Thursday, July 13, 2017

மஹாகால பைரவப் பெருமானின் சாபம் உருவாகும் விதமும்;தீர்க்கும் வழிமுறைகளும்


உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் அனைத்தையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் மஹாகால பைரவப் பெருமான்;பரமேஸ்வரனின் ஆணைப்படி,அவரது பிரதிநிதியாக காலதேவனாக பரிபாலனம் செய்துவருகின்றார்;

நவக்கிரகங்களில் சனிக்கிரகம் தான் நம் ஒவ்வொருவருடைய ஆயுள் மற்றும் தொழிலை நிர்வாகித்துவருகின்றார்;இவருக்கு நவக்கிரகப் பதவி கொடுத்தவர் மஹாகால பைரவப் பெருமான்!
எனவே,யார் தொடர்ந்து மஹாகால பைரவப் பெருமானை துதிக்கின்றார்களோ,அவர்களுக்கு சனியின் தாக்கம் இராது;

குறிப்பாக,ஏழரைச்சனி,கண்டச்சனி,அர்த்தாஷ்டமச்சனி,அஷ்டமசனி நடப்பில் இருப்பவர்கள் அசைவம்,மது இரண்டையும் தவிர்த்துவிட்டு தினமும் 108 முறை அல்லது 1008 முறை ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்று ஜபித்து வரவேண்டும் அல்லது எழுதி வரவேண்டும்;


ஒரு நாளுக்கு 10,008 முறை ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்று ஒருவருடம் எழுதி வந்தாலே மஹாகால பைரவப்பெருமானின் அருள் கிட்டிவிடும்;


ஒவ்வொரு ஆலயத்திலும் வடகிழக்கு மூலையில் க்ஷேத்திரபாலராக இருந்து கோவிலை பாதுகாத்துவருபவரும் இவரே!நவக்கிரகங்களின் தலைவரும் இவரே;வாஸ்துவின் தலைவரும் இவரே!


ஒவ்வொரு சிவாலயத்திலும்,குலதெய்வக்கோவில்களிலும் மஹாகால பைரவப் பெருமான் இருக்கின்றார்;சில குலதெய்வக்கோவில்களில் வீரபத்திரர் இருக்கின்றார்;


அதே போல,ஒவ்வொரு மஹாவிஷ்ணு ஆலயங்களிலும் க்ஷேத்திரபாலராக இருந்தவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர்! சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்த சுவாமிக்குப் பதிலாக சக்கரத்தாழ்வாரை அறிமுகப்படுத்திவிட்டார்கள்;
கோவில்களை முறையாக பராமரிக்காமல் விட்டால் அது பைரவ சாபத்தை தந்துவிடும்;


கோவிலில் முறையாக நடைபெறும் பூஜைகளை தடுத்தாலோ,பூஜைக்குரிய ஆச்சாரியார்கள்,உதவியாளர்கள்,மணியம் போன்றவர்களை நியமிக்காமல் இருந்தாலோ அதுவும் பைரவ சாபத்தை தந்துவிடுகின்றது;இன்றைய காலகட்டத்தில் கோவில் ஈ ஓ க்களே இம்மாதிரியான வேலைகளை தமது அதிகாரத்தின் மூலமாக செய்வது தமிழ்நாட்டில் ஆங்காங்கே செய்துகொண்டிருக்கின்றார்கள்;அதனால் தான் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை முறையாக செயல்படுகின்றதா என்று சந்தேகப்பட வேண்டியிருக்கின்றது;


குலதெய்வம் கோவில்,பழமையான கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்யாமல் இருப்பதும்; இந்து ஆலயங்களை சர்ச் அல்லது மசூதியாக மாற்றுவதும் கடுமையான பைரவ சாபங்களை தருகின்றன;


கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் மிகவும் குறைந்த வாடகைக்கு இருந்து கொண்டு அந்த வாடகையையும் தராமல் இருப்பதால் அந்த கோவிலில் ஒரு கால பூஜை கூட நடக்காமல் இருக்கும் துர்ப்பாக்கியம் வந்தால் கடை வைப்பவர்களுக்கு 24 தலைமுறை பைரவ சாபம் துரத்தும்;


சில ஆலயங்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்களை குத்தகைக்கு வாங்கி,அதில் விளைச்சல் வரும் காலங்களில் முறையாக தரவேண்டிய விவசாயப் பொருட்களைத் தராமல் இருந்தாலும் பைரவ சாபம் ஏற்படுகின்றது;

கோவிலுக்குள்ளும் கோவில் எல்லையில் இருந்து 300 மீட்டர்கள் தொலைவில் கெட்டவார்த்தைகள் பேசினாலும்,ரொமான்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் பைரவ சாபம் ஏற்படும்;


சில பல பூசாரிகள் பூஜை செய்வதை வேலையாகவே நினைக்கின்றார்கள்;இதனால்,குளிக்காமல் பூஜை செய்பவர்களும் பெருகி வருகின்றார்கள்;சிலர் மதியம் அசைவம் சாப்பிட்டுவிட்டும் பூஜை செய்ய வருகின்றார்கள்;இவர்களெல்லாம் பரிகாரத்திற்கு உட்படாத பைரவ சாபங்களை பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள்;


இவைகளைச் செய்வதில் நாத்திகவாதிகளும்,தி.மு.க.வினரும் முன்னணியில் இருக்கின்றார்கள்;பக்தியாக இருந்த தமிழ்நாட்டை இலுமுனாட்டிகளின் கட்டளைப்படி சீரழித்துவிட்டார்கள்;இவர்களுக்கும் பைரவ சாபம் கடுமையாக இருக்கின்றது;


அறங்காவலர் குழுவில் இருந்து கொண்டு வழக்கமான வருடாந்திர பூஜை அல்லது சிறப்பு அபிஷேகம் ஆராதனைகளில் தேவையில்லாமல் தலையிட்டு அதை ஒழுங்காக நடைபெறவிடாமல் தடுப்பதன்(நாத்திகர்களும்,கம்யூனிஸ்ட்களும்,இந்து மதத்தில் இருந்து வேறு மதத்திற்கு மாறியவர்களும்) மூலமாக பைரவ சாபத்தைப் பெறுகின்றார்கள்;


கோவிலுக்குள் இருக்கும் கோசாலையை முறையாக பராமரிக்காமல் இருப்பதால்,கடந்த காலங்களில் சில ஆலயங்களில் கோசாபமும்,பைரவ சாபமும் சேர்ந்தே உருவாகி இருக்கின்றன;

கோவிலில் அன்னதானம் செய்யப் போகின்றோம்;கூழ் ஊற்றப் போகின்றோம்;புனரமைக்கப் போகின்றோம் என்று கூறி பணம் வசூல் செய்துவிட்டு அதைச் செய்யாமல் இருப்பதன் மூலமாகவும் பைரவ சாபம் உருவாகின்றது.

பைரவ சாபம் நிவர்த்தி ஆகிட பைரவ உபாசகர்களை சரணடைவதே வழி! அல்லது அண்ணாமலையில் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் கிரிவலம் வரவேண்டும்;கிரிவலப் பாதையில் தென்படும் பைரவர்களுக்கு உணவு கொடுத்துக் கொண்டே வரவேண்டும்;

ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் அருணாச்சலாய நமஹ

No comments:

Post a Comment