களும்



உங்களைச் சுற்றிலுமே மிகப்பெரிய சூட்சும உலகம் எப்போதும் இயங்கி வருகின்றது;நீங்கள் தான் அதை உணருவதில்லை;அது பற்றிய முழு உண்மைகள் நமது இந்து தர்மத்தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்கள்,ரிஷிகள்,துறவிகள்,யோகிகளால் கண்டுபிடிக்கப்பட்டன;புத்த மதம்,ஜைன மதம் மூலமாக கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதும் பரவியிருக்கின்றது;

முன்பு,1990 வரையிலும் 40 வாட்ஸ்,60 வாட்ஸ் குண்டு பல்புகளைப் பயன்படுத்தி வந்தோம்;அப்போது,நாடு முழுவதும் பேய்,பிசாசுகளின் தொல்லை வீட்டிலேயே இருந்திருக்கின்றது;சிறு தெய்வங்களான குல தெய்வம்,வீட்டு தெய்வம் போன்றவை வீடுகளுக்கு நேரடியாக வருகை தந்து,தமது வம்சாவழியினருக்கு வரங்களைக் கொடுத்திருக்கின்றன;

பாதரசத்தைக் கொண்டு எரியும் விளக்குகள் பரவலான பிறகு,பேய்,பிசாசுகள் தொல்லைகள் அறவே நின்றுவிட்டன;சிறு தெய்வங்களும் வருகை தருவது நின்றுவிட்டன;பாதரசம் என்பதை சித்த வைத்தியத்தில் சிவனின் விந்து என்றே குறிப்பிடப்படுகின்றது;அது இருக்கும் இடத்தில் எதிர்மறை சக்திகள் வர முடியாது;


மாநகரங்களில் வாடகை வீடுகளில் யாராவது தற்கொலை செய்தால்,அதை எவருக்கும் சொல்லாமல் இன்னொருவருக்கு வாடகைக்கு விடுவது சகஜம்;(லாட்ஜ்களிலும் சில அறைகளில் தற்கொலை அல்லது கொலை செய்வது வழக்கமாக இருக்கின்றது;இங்கேயும்)  புதியதாக வாடகைக்கு வருபவர்களில் பலவீனமான ஜாதகர் அல்லது ஜோதிடப்படி,கோட்சார ராகு,ஒருவரது ராசியைக் கடந்தால்,அவர்களை தற்கொலை செய்த ஆத்மா பிடித்துக்கொள்கின்றது;எப்போதும்,ஆணை பெண் ஆவியும்,பெண்ணை ஆண் ஆவியும் மட்டுமே பிடிக்கும்;
ஒருவரை ஒன்றுக்கும் மேற்பட்ட ஆவிகள் எப்போதும் பிடிக்காது;(ராகவா லாரன்ஸ் படத்தில் காட்சி அமைத்தது டூப்)


ஆவி பிடித்தவர்களை அந்த ஆவி தற்கொலை செய்ய தூண்டும்;நிறைய்ய சாப்பிட வைக்கும்;நிறைய்ய உணவு பானங்களை அருந்த வைக்கும்;பூர்வ ஜன்ம புண்ணியமோ அல்லது தகுந்த சொந்தங்களோ இருந்தால் மட்டுமே ஆவியை விரட்டிட முடியும்;இல்லாவிட்டால்,ஆவியால் பிடிக்கப்பட்டவர்களின் நிலை பரிதாபம் தான்;சிலருக்கு, அருள்வாக்கு சொல்வதும் நடக்கும்;(நேரடி அனுபவங்கள் மற்றும் ஆராய்ச்சி முடிவுகள் மூலமாக அறிந்தவை)


எங்கள் ஊருக்கு அருகில் தேசிய நெடுஞ்சாலையில் டூரிஸ்ட் பாலம் என்று ஒன்று இருக்கின்றது;1976 வாக்கில் அங்கே முதன் முதலில் ஒரு டூரிஸ்ட் பஸ் விபத்திற்கு உள்ளானது;அப்போது முதல் இன்று 2019 வரை அந்த இடத்தை பல லட்சம் வாகனங்கள் கடந்து சென்று இருக்கின்றன;டூரிஸ்ட் வாகனம் செல்லும் போது மட்டுமே அங்கு இப்போது வரை விபத்துக்கள் உருவாகின்றன;

சாலைகளின் வளைவுகளில் அந்திமாலைப் பொழுதுகளில் (மாலை 6 முதல் 7 க்குள்) டூவீலரில் பயணிப்பவர்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாவது வழக்கம்;காவல் தெய்வங்களான முனீஸ்வரன்,கருப்பசாமி,இருளாயி,இசக்கி மற்றும் பல்வேறு சிறு தெய்வ சக்திகள் அந்த இடத்தை கடந்து செல்லும் போது,யார் டூவீலரில் செல்கின்றார்களோ அவர்களை தூக்கி எறிவது வழக்கம்;(நேரடி ஆதாரங்கள் தமிழ்நாட்டில் மட்டும் அல்ல;உலகம் முழுவதுமே இருக்கின்றன;ஆவிகள் உலகம் என்ற மாத இதழை வாங்கி படியுங்கள்)


எப்போது மெக்காலே கல்வித்திட்டமும்,ஆங்கில வழிப் பள்ளிகளும் பரவலானதோ அப்போதே இந்த மாதிரியான விஷயங்களை யாரும் நம்புவதில்லை;தனக்கு பேய் பிடிக்கும் வரை;

இரவு 10 மணிக்குப் பிறகு,சுடுகாட்டுப் பாதை வழியாக தனி மனிதனாக பயணிப்பது தவறு;அதே போல,சுடுகாடு,முனியாண்டி கோவில்,ஆக்ரோஷமான பெண் தெய்வங்கள் கிராமப்பகுதிகளில் நிறைய இருக்கின்றன;இந்த ஆலயங்களின் அருகில் ரொமான்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபாடாமல் இருப்பது அவசியம்;இல்லாவிட்டால்,திடீர் மனக் கோளாறு,திடீர் மரணம் வர வாய்ப்புகள் உண்டு; இந்த திடீர் மனக் கோளாறினை நீக்கிட போதுமான மந்திரீகம் தெரிந்தவர்கள் இப்போது இல்லை;பெருமளவு குறைந்துவிட்டார்கள்!!!

தூங்கும் போதோ,சுடுகாட்டின் வழியாக வரும் போதோ,பேய் வீட்டினை கடக்கும் போதோ ஏதாவது ஒரு மந்திரத்தை ஜபித்துக் கொண்டு வருவது பாதுகாப்பு தரும்;அல்லது வாய்விட்டுப் பாடிக் கொண்டும் வரலாம்; கந்த சஷ்டிக்கவசம்,வராகி மாலை போன்றவைகளில் ஏதாவது ஒன்றை மட்டும் ஜபிக்கலாம்;அல்லது எந்த ஒரு கடவுளின் பெயரையும் சொன்னாலோ அல்லது ஜபித்தாலோ கூட உடனே தீய சக்தியின் தாக்கம் அப்போது நெருங்காது;

ஐரா என்ற திரைப்படத்தை கிறிஸ்தவ நடிகை நயன்தாரா  நடித்திருக்கின்றார்;அதில்,ராசியே இல்லாத கிராமத்துப் பெண் வேடத்தில் நடித்திருக்கின்றார்;
சிலருக்கு எல்லாவிதமான சுகபோகங்களையும் அள்ளித் தரும் கடவுள்,சிலருக்கு எல்லாவிதமான சோகங்களை மட்டும் தருவதற்குக் காரணம் என்ன? அப்போது மட்டும் கடவுள் தூங்கிட்டாரா? என்று 2 வது நயன்தாரா நினைப்பது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கின்றது;
 கடவுள் கணக்கு எப்போதும் தப்பாது;கச்சிதமாக இருக்கும்; இப்பிறவியில் பிறந்தது முதல் வாழ்நாள் முழுவதும் எல்லோரும் வெறுப்பதாக இருந்தால், அதற்கும் அவரது முற்பிறவி கர்மவினைகளே காரணமாக இருக்கும்;

மானுட வாழ்க்கை வாழும் போது,சாந்தமாக வாழ்ந்து,தற்கொலை அல்லது கொலைசெய்யப்படுபவர்கள் ஆவியான பின்னர்,யாரையும் பழி வாங்குவது இல்லை;வாழும் போது அடாவடியாக வாழ்ந்து,திடீரென செயற்கையான முறையில் இறந்தால் அவர்கள் ஆவியான பின்னர்,மிகுந்த அடாவடிகள் செய்வது வழக்கம்;

நமது பாரத நாட்டில் மட்டும் அல்ல;கீழ்த்திசை நாடுகளான மலேஷியா,சிங்கப்பூர்,இந்தோனோஷியா,தாய்லாந்து,வியட்னாம் மற்றும் மேல்திசை நாடுகளான இங்கிலாந்து,ப்ரான்ஸ்,அமெரிக்கா,கனடா போன்ற நாடுகளிலும் ஆவிகள் தொல்லை இன்று வரை தொடர்கின்றது;அந்த ஆவிகளுக்கு கதி மோட்சம் தரும் பூஜை,பரிகாரங்கள் நமது நாட்டில் மட்டுமே இருக்கின்றன;அதைச் செய்து அந்த ஆவிகளுக்கு விடுதலை தருவது மிகப் பெரிய புண்ணியம் ஆகும்;இது பற்றி நம்மில் ஒரு சிலர் மட்டுமே அறிந்துள்ளார்கள்;

பக்திரீதியாக நம்மையும்,நமது குடும்பத்தாரையும் ஆவிகள்,பேய்கள் தாக்காமல் இருக்க வழிமுறையை உங்களுக்கு  வழங்குகின்றோம்;

1008 நாட்கள் ஏதாவது ஒரு தெய்வத்தின் மந்திரத்தை தினமும்  ஒரு மணி நேரம் வரை ஜபித்து இருந்தீர்கள் என்றால்,அந்த தெய்வத்தின் அருள் பாதுகாப்பு உங்களுடன் எல்லா இடத்துக்கும் வரும்;

அல்லது

108 சதுர்த்திகளுக்கு விநாயகருக்கு அபிஷேகம் அல்லது மந்திர ஜபம் அல்லது இரண்டையும் செய்து இருந்தீர்கள் என்றால்,விநாயகரின் அருள் பாதுகாப்பில் இப்பிறவி முழுவதும் இருப்பீர்கள்;

அல்லது

108 பஞ்சமிகளுக்கு வராகி  அல்லது அங்காளபரமேஸ்வரிக்கு அபிஷேகம்,ஆராதனை அல்லது ஒரு மணி நேரம் வரை மந்திர ஜபம் செய்து இருந்தீர்கள் என்றால்,இப்பிறவி முழுவதும் அந்த உக்கிரப் பெண் தெய்வத்தின் அருள் பாதுகாப்பு உங்களுக்கு கிடைத்துக்கொண்டே இருக்கும்;

அல்லது

108 சஷ்டிகளுக்கு முருக கடவுளையும்

அல்லது 

108 அஷ்டமிகளுக்கு பைரவர் அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரையும்

அல்லது

108 திருவாதிரை நாட்களுக்கு முனீஸ்வரருக்கும்

அல்லது

108 தசமிகளுக்கு துர்கை அல்லது  உங்களுக்கு விருப்பமான உக்கிரமான அம்பாள் ஒரு தெய்வத்தையும்

அல்லது

108 ப்ரதோஷங்களுக்கு சரபேஸ்வரரையும்

அல்லது


108 அமாவாசைகளுக்கு சிவலிங்கம் ஒன்றையும் இவ்வாறு மந்திர ஜபம் , பூஜை செய்து அருளைப் பெறலாம்;


ஒவ்வொரு திதிக்கும் ஒரு திதி நித்யா தேவிகள் இருக்கின்றார்கள்;நீங்கள் பிறந்த திதிக்கு உரிய திதி நித்யா தேவியை அறிந்து,அந்த அன்னையின் அருளைப் பெறும் முறைகளை அறிந்து 108 திதிகளுக்கு விரதம் +பூஜை+மந்திர ஜபம்+அன்னதானம் செய்தால்,அவளின் அருளைப் பெறலாம்;வேண்டியது ஸ்ரீவித்யா உபாசனை செய்பவர்களில் உண்மையானவர்களை அடையாளம் கண்டு அவர்களோடு நட்பினைப் பெற்றிருக்க வேண்டும்;

முயன்று பாருங்கள்;வளமோடு வாழுங்கள்!!!

ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ

No comments:

Post a Comment