Thursday, April 23, 2015

நமது உடல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வைப் பெற


உலகத்திலேயே மிகப் பெரிய முட்டாள் கூட்டம் எங்கே இருக்கிறது தெரியுமா? நமது பாரத தேசத்தில் தான்; ஆமாம்! உலக ஜனத்தொகை 700 கோடி! இதில் பாரத ஜனத்தொகை 130 கோடி!! இந்த 130 கோடிப் பேர்களையும் 300 ஆண்டுகளாக முட்டாளாக்கிவிட்டு,ஒவ்வொரு நாளும் பல ஆயிரம் கோடி ரூபாய்களை பன்னாட்டு நிறுவனங்கள் சம்பாதித்துக் கொண்டே இருக்கின்றன;இந்த பன்னாட்டு நிறுவனங்கள் தோன்றிய நாட்டில் இருந்தே விரட்டப்பட்டாலும்,நம் நாட்டில் நமது நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு கொஞ்சம் கூட சத்துக்களே இல்லாத உணவுகளை டிவி விளம்பரங்கள் மூலமாக நமது நாட்டில் பிரபலப்படுத்துகின்றன;நாமும் நமது சம்பளத்தை இவைகளுக்குச் செலவிட்டு தினமும் அல்லது அடிக்கடி சாப்பிட்டு, நமது ஆரோக்கியத்தைக் கெடுக்கிறோம்;


எப்படியெல்லாம் நாம் முட்டாளாக்கப்பட்டோம்? என்பதை அறிய நாம் ஒவ்வொருவருமே ஹீலர் பாஸ்கர் ஐயா அவர்களின் அனாடமி தெரபி இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்;அவரது பேச்சுக்கள் அடங்கிய தொகுப்புகள் அவரது இணையதளத்தில் இலவசமாக கிடைக்கின்றன;அதில் உலக அரசியல் என்ற தலைப்பில் 6 மணி நேரம் பேசியதை நாம் பதிவிறக்கம் செய்ய வேண்டும்;பிறகு,அடுத்த 6 மாதங்களில் அதை குறைந்த பட்சம் 3 முறையாவது கேட்க வேண்டும்;


அதன் பிறகுதான் நாம் ஒவ்வொருவரும் எப்படியெல்லாம் முட்டாளாக்கப்படுகிறோம் என்பது புரியும்;ஹீலர் பாஸ்கர் ஐயா அந்த 6 மணி நேரப் பேச்சில் கூறியிருப்பது வரிக்கு வரி உண்மைதான்;
இதையே வடபாரதத்தில் ராஜீவ் தீக்ஷித் என்பவர் செய்து வந்தார்;அவரது இணையதளமும்,யூ ட்யூப் பேச்சுக்களும் இன்றும் இணையத்தில் இருக்கின்றன;


தமிழ்நாட்டில் மட்டும் அல்ல;இந்த பூமியில் எந்த மூலையில் வாழ்பவராக இருந்தாலும் பலர் காலை உணவு சாப்பிடுவதே இல்லை;இது உடல் ஆரோக்கியக் கட்டமைப்பைத் தகர்த்துவிடும்;40 வயதுக்கு மேல் கண்டிப்பாக பக்கவாதத்தில் கொண்டு போய்விடும்;

சாப்பிடும் போது ஒரு போதும் தண்ணீர்/மது பானம்/குளிர்பானம் அருந்தவே கூடாது;

சாப்பிட்டு முடித்த உடனேயும் தண்ணீர் அருந்தக் கூடாது;

சாப்பிடும் போது பேசக் கூடாது;

சாப்பிடும் போது டிவி பார்க்கக் கூடாது;சாப்பிடும் போது கணினி/செல்போன்/டேப்ளாய்டு இயக்கக்கூடாது;செல் போனில் பேசக் கூடாது.

நமது உடல் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வை முழுமையாக அறிய வேண்டுமா?

நமது உடலில் இருக்கும் எந்த நோயாக இருந்தாலும் அந்த நோய் ஆங்கில மருந்துகள் இன்றித் தீர வேண்டுமா?

நமது உடல் ஆரோக்கியம் உறுதிப்பட வேண்டுமா?

ஆம் எனில் அரவிந்த் ஹெர்ப் என்ற இணையதளத்திற்குச் செல்லவும்;அதில் கொடுக்கப்பட்டிருக்கும் எண்ணிற்கு போன் செய்யவும்.(+91 4563 233308)இயற்கை நல வாழ்வுப் பயிற்சி முகாம் அடுத்து எப்போது என்று கேட்கவும்;அதில் உங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளவும்;

இந்த இயற்கை நலவாழ்வு பயிற்சி முகாம் மாதம் தோறும் இரண்டு முறை நடைபெறுகிறது;

முதலாவது மூன்று நாட்கள் பயிற்சி முகாம்;

இரண்டாவது ஆறு நாட்கள் பயிற்சி முகாம்;

மூன்று நாட்கள் பயிற்சி முகாமில் முதல் நாளும் மூன்றாம் நாளும் பழச்சாறு மட்டுமே உணவாக வழங்கப்படுகிறது;இரண்டாம் நாளில் குடிநீர் மட்டுமே உணவாக அருந்த வேண்டும்;இரண்டாம் நாள் காலையில் இருந்து மூன்றாம் நாள் காலை வரை எவரிடமும் பேசக் கூடாது;தூங்க வேண்டும்;இதன் மூலமாக உடலுக்கும்,உடலுக்குள் இருக்கும் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் முழு ஓய்வு நாம் தருகிறோம்;இதனால் நோக்குரிய காரணிகள் அழியத் துவங்குகின்றன;

இந்த மூன்று நாட்கள் முகாம் நிறைவு செய்த சில மாதங்களுக்குப் பிறகு ஆறு நாட்கள் முகாமில் கலந்து கொள்ளலாம்;இதில் முதல் இரண்டு நாட்களும்,இறுதி இரண்டு நாட்களும் பழச்சாறு உணவாக வழங்கப்படுகிறது;மூன்றாம் நாள் காலையில் இருந்து ஐந்தாம் நாள் காலை வரை தண்ணீர் மட்டும் அருந்தி,பகலிலும் இரவிலும் தூங்க வேண்டும்;எவரிடமும் பேசக் கூடாது.

தவிர,தினசரி 30 நிமிடம் செய்யத்தக்க சிலபல யோகாசனங்களையும்,பிராண பயிற்சிகளையும் பயிற்றுவிக்கிறார்கள்;இந்த முகாம்களை நடத்தும் ஒருங்கிணைப்பாளரின் பெயர் திரு.பாலு அவர்கள்;யோகா மாஸ்டர் திரு.கணேசன் அவர்கள்;

இந்த முகாம்களுக்கு பதிவுக் கட்டணம்;பயிற்சிக்கட்டணம் என்று எதுவும் கிடையாது;முற்றிலும் இலவசம்;இந்த முகாம்கள் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மாநகரில் முடங்கியார் சாலையில் 4 வது கி.மீ.தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கையான சூழ்நிலையில் அரவிந்த் ஹெர்பல்ஸ் நிறுவனத்தாரால் முற்றிலும் சமுதாய நலனுக்காக கடந்த 20 ஆண்டுகளாக நடத்தப்பட்டுவருகிறது;

பயிற்சிக்குத் தேவையான சில சிறு உபகரணங்கள் வாங்கிட ரூ.300/-தேவைப்படும்;இந்த முகாமில் கலந்து கொள்ள வயதுத் தகுதி 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்;இந்த முகாமில் கலந்து கொண்டு முகாமை நிறைவு செய்தால் அவர்களின் எடை கண்டிப்பாக சில கிலோக்கள் குறைந்துவிடும்;


இந்த சம்மரை நமது குழந்தைகளோடு இந்த முகாம்களில் கொண்டாடினால் தான் என்ன? நமக்கும் சரி! நமது குழந்தைகளுக்கும் சரி! ஆரோக்கியம் சார்ந்த விழிப்புணர்வு கிடைக்குமே!!!

No comments:

Post a Comment